Monday, October 31, 2016

கைநாட்டு..

ஜெயலலிதா சுயநினைவோடு இருக்கிறார்.. என்னோடு நன்றாக பேசினார்.. டாக்டர் பாலாஜி.. இதைதான் சொல்வாரென்று எல்லோருக்கும் தெரியும்.. ஜெயலலிதா சுயநினைவோடு இல்லையென்று யாரும் இங்கே சொல்லவில்லை.. ஆனால் செயல்படமுடியாமல் இருக்கிறார் என்பதை டாக்டரின் உறுதிமொழி உணர்த்துகிறது.. இதுவரை வதந்தி பரப்பியதாக சொல்லப்பட்ட செய்தியெல்லாம் உண்மையோ என எண்ணவேண்டியிருக்கிறது.. செயல்படமுடியாமல் ஒரு முதல்வர் அவரை வைத்து பின்னிருந்து இயக்குகிறவர் யார்..? இதில் மத்திய அரசின் பங்கென்ன என்று தான் கேட்கவேண்டியிருக்கிறது.. முதல்வரால் பார்த்து பேச முடிகிறபோது ஏன் மற்றவர்களை ஆளுநர் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை.. எல்லா தலைவர்களும் இரண்டாவது மாடி வராண்டாவோடு திருப்பி அனுப்புவதேன்.. டாக்டர் சந்தித்தற்கான புகைப்படம் கூட வெளியிடவில்லையே. ஏன்.. .. முதவ்வர் படத்தை வைத்து ஓட்டுகேட்போம் என்கிறார்.. படத்தை வைத்து வாக்குகேட்கும் பழக்கம் முன்பே எம்ஜிஆருக்குண்டு அதிமுகவிற்கு அதையே செய்ய நினைக்கிற போதே இவர்களின் இயலாமை நமக்கு புரிகிறது.. இந்த ஆறுமாதகாலத்தில் எதையுமே செய்யாத ஒரு அரசாய் எந்தவித முன்னேற்றமும் தமிழகம் காணாமல்.. மிகவும் பின்தங்கியநிலைக்கு அரசு நிர்வாகத்தை கொண்டுசென்றுவிட்டு ஸ்டாலின் சொன்னதைப்போல படுக்கையில் கிடக்கிற ஆட்சி. அதிகாரத்தில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் செய்யலாம்.. எதையும் வாங்கிவிடலாம்.. பணத்தால் விலைபேசமுடியுமென்கிற திமிர் .. தம்பிதுரையின் பேச்சில் தெரிகிறது.. .. ஜெயலலிதாவை பொம்மையாக வைத்து வேறாரோ இயக்க/இயங்க நினைப்பதும் அதை செயல்படுத்த அரசு நிர்வாகம் துணைபோவதும்.. டாக்டர் பாலாஜி மொழிகளிலிருந்து நமக்கு புரியும்.. டான்சி வழக்கில் கையெழுத்தே இல்லையென்று உச்சநீதிமன்றத்தில் மறுமொழி நல்கிய ஜெயலலிதா நாளை நான் தூங்கும் போதோ அல்லது சுயநினைவின்றி இருந்தபோதோ எடுத்தது என சொல்லமாட்டார் என எப்படி நம்புவது.. ஏனெனில் நேர்வழி நேர்மை உண்மை இவையெல்லாம் ஜெயலலிதா அறியாதது மறைந்த மகோரா(எம்ஜிஆர்) உடல் முடியாமல் இருந்தபோது ராஜீவ்காந்தி கடிதமெழுதி தன்னை முதல்வராக்க வேண்டியவர்தான் இந்த ஜெயலலிதா.. .. இதில் மற்றொன்று உண்டு இதுவரை முதல்வரின் மருத்துவசெலவுகள் முறையாக அறிவிக்கப்படவில்லை.. ₹1000 கோடி செலவென சில ஊடகங்கள் சொல்கிறது.. திரு.மாறன் உடல்நலிவுற்று இருந்த போது இதே ஜெயலலிதா தான் யார் வரிப்பணத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றார்.. அப்போது கலாநிதி மாறன் தன் தந்தையின் மருத்துவசெலவை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.. இப்போது ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை மாறாக தனியாரிடம் உயர்தர சிகிச்சை பெறுகிறார்.. இவ்வளவு சீக்கிரம் தமக்கு வருமென எதிர்பார்த்திருக்கமாட்டார்.. .. இப்போது கூட திரு.ஸ்டாலின் ஜெயலலிதா உடல்நிலையை காட்டி அரசியல் செய்ய தேர்தல் பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை என்கிறார்.. இந்த நாகரீக அரசியல் திமுகவிற்கு மட்டுமே உண்டு.. அதிமுகவிற்கு மகோரா( எம்ஜிஆர்) காலத்திலிருந்தே இல்லை.. .. #திமுக_பண்பட்ட_ஜனநாயகஇயக்கம்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment