Friday, October 7, 2016

அண்ணன் சொன்னது அர்த்தம் உள்ளது

முதல்வரின் உடல்நிலையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. எதிர்க்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின். .. அரசியல் நாகரீகம் என்பதை தாண்டி மனிதாபிமானமுள்ள கருத்தாக கொள்ளவேண்டும்.. இதோ தேசிய கட்சிகள் அரசியல் செய்ய தொடங்கிவிட்டன.. யாருமே அழைக்காமல் எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி வேவு பார்த்தார்கள் அதன் அறிக்கை மோடிக்கு சென்றிருக்கும்.. அதேபோல் ராகுல்காந்தி விசிட் மனிதாபிமானம் என்பதை தாண்டி அதன் உள்அரசியல் காங்கிரஸின் கலாச்சாரம் என்பதும் நாம் அறிவோம்.. .. ஜெயலலிதா அப்போலோவின் அனுமதிக்கப்பட்ட மறுதினமே அவர் உடல்நிலை குறித்த தகவல்கள் கலைஞருக்கு சென்றுவிட்டது அதனால்தான் சிலநாட்கள் அமைதிகாத்து பின் ஆளுநர் கையிலெடுக்கவேண்டுமென அறிக்கை தந்தார் .. அதன் பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவர் வந்து பார்த்து வேறுவழியே இல்லாமல் நீண்டநாட்கள் தங்கியிருக்கவேண்டுமென்ற அறிக்கையை அப்போலோ வெளியிட்டது.. அதுவரை நீர்சத்து குறைவென தொடர்ந்து சொல்லி வந்ததை நாம் அறிவோம்.. .. திமுகவின் இப்போதைய அமைதி மிகச்சரியான அரசியல்.. நாகரீகமான நேர்மையான நடவடிக்கை.. முதல்வரின் நிலை நன்கறிந்து அதை மறைக்கிறார்கள் என்றவுடன் வெளிகொணர்ந்ததோடு நாகரீகமாக ஒரு பார்வையாளராக இருப்பதும் தவறான போக்கு என தெரிந்தால் சுட்டிகாட்டி அதை வெளிகொணருவது என்பதே சரியான நடவடிக்கை.. இன்னும் நிறைய நாடகங்களை காண இருக்கிறோம்.. சகிக்கமுடியாத கேலிகூத்துக்கள் நடைபெறும்.. வைகோ, மோடி போன்றவர்களின் .. சிறந்த நடிப்பு அரங்கேறலாம்.. அதுவரை பொறுத்திருப்போம். தளபதி சொன்னதுதான் சரி அவரின் உடல்நிலையை காட்டி அரசியல் செய்யவிரும்பவில்லை.. .. #அண்ணன்சொன்னதில்_அர்த்தமுள்ளது.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment