Thursday, October 6, 2016

கசடுகள்

சிலர் என்ன வேசம் கட்டினாலும் அவரகளின் சுயம் ஒருநாள் காட்டிகொடுத்துவிடும்.. ஜெயலலிதாவை ஆதரிப்பவர்களை நீங்கள் தொடர்ந்து நோக்கி வந்தால் அவர்களின் அசல் உங்களுக்கு பிடிகிட்டும்.. ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் ஜனநாயத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்களாக தங்களை காட்டிக்கொள்வார்கள் உண்மையில் ஜெயலலிதா என்னதான் காலில் போட்டு மிதித்தாலும் அவர்களுக்கு கசக்காது..காரணம் எல்லாவற்றிக்கும் இங்கே நிர்ணயம் உண்டு.. .. ஜெயலலிதா ஒரு அடிமையைவிட கேவலமாக நடத்தினாலும் தான் தோன்றித்தனமாக தூக்கியெறிந்து இவர்களை தோலுறித்து காட்டினாலும் வாய்மூடி இருப்பார்கள்.. காரணம் கேட்டால் ஜெயலலிதாவை விட்டால் கருணாநிதி வந்துவிடுவார் என்பார்கள்.. கருணாநிதி வரகூடாதென்பதல்ல இவர்கள் நோக்கம் மாறாக தங்களின் கூலி சரியாக கிடைக்கவேண்டுமென்பதே தவிர வேறொன்றுமில்லை.. .. சில தினங்களாக அப்போலோ இரண்டாவது தளம் வரை சிலர் விசிட் செய்கிறார்கள் ஜெயலலிதா மொழியில் #உதிரிகள்.. அவர்களுக்கு தெரியும் நிச்சயமாக ஜெயலலிதாவை காண அனுமதி கிடைக்காது.. கவர்னரே மருத்துவரை தலந்தாலேசித்துவிட்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டது .. ஜெயலலிதாவின் இரத்த சொந்தந்களே தெருவில் நிற்கவேண்டியிருக்கிறது... நம்மால் ஒரு சிறுஅடிகூட முன்னேறிசெல்ல முடியாது என்பதை அறிவர்.. பின் எதற்காக வருகை பதிவேட்டில் கையொப்பமிடவேண்டும் ஜெயலலிதா மீது அக்கறையா நிச்சயமாக இல்லை.. எப்போதாவது ஜெயலலிதாவின் அல்லது சசிகலாவின் பார்வை பட்டால் கொஞ்சம் பிழைத்துக்கொள்ளலாம் என்பதற்காகவே இந்த #உள்ளேன்_மிஸ்.. .. திருமா தா.பா வேல்முருகன்.. இன்னும் நிறையபேர்கள் வருவார்கள் .. மிகவும் அக்கறையுள்ளவர்கள் போல பேசி விளம்பரம் தேடிக்கொள்வார்கள்.. இவர்கள் வேசம் கட்டும் கூத்தாடிகளை விட மோசமானவர்கள்.. இவர்களிடம் தான் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.. பாசாங்கு செய்யும் கபடதாரிகள்.. .. #கசடுகள்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment