Sunday, October 2, 2016
ஊடக ஊகம்..
ஊகங்களை நாம் பெரிதுபடுத்துவதில்லை..
சிலநேரம் உண்மையை விட ஊகங்கள் வெகுவிமர்ச்சையாக கொண்டாடபடுகிறது..
வெகுஜன ஊடகம் என அறியப்படுகிற நாளிதழ்களும் தொலைகாட்சிகளும் மௌனமாய் இருக்கிற போதும் சில வார இதழ்கள் மௌனம் கிழித்து சில விடயங்களை வேகமாக கொண்டுவந்துவிடும்..
மலையாள பத்திரிக்கையாளர் மோகனன்
முன்பு asianet ல் இருந்தபோது உடனுடக்குடன் செய்திகளை தருவது தர்மம் அது உண்மையாக இருக்க வேண்டுமா என்பதில் பெரிய காரியமில்லை செய்தி வந்தது சொல்கிறோம் தவறெனில் அதையும் சொல்வோம் என்றார்..
அது ஒருவகையில் சரி.. வதந்தியென எப்போது அறிவோம் அது உண்மையில்லை என்பதுவரை அதுவரை அதுவும் சேதிதான்.. வரும் சேதியில் உண்மையில்லை என உரக்க சொல்லவேண்டியது சம்பந்தப்பட்டவரின் கடமையும் கூட.
..
அதிமுக அமைச்சர்களை அப்போலோ அழைத்து கலந்தாலேசித்ததாகவும் இப்போது சசிகலா அதிமுக உறுப்பினர்களை சென்னைக்கு வரும் படி உத்தரவிட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.. உண்மையா அல்லது இதுவும் மறைந்து போகும் ஊகமா அறிவில்லை.. ஆனால் நமக்கு சிலவற்றை விளக்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு இருக்கிறது..
முதல்வரின் உடல்நிலை குறித்த முன்னுக்குபின் முரணான தகவல்கள் வரும் போதும் அவரை இதுவரை சந்தித்தாக சொல்லப்படுகிற.. பெரியமனிதர்கள்..? உடனான புகைப்படம் ஏன் வெளியிடவில்லை.. உடனே பெண் என்றெல்லாம் சொல்லாதீர்கள் ஜெயலலிதா முதல்முதலில் சட்டமன்றத்தில் நடத்திய #கையாங்களி... அடுத்தநாள் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டே புகைப்படம் வெளியிட்டிருந்தார்.. அப்போதும் பெண்தான் .. நிறைய ஆளுமையாளர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் ஊடகங்களில் வந்திருக்கிறது ..
நோயாளிகளை அவர்கள் புகைப்படம் வரகூடாது என எந்த தடையுமில்லை பின் ஏன் எந்த படங்களையும் தரவோ அல்லது அவர்கள் வெளியிடவோ கூடாது.. தங்களுக்குள் இரும்புதிரை அமைத்து அவர்கள் நடத்து கூத்து நிறைய சந்தேகங்களை Doubts விதைக்கும் / விதைக்கிறது..
..
கட்ஜூ போன்றவர்கள் பெண்கள் புகைப்படத்தை வெளியிட கோரகூடாது என்கிறார்.. நிறைய பெண்களின் புகைப்படங்கள் செய்திதாள்களில் வெளியாகியிருக்கிறது அப்போதெல்லாம் எவரும் கேள்விகேட்கவில்லை தவறென்றும் சொல்லவில்லை....
..
ஆனால் ஒன்று மட்டும் உண்மை #என்னமோநடக்குது_மர்மாயிருக்குது.
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment