Wednesday, October 12, 2016
நூற்றாண்டு நாயகன்..
அரசியல் தலைவர்கள்..
உலகெங்கும் தலைவர்கள் தங்களின் தனித்தன்மையை பறைசாற்றி வரலாற்றின் நெடுகிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள்.. எந்த ஒரு தலைவரும் ஒரு குறிப்பிட்ட காலஅளவிற்குள் மாத்திரமே பங்காற்றி வரலாறாய் நிமிர்ந்து நிற்கிறார்கள்..
சில தலைவர்கள் குறுகில காலத்திற்குள் புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார்கள்.. சிலர் வெற்றி பெறும் போது பேசபட்டு பின் படிபடியாக நினைவில் இருந்து மறைந்து போய்விட்டார்கள்..சிலர் தோல்விகளில் துவண்டு பின்மாறி போயிருக்கிறார்கள்.. சரித்திரம் அவர்களை குறித்துக்கொண்டிருக்கிறது வெறும் பதிவாக..
ஆனால் காலத்தை மீறி..வெற்றியிலும் தோல்வியிலும் கொள்கையை விடாமல்.. துவழும் போதெல்லாம் தட்டியெழுப்பி மிகபிரமாண்டாமாய் எழ வைக்கும் ஆற்றல் கொண்ட தலைவர்கள் வரலாற்றில் அபூர்வம்..
முக்கால் நூற்றாண்டு காலமாய் தன்னை சுற்றியே அரசியலை சுழல வைக்கிற .. அடுத்த எந்த திசை நோக்கி செல்லவேண்டுமென்று தீர்மானிக்கிற சுழலும் அரசியல் சக்கரத்தின் அச்சாணியாய் ஒருவர் இருக்கிறார் எனில் அவர் #கலைஞர் மட்டுமே..
..
பலமுனை தாக்குதல்கள்.. தொடர் தோல்விகள்.. நம்பியவர்களின் நயவஞ்சகங்கள்.. எதிரிகளின் சதிவலைகள்..சிரித்தும் மகிழ்ந்தும் எல்லாவற்றையும் எதிரிக்கொள்ளும் பேராற்றல் சிலருக்குமட்டுமே உண்டு..வெற்றியிலும் தோல்வியிலும் தன்னை சுற்றியே அரசியல் ஆட்டத்தை இயக்கவைக்கிற வித்தை அறிந்தவர்.
..
எழுத்து மட்டுமே பிரதான ஆயுதமாக கொண்டு களத்தை அமைக்கிற ,எதிரிக்கும் அமைத்து தருகிற திறமை..
யார் எங்கே எப்படி செயல்படவேண்டுமென்று இவரின் எழுத்தும் பேச்சும் மட்டுமே தீர்மானிக்கிறது..
சில தலைவர்கள் சில துறைகளில் மட்டுமே கோலோச்சமுடியும்.. ஆனால் இவரால் .. கலை இலக்கியம், நாடகம் சினிமா.. அரசியல் வாழ்வியல் என எல்லாவற்றிலும் திறமையோடும் சிறப்போடும் பங்காற்றிட முடிந்தது.. அபூர்வ திறமை உள்ளவர்களால் மட்டுமே தொடர்ந்து இயங்கியும் மற்றவர்களை இயக்கியும்.. தன் கருத்துக்கொப்ப ஆட்டியும் ஆடவைக்கவும் முடியும்..
..
தெளிவான சிந்தனை தீர்க்கதரிசனம் தொலைநோக்குபார்வை, சமூகசிந்தனை., துளியும் துவண்டுவிடாத நெஞ்சுரம்., துணிவு.. விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்.. தலைமைத்துவம்..அதைவிட தன்னைப்பற்றி முழுமையாக அறிதல்.. எதுவரை தம்மால் முடியுமென கணித்து செயல்படுதல்.. தன்பலம் பலவீனம் எதிரிகளின் பலம் பலவீனமறிந்து அரசியல் சதுரங்க காய்களை நகர்த்துதல்..
இவையாவும் ஒருங்கே பெற்றவர்தான் கலைஞர்..
..
என்பதாண்டுகளாய் இயக்கத்தை வளர்தெடுத்து கட்டிகாத்து தலைமைமேற்று செயல்படும்.. குறிப்பாக செயல்படும் அரசியல் இயக்கத்தின் தலைவர்.. இவரின் அசைவு ஒவ்வொன்றும் ஏதோவொரு சங்கதியை சொல்லிக்கொண்டே இருக்கும்.. அவை அனைத்தும் வரலாறாகும்..
உலக வரலாற்றில் முக்கால் நூற்றாண்டுகாலம் தன்னைச்சுற்றிய அரசியலை இயக்கவைத்த தலைவர்களென்றும் யாருமில்லை..
#தலைவர்_கலைஞரை தவிர ..
..
வாழும்_வரலாறு..
#நூற்றாண்டின்_நாயகன்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment