Thursday, October 6, 2016
மக்கள் தலைவன்
இப்படியொரு தலைவனைதான்
தவறவிட்டீர்..
கையில் கொடுத்த பண்டத்தை
தெருவில் வீசிவிட்டு
பசிக்கிறதென்கிறீர்..
..
நாளெல்லாம்..
நலன் மட்டுமே நினைக்கும்
நல்லவர்களை ..
நாலு காசாக்காக
நழுவவிட்டீர்..
..
பதவி தந்தாலும்.
பவுசுகாட்டாத.
எதிரியும் வணங்கும்
எங்கள் தளபதி..
மக்கள் குறைகளை
மகேசன் மறந்தாலும்
மாறாத நிலையோடு
மக்களுக்காக நமக்காக..
உழைக்கும் ..
மாண்பாளர் ..
..
மக்கள் அழுகுரல் கேட்டால்
மன்னர்கள் உறக்கத்திலிருந்தாலும்
உணர்வற்றிருந்தாலும்
இந்த மாமனிதன்..
முன் நின்று குறைகேட்பான்.
இப்படிபட்ட தலைவனைதான்..
நீர் தவறவிட்டீர்..
..
வரும் முன் காப்பவன்..
வந்தபின்னும்.. காப்பவன்..
மக்களின் தலைவன்..
காவிரிக்கரையின்
அழுகுரல் கேட்டு..
கண்ணீர் துடைக்க
கரம் நீட்டுகிறான்..
காசுக்கு வாங்கியவர்கள்
கைகழுவிச் சென்று
கண்விழிக்காமல் கிடக்கும் போதும்..
மக்கள் அழுத கண்ணை துடைப்பதற்கு
மாபெரும் அறப்போரை
தானே முன்னின்று... நடத்திடுகிறான்..
..
இப்படியொரு தலைவனைதான்
நீர் தவறவிட்டீர்..
கையில் கொடுத்த பண்டத்தை
தெருவில் வீசிவிட்டு
பசிக்கிறதென்கிறீர்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment