Thursday, October 13, 2016

ஊகங்கள்.. வதந்திகள்..கட்டுபாடுகள்

ஊகங்கள் வதந்திகள் கட்டுபாடுகள்.. .. முதவ்வரின் உடல்நிலை குறித்து எந்தவிதமான செய்திகளும் வெளிவரகூடாதென்று பொறுப்போடு செயல்படுகிறார்கள் ஊழியர்களின் செல்போன்கள் வரவேற்புஅறையிலேயே வாங்கிக்கொள்கிறார்கள்.. ஊழியர்கள் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுகிறதென செய்திகள் வெளிவருகிறது.. கருத்திடுவதில் உச்சநீதிமன்றத்தின் கருத்து பரிசீலிக்கப்படவேயில்லை.. தவறான கருத்தை சொன்னால் அவர்கள் மீது வழக்கு தொடரலாம் ஆனால் அதற்காக அவர்களின் உரிமைகளின் மீது மேலாண்மை செலுத்துவது சரியானதாக தெரியவில்லை.. எது வதந்தி என்பதை வரையறுக்கவில்லை.. பொய் தகவல்களை பரப்புவது வதந்தியில் வருமென்றால் ஊடகங்கள் அதில் பிரதான பங்கை வகிக்கின்றன.. .. முன்னுக்கு பின் தவறான தகவலைதான் தருகிறது.. ஊகங்களை நாங்கள் தருவதில்லை என பேசிவந்த தந்தியின் பாண்டே.. ஊகங்களை செய்தியாக்குகிறார்.. ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் 100 கோடி அபதாரதமும் நான்கு வருடசிறை என எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டபோது அதிகாரபூர்வ தகவல் வரும் வரை வெளியிட மறுத்து நாங்கள் எப்போதும் உண்மையான அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே வெளியிடுவோம் என்றார்.. ஆனால் அதே பாண்டே .. ஜெயலலிதா இரண்டொரு வார்த்தை பேசியதாக அப்போலோ வட்டாரம் சொல்கிறது என்றார்.. அப்போலோ அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாத போது வட்டாரம் சொல்லியதாக சொன்னார்.. இது ஊகமில்லையா.. அல்லது உண்மையாக இருப்பின் அதை அப்போலோ நிர்வாகம் வெளியிடவேண்டியது கடமையல்லவா.. .. கலைஞர் கருணாநிதி மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் எழும்பும் சந்தேகங்கள்.. பத்திரிக்கைகளில் வெளிவருகிறது இவையெல்லாம் கருத்திடலாகவோ அல்லது எதிர்கட்சியின் கசப்புணர்வில் வெளியிடப்பட்டதாக எண்ணிக்கொள்ளவேண்டியதுதானா.. ஒரு பெண்ணின் உடல்நிலை குறித்த விடயங்களை எழுதுவது சரியல்ல என்கிறார்கள் பெண் என்றில்லை ஆணாக இருந்தாலும் அவரின் தனிப்பட்ட விசயங்களை எழுதுவது முறையல்ல. ஆனால் இங்கே தமிழகத்தின் தலைமை அமைச்சர்.. உடல்நலமில்லாமல் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டவர் நீண்டநாட்களாக மருத்துவமனையில் தங்கியிருக்கிறார் .. அது குறித்து அரசு விளக்கமளித்திருக்கவேண்டாமா.. எல்லா ஊகங்களும் மறைந்துபோயிருக்காதா.. .. இந்துவில் பணியாற்றிவிட்டு பிறகு ஏசியாநெட் தொலைகாட்சியில் தலைமை செய்தியாளராக பணிபுரிந்த திரு.மோகன் நாளிதழ்களைபோல அல்ல தொலைகாட்சி மற்றும் சமூகவலைதளங்கள்.. எந்த செய்தியாக இருந்தாலும் அதை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் சரி.. அந்த செய்தி தவறானதாக இருப்பினும் அது தவறென்கிறபட்சத்தில் விளக்கத்தை சம்பந்தபட்டவர்கள் தந்தால் அதையும் வெளியிடவேண்டும் என்றார் ... .. தமிழச்சி போன்ற சிலர் சமூகவலைதளத்தை தவறாக கையாள்கிறார்கள் ..சாதாரணமாக ஒருவரின் மரணசெய்தி கிடைத்தால் கூட அதை உறுதி செய்துவிட்டுதான் வெளியிட வேண்டுமென்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் செயல்படுவது கண்டிக்கதக்கது இவர் போன்றவர்கள் தவறை உணர்ந்து மறுப்பை வெளியிட்டிருக்கவேண்டும்.. இவர்போன்றவர்களை புறக்கணித்தாலோ அல்லது கண்டுக்கொள்ளாமல் போனாலே போதும்.. .. கருத்திடுவது விமர்சிப்பது என்பதெல்லாம் நாகரீகமாகவும் நேர்மையுடனும்..இருக்கவேண்டும்.. அதேபோல் முக்கிய பிரமுகரைப்பற்றிய ஊகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அரசுதரப்பு தெளிவான விளக்கத்தை தரவேண்டும்.. வழக்கு கைது போன்ற நடவடிக்கைகளால் வதந்திகளை நிறுத்திவிட முடியாது.. முதல்வர் நலம் பெற்று விரைந்து பணிக்கு திரும்பவேண்டுமென்றே எல்லோரும் விரும்புகிறா்கள்.. நாமும்.. #விரைந்துநலம்பெறவிழைகிறோம்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment