Sunday, October 9, 2016

மவுண்ட்ரோடுமஹாவிஷ்ணு

அரசியல் சாசனதிற்கு அப்பாலான சக்தி அரசை நடத்தகூடாது.. இந்துராம்.. இந்துராம் போன்றவர்களுக்கு தெரியாதா சசிகலா பிரதான சூத்ரதாரி என்று அல்லது மௌனமாக தன் ஊடக ஜனநாயக தர்மத்தை நிறைவேற்றுகிறாரா.. வேறொருவர் இயக்குகிறார் என்பது வெளிப்படையாக தெரிந்தும் தமிழகத்தின் பிரபலமான பத்திரிக்கைகள் மௌனம் சாதிப்பதை இவர் இதுவரை குறைகூறவில்லை மாறாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் மேற்கூறியவற்றை சொல்லி தன்நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திருக்கிறார்.. .. இந்து போன்ற மிக சர்வசக்தியும் உள்ள ஊடகம் இவர்கள் நினைத்தால் மத்திய அரசை தங்கள் போக்கில் செலுத்தமுடியும் அப்படியிருக்க ஏதோ யாரோ நடத்துவதைப்போல தெளிவில்லாமல் அல்லது நேரடியாக குற்றம் சாட்டாமல் கருத்தை சொல்லியிருக்கிறார்.. மவுண்ட்ரோடு #மஹாவிஷ்ணுவின் பலம் நாமெல்லாம் அறிந்தது தான் ஆனாலும் ஒரு சங்கடம் வெளியில் சொல்லமுடியாமல் #வராதுவந்தமாமணியை காக்க முயற்சிக்கிறார்கள்.. ஜெயலலிதாவின் உடல்நிலை காரணம் காட்டி பிறர் சுரண்டுவதை அல்லது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்ககூடாது என்பதில் மாற்று கருத்தில்லை.. அதனால் தான் எதிரிக்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் கூட பொறுப்பு முதல்வரை தேர்வு செய்யவேண்டுமென்கிறார்.. ஏறக்குறைய அதே கருத்தைத்தான் திரு.என்.ராம் அவர்கள் ஒலித்திருக்கிறார்.. ஆனால் வேறு வடிவில்.. அரசியல் சாசனத்திற்கு அப்பாலான சக்தி என்கிறார்.. பினாமிகள் கூட அரசியல் சாசனத்திற்கு அப்பாலானவர்கள்தான்.. இரண்டுமுறை ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது கூட அதிகாரம் அவரிடமில்லை.. குற்றவாளியை சந்திக்க மத்திய அரசின் கேபினட் அமைச்சர் வருவதும் கலந்துரையாடுவதும் கூட அரசியல் சாசனத்திற்கு அப்பாலான காரியம் தான்.. இந்தியாவிலேயே குற்றவாளியாக தண்டனை பெற்ற ஒருவர் அரசு காரியங்களில் வெளிப்படையாக தலையீடு இருந்ததும் அரசின் உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை பெற்றதும் ..அரசியல் சாசனத்திற்கு எதிரானது தான் அப்போதெல்லாம் கருத்தை சொல்லாத திரு.என்.ராம் அவர்கள் இப்போது பேசுகிறார் என்றால் அதன் மறைவில் உள்ள அரசியலை தாண்டிய ஜனநாயக கடமைகளை தாண்டிய,இனஉணர்வை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.. .. #மவுண்ட்ரோடுமஹாவிஷ்ணுவை_அறிவோம்… ‍.. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment