Monday, October 17, 2016
சட்டியில் இருந்தால் தானே
இரு கட்சிகள்..
ஒரே நேரத்தில் இரண்டுவேலைகளை செய்தன..
திமுக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடத்துகிறது.. அதிமுக மண்சோறு தின்று பிழைப்பு நடத்துகிறது..
இதுதான் இரண்டுக்குள்ள வித்தியாசம்..
தனிநபருக்காக இயக்கத்தை மூடவழக்கத்தின் பின்னால் செலுத்தும் செயல் நம்பிக்கையென்பது வேறு.. இது இப்படியெல்லாம் செய்தால் கடைகண் பார்வைப்பட்டு நாலு காசு சம்பாதிக்க வழிவகை கிடைக்காத என்ற முற்றிலும் சுயநலமான செயல்கள் தவிர வேறொன்றில்லை..
..
அதிமுக டிசைன் அப்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. மோகம் அழகு ஈர்ப்பு இவைதான் பிரதான விடயங்கள்.. எம்ஜிஆர் காலம் தொட்டே இதுதான் நடந்தது .. மன்ற உறுப்பினர்களை கத்தி வைத்துக்கொள்ள சொன்னவர் எம்ஜிஆர்.. சமூகநலன் அடிதட்டுமக்களின் மேம்பாடு மாநிலத்தின் உரிமைகள் இவைகள் பற்றியெல்லாம் இவர்களுக்கு தெரியாது சொன்னாலும் புரியாது.. தொலைகாட்சி விவாதங்களில் பாருங்கள் இவர்களின் யோக்கியதை தெரியும் தெய்வதிருமகள் என புகழ்ந்தும் கருணாநிதியை இகழ்ந்தும் கூச்சலிடுவார்களே தவிர ஆக்கபர்வமான விவாதங்களுக்கோ செயல்பாடுகளுக்கோ இவர்கள் தயாரில்லை காரணம் சரக்கில்லை..
மண் சோறு சாப்பிடுவதால் பலன் என்றால் மண்ணையே சாப்பிட்டு குணமாகலாமே.. மண்சோறு என்ற பெயரில் பளபளக்கும் கிரைனைட் தரைமீது சாதம் வைத்து சாப்பிடும் விநோதம்..
..
டாக்டரிடம் இங்கிலீசில் பேசினார்.. தண்ணீர் கேட்டார் .. அதெல்லாம் சரி.. ஏன் இதுவரை மருத்துவ அறிக்கையை அரசு வெளியிடவில்லை.. மக்கள் வரிப்பணத்தில் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் போது அதுகுறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமையல்லவா..
கலைஞரும் தான் மருத்துவமனையில் முதுகுதண்டு அறுவைசிகிச்சை செய்துக்கொண்டிருந்தார்.. ஆனால் கட்சிகாரர்கள்.. இப்படி தெருகூத்தெல்லாம் நடத்தவில்லை..விரைந்து நலம் பெறவேண்டி விழைந்தார்களே தவிர ..மடமைகளில் மூழ்கி அறிவிற்கொவ்வா செயல்களில் ஈடுபட்டதில்லை..
..
திமுக எப்போதுமே மக்களுக்காக போராட தவறியதில்லை.. அதிகாரமிருந்தபோதும் இல்லாதபோதும்.. எல்லா விடயங்களும்/மக்கள் பிரச்சனைகளிலும் அறிவோடும், சரியான பாதை தேர்வு செய்தும் களம் கண்டிருக்கிறது குரல் கொடுத்திருக்கிறது.. மாநில நலன் மற்றும் உரிமைகளுக்காக போராட தவறியதில்லை..
முதல்வரின் உடல்நலம் குறித்து அக்கறை கொள்ளவேண்டியதுதான் அதற்காக வேறு வேலையே இன்றி சதா மூழ்கி கிடப்பதும் சரியான நிர்வாகத்திற்கு வழிவகுக்காது.. திமுக தொண்டன் செய்வதை கூட அதிமுக அமைச்சர்கள் தலைவர்களால் செய்யமுடியாது..காரணம் செய்யதெரியாது. திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரேயொரு வித்தியாசம் தான் .. திமுககாரன் எதையும் அறிந்து விவேகத்தோடு பேசுவான்/செய்வான்.. அதிமுககாரனிடம் அது இருக்காது..
..
#சட்டியில்இருந்தால்தானே_அகப்பையில்_வரும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment