Friday, October 7, 2016
சூரியனைச்சுற்றி..
இப்போதைய தேவை..
..
நீண்டநாட்களுக்கு பிறகு மௌனம் கலைத்தது அப்போலோ.. வேறுவழியில்லாமல் முழுநீள அறிக்கையை தாக்கல் செய்தது அதிலும் கவனமாக சிலவிடயங்களை தவிர்த்து வெளியிட்டது..
லண்டன் மருத்தவரை அழைத்து வந்து பரிசோதித்த போது கூட வெளியிடபடாத ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல்களை எய்ம்ஸ் மருத்துவர்களின் வருகைக்கு பிறகு வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது அப்போலோ..
..
நீண்டநாட்கள் என்பது அரசை நிர்வகிப்பவர் கவனிக்காமல் போனால் யார் நிர்வகிப்பதென்து என்கின்ற கேள்வி எழுவது இயல்பு அதனால்தான் கவர்னரும் தலைமை செயலரோடு கலந்தாலேசிக்கிறார் .. திடீரென காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் வந்து வழக்கம் போல் மருத்துவரை சந்தித்து நலம் விசாரிக்கிறார்.. அதை அங்கிருந்தே கேட்டிருக்கலாம்.. ஆனால் அதன் பின்னில் உள்ள அரசியல் சட்டென்று பிடிக்கிட்டாதது.. ஆளும் பாஜகவின் காய் நகர்த்தல்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிவிட்ட நிலையில் காங்கிரஸை தங்களின் #பழையநண்பர் திருநாவுகரசரைக்கொண்டு இனபாசத்தை காட்டி.. ஆதரவை பெற முயற்சிக்கும் #சூது சிறந்ததுதான்..
..
பாஜகவின் சு.சுவாமி தமிழகத்தில் நிலவும் அசாதாரணசூழலை கையிலெடுத்து அரசை ஏற்றெடுக்கவேண்டுமென கருத்திடுகிறார் கூடவே ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ஆறுமாதத்திற்கு கொண்டுவரவேண்டுமென்கிறார்.. தேசிய கட்சிகள் களி தொடங்கிவிட்டது.. சசியின் அனுமதியில்லாமல் ராகுல் சென்னை வர வாய்ப்பில்லை.. ஜெயலலிதாவோ கேட்கவோ சொல்லவோ முடியாமல் ஒருவித மயக்கத்தில் இருக்கிற நிலையில் தங்களை காத்துக்கொள்ள காங்கிரஸின் துணை தேவைப்படுகிறது..அதைதான் செய்திருக்கிறார்கள் ..
..
இவை யாவைவற்றையும் மௌனமாக வேடிக்கை பார்க்கிறது திமுக அதுதான் சிறந்ததும் கூட .. கலைஞரின் அறிக்கைக்கு பிறகுதான் கதவுகள் லேசாக திறக்கப்பட்டது.. கவர்னர் வந்தார்.. இதோ இப்போது ராகுல் வரை.. கலைஞரின் மௌனத்தில் பெரும் இரைச்சல் கேட்கும் அவையெல்லாம் அவரை சரிக்கும் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.. கடந்த 25 ந்தேதியே கலைஞருக்கு முதல்வரின் உடல்நிலை குறித்து முழுவிபரமும் தெரியும்..என்பதுதான் சுவாரஸ்யம்.. (அப்போலோவின் பிரதாப் ரெட்டி கலைஞரின் நண்பர்..)..
..
திமுக வின் செயல் சரியானதும் போற்றதக்கதும்..
வீணான வேலைகளிலோ அல்லது குழப்புவதிலோ கடக்காமல் அமைதியாக நமது கவனத்தை மட்டும் வைத்திருப்போம்..விடையை நாம் எழுதலாம்
அதுவரை தேசிய கட்சிகளின் பாசிச சக்திகள் ஆட்டத்தை காண்போம்..
..
#சூரியனைச்சுற்றிதானே_எல்லாம்அசையும்....
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment