Friday, October 28, 2016

கடனாளி..

₹85000 கோடி 57 பேருக்கு... சில ஆயிரங்கள் கடன் வாங்கி விவசாயம் செய்து தண்ணீரின்றி மழையும் பொய்த்துப்போய் திருப்பிதர முடியாமல் கதியற்று நிற்கிறவனை கழுத்தில் தூண்டை போட்டு இழுத்துவர முடிகிறது. அவன் சொத்தை ஜப்தி என்றுநடவடிக்கை எடுக்க முடிகிறது.. கோடிக்கணக்கில் கடன்வாங்கி ராஜ வாழ்க்கை வாழ்கிறவனை ஒன்றும் செய்யமுடியவில்லை.... விசித்திர இந்தியா.. ஆம்.. இந்திய சட்டங்கள் நேர்மையானதாய் இல்லை திட்டம் போட்டு திருடினால் இங்கே பாராட்டி பட்டமளிப்பார்கள்... .. ஊழல் செய்து கொள்ளையடித்தவன் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைப்பெற்றாலும்.. ஆட்சியாளராக வரமுடியும்.. செம்பு திருடிவிட்டு சிறைக்கு போனால் ஓட்டளிக்ககூட அவகாசமில்லை.. ஆனால் சிறைச்சென்றவன் தேர்தலில் இரண்டு இடங்களில்போட்டியிடலாம்.. விசித்தர இந்தியா.. .. இந்தியாவின் பிரபலங்கள் மிக இலகுவாக கடன்வாங்க முடிகிறது சாமானியன் சரியான தேவைக்கு கூட கடன்வாங்க கையூட்டு கொடுக்கவேண்டியிருக்கிறது.. சில சமயம் திருப்பி தர காலதாமதமானால் மிரட்டபடுவதும் குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்துவதும் கூட நடைபெறும். இங்கே தொழில் தொடங்க கூட நம்மால் சில லட்சங்கள் கூட பெற முடியாது.. ஆனால் கோடிகளில் பணம் பெற ஒன்றும் தேவையில்லை. சாமானியன் திருப்பிகட்டாமல் போனால் வங்கிகள் பெயரை விலாசத்தோடு பகிரங்கப்படுத்தும்.. பெருத்தவர்கள் பெயர்கள் வெளிவராது அதைதான் உச்சநீதிமன்ற கேள்வி கேட்கிறது.. .. வல்லவனுக்கு இங்கே தீது இல்லை.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment