Thursday, October 6, 2016

வேதா இல்லம்

ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்காமல் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வெளியேற்றப்பட்டார் அப்போலோ மருத்துவமனை கேட்டிலேயே அனுமதிக்க மறுக்கப்பட்டிருக்கிறார்.. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் நோயாளியை சந்திக்க வந்த இரத்தசொந்தத்தை வெளியேற்றியது ஏற்றுக்கொள்ள முடியாதது.. கண்ணீரோடு வெளியேறினார்.. தீபா.. .. சசி குடும்பத்தினர் அப்போலோவையே ஆக்கிரமித்துள்ளனர்.. சசிகலா குடும்பத்தினர் செல்ல காவல்துறையினரே வழிவிட்டு கும்பிட்டு உள்ளே அனுப்பிவைக்கின்றனர்.. இதெல்லாம் அதிகாரதுஷ்பிரயோகம் எனச்சொன்னாலும் யாரும் காதில் வாங்குவதில்லை.. முழுகட்டுபாடும் சசிகலா குடும்பத்தினர் தான் தவிர மற்றவர்களால் நெருங்ககூட முடியவில்லை.. .. ஆரம்பங்ககாலங்களில் சசிகலா தான் எல்லாவற்றையும் செய்கிறார் ஜெயலலிதாவிற்கு தெரியாமலே என்று ஜெயலலிதாவை காத்தவர்கள் இன்று வாய்மூடி மௌனம் காக்கிறார்கள் .. சிலர் மேடம்சசிகலா என புகழ தொடங்கிவிட்டார்கள். #அவர்களை சொல்லி காரியமில்லை அவர்கள்அப்படிதான் வெள்ளையனுக்காக ஆங்கிலம் கற்றுக்கொண்டு அவனின் அடியொற்றி வாழ்ந்தவர்கள்.. ஜெர்மனிய படைகள் முன்னேறுகிறது என்றவுடன் ஜெர்மனிய மொழியை கற்றுக்கொள்ள தொடங்கினார்கள்.. இப்போது எல்லாம் சசிகலாவின் கைக்களுக்குள் போய்விட்டதறிந்து.. சசிகலா உயர்த்திப்பிடிக்கிறார்கள்.. குறிப்பாக ஊடகங்கள் அதிகமாக புகழ தொடங்கியிருக்கிறது.. .. ஜெயராமின் மகளாக இல்லாதிருந்தால் ஒருவேளை கீதாவிற்கு அனுமதி கிடைத்திருக்கும்.. ஒருவேளை அனுமதித்தால் சசிகலாவின் நிஜமுகம் தெரிந்துவிடுமென அஞ்சியிருக்கலாம்.. ஆனாலும் மருமகளை பார்க்க அனுமதிப்பது தான் சரி.. நெடும் கிரைம் தொடரைப்போல மர்மங்கள் நிறைந்தது #வேதாஇல்லம்.. #மன்னார்குடி_அத்தாச்சி மீறி எதுவும் நடக்காது.. கள்ளச்சிடா #மகிழ்ச்சி.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment