Tuesday, October 18, 2016
இரயில் மறியல்
இரயில் மறியல் போராட்டம்..
..
தனித்தனியாக அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவதென்பது பலவீனமாகவே கருதவேண்டியிருக்கிறது..மிகப்பெரிய அளவில் இந்த போராட்டத்தை கொண்டு சென்றிருக்கலாம்.. விவசாய சங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்துக்கட்சிகளும் இணைந்திருக்கவேண்டும்
ஆளும் அதிமுகவும் போராட்டத்திற்கு ஆதரவளித்திருக்கவேண்டும்..முதல்வர் உடல்நிலை காரணம் காட்டி இது போன்ற அரசியல் ரீதியாக மாநில உரிமைகளுக்கான போராட்டத்தை தவிர்ப்பதோ அல்லது மறைமுகமாக எதிர்ப்பதோ நல்ல பலனை தராது..
..
நாம் தமிழர் சீமான் திமுக எங்களை அழைக்கவில்லை அதனால் தனியாக போராடுகிறோம் என்கிறார்.. முதலில் இந்த மறியல் போராட்டத்தை விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தது என்பதை உணர வேண்டும்.. பாஜக புறக்கணிப்பதில் கூட அவர்களின் கட்சி மத்தியில் ஆள்வதால் பிரச்சனையாக்க விரும்பாமல் தவிர்த்திருக்கிறது ஆனால் இதை முன்னெடுக்க வேண்டிய அதிமுக கண்டும் காணாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்கிற மாபெரும் துரோகம்..
அதைவிட கொடுமை நாங்கள் ஏன் போராடவேண்டும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கேட்கிறார்...
கொடுமை...
..
திமுகவினரை தவிர மற்ற கட்சி மற்றும் அமைப்பினரின் மறியல் போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையோ என எண்ண தோன்றுகிறது..காரணம் முதவ்வர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கிறார் என்பதால் அவரின் பழைய கூட்டாளிகளின் தொண்டையின் ஈரம் வற்றவில்லையென நினைக்கிறேன்.. கர்நாடகவில் நடந்த போராட்டங்களுக்கு அரசின் மறைமுக ஆதரவென்பது வெளிப்படையாகவே தெரிந்தது அது மத்திய அரசின் செவித்திரையை கிழித்தது..
..
மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடு நடுநிலையோடு இல்லை வருகிற தேர்தலை கணக்கில் கொண்டு செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. நடுவன் அரசாக மோடி அரசு இல்லை.. தமிழகத்திலோ தலைமையில்லாத அரசாக அதிமுக அரசு காட்சி தருகிறது.. இவையெல்லாம் மோடி அரசு தமிழர்களை /தமிழக விவசாயிகளை கண்டுக்கொள்ளாமல் இருக்க அல்லது புறக்கணிக்க காரணம்..
..
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாதவரை .. அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டவேண்டுமென்ற உடனேயே பாஜக கலந்துக்கொள்ளாது என்பதும் முதல்வர் மருத்துவமனையில் இப்போது தேவையில்லை முதல்வர் வந்து பார்த்துக்கொள்வார் என்பது நழுவிகிற வித்தை..
ஆயிரம் கருத்து கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மாநிலத்தின் ஜீவதார உரிமைக்காக போராடுகிற போதுகூட அரசியல் செய்கிற அயோக்கியத்தனம் கண்டிக்கவேண்டிய ஒன்று.
..
எம்ஜிஆர் உடல்நலமின்றி இருந்த போது கலைஞர் சொன்ன கதை ஞாபகம் வந்தது..
வீட்டில் சோகநிகழ்வு நிகழ்ந்துவிட்டது என்பதற்காக பக்கத்து வீடு தீ பிடித்து பற்றி எறிகிறபோது.. தீயை அணைக்க செல்லவேண்டுமே தவிர துக்கவீட்டிலிருந்து வர மறுத்தால்..
இங்கேயே எரிந்து சாம்பலாகி விடும்..
புரிந்தால் சரி..
..
இப்போதாவது ஒன்றுபட்டு போராடுங்கள்..
இல்லையேல் சுடுகாடகிவிடும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment