Tuesday, October 4, 2016

நடுத்தெருவில்.. அவமானப்பட்டு

பிரதமரை சந்திக்க சென்ற அதிமுக எம்பிக்களை சந்திக்க மறுத்திருக்கிறார்.. முதலில் கடும் கண்டனங்களை பதிவு செய்வோம்.. அவர் மறுத்தது அதிமுக எம்பிகளையல்ல மாறாக அவர்களை தேர்தெடுந்து அனுப்பிய மக்களை அவமதித்திருக்கிறார்.. தன்னால் எதுவும் செய்திட முடியாது என நினைத்திருந்தால் கூட அவர்கள் சந்தித்து தன் இயலாமையை அல்லது தன்பக்கத்து நியாயத்தை சொல்லியிருக்கவேண்டும்.. மாறாக தமிழக அதிமுகவினரை காண மறுத்தது ஜனநாயக அயோக்கியத்தனம்.. Democratic Dishonesty.. .. முதலில் அதிமுகவினர் அரைவேக்காட்டுதனமான செயல்களிலேயே காலத்தை கழிக்கின்றனர்..எதையுமே எப்படி அணுகுவது என்பதை அறிந்திருக்கவில்லை.. பிரதமரை சந்திப்பதற்குமுன் அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி கலந்தாலோசித்து அதை தீர்மானமாக ... அனைத்துகட்சியை சேர்ந்தவர்களோடு தமிழக பாஜக உட்பட சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுமென அழுத்ததந்திருப்பார்களேயானால் பிரதமரும் சந்திக்க நேரம் ஒதுக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பார்.. அதிமுக மட்டும் தன்னிச்சையாக திடீரென்று செய்ற்கை சுவாத்தில் இருக்கும் முதல்வர் ஆணைக்கிணங்க சந்திப்பதாக சொல்லி கடைசியில் அவமானப்பட்டு நிற்கிறார்கள்.. அடிமைகளுக்கு மானம் அவமானமெல்லாம் இல்லை ஆனால் நமக்கிருக்கிறது.. அதனால் தான் தமிழக மக்களின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்த பிரதமருக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.. .. பிரதமருக்கு தலைமைசெயலர் கடிதம் எழுதுகிறார்.. இது ஜனநாயக விரோதம்..#Undemocratically. முதல்வர் உடல்நிலையை காரணம் சொன்னாலும் மக்கள் பிரதிநிதிகள் தான் ஆட்சி செய்யவேண்டுமே தவிர அதிகாரிகள் அல்ல.. துறை அமைச்சர் கடிதம் எழுதலாமே தவிர அரசுஅதிகாரிகள் அல்ல. தமிழகஅரசின் நிர்வாகம் கேட்பாற்று கிடக்கிறது.. மிக மோசமான விளைவுகளை தரும்.. அதிகாரிகளின் அரசு நடப்பதென்பது ஜனநாயகத்திற்கு பேராபத்து..Democratic calamity.. இதெல்லாம் களையப்படவேண்டுமெனில் மக்கள் சிந்தித்து சரியானவர்களை தேர்வு செய்யவேண்டும்.. அரைகுறைகளை, சொற்ப பணத்திற்காக தேர்வு செய்து அனுப்பியதால்.. ஜனநாயகம் செத்து, சொரணையற்று ,அவமானப்பட்டு தலைகுனிந்து மரியாதையற்று நிற்கிறோம். இனியேனும் கவனம் கொள்வோம்.. இல்லையேல்.. .. #நடுத்தெருவில்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment