Wednesday, October 19, 2016
தூக்கை தூக்கு
மரண தண்டனை..
உலக நாடுகள் பலவற்றில் குறிப்பாக வளரும் நாடுகளில் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது.. அதிபர் ஆட்சி செய்யும் நாடுகளிலும் மன்னராட்சி நடைபெறும் நாடுகளிலும் இன்னமும் மரணதண்டனை நிறைவேற்ற படுகிறது இந்தியா போன்ற நாடுகளில் எதிர்ப்பை மீறி .. அரிதிலும் அரிது என்கிற கொள்கையோடு சிலநேரம் அரசு ஆசைபடியும் மநுவின் யோசனைபடியும் நடந்தேறுகிறது..
..
பல நாடுகளில் விசாரணை என்பதே சிலநேரம் நேர்மையாக நடப்பதில்லை நிறைய தடைகள் திட்டமிட்டு ஒருசில சமூகத்தின் மீதான குறுகிய பார்வை.. அரசின், ஆளும்வர்க்கத்தின் அழுத்தம்,
பண பலம் மதஜாதி குறிக்கீடு இவையெல்லாம் மீறி நீதியை நிலைநாட்டுவதென்பது அரிது தான்..
தூக்கு தண்டனை குறித்தான விழிப்புணர்வு இன்னமும் நாகரீக மனித சமூகத்தின் படித்த மக்களிடையே கூட இல்லையென்பது யதார்த்தமான உண்மை..
..
நீதி நடப்பில் ஆக்கல் என்பதில் நிறைய படித்தரங்களை காணலாம்.. நீதி விற்க அல்லது வாங்கப்படுகிற நிலையில் தான் அல்லது அரசின் கொடூர முகத்தை நீதிபரிபாலன அமைப்பு ஏற்க கூடிய சூழல் தான் இத்தனை நூற்றாண்டு பின்னிட்டும் காண முடிகிறது.
..
சவுதி இளவரசர் கொலைக்குற்றத்திற்காக தூக்கில் ஏற்றப்பட்டிருக்கிறார்.. ராஜ குடும்பத்தில் பிறந்தாலும் நீதியின் முன் குற்றவாளியாய் நின்றது.. ஜனநாயகம் பேசும் நாடுகளில் சாத்தியமில்லை.. சாதாரண உயர்ந்தவர்கள் என அறிய படுகிறவர்களை கூட தண்டிக்கமுடியாது அரசின் உயர்பதவி வகிப்பவர்களை விசாரிக்க கூட முடியாது.. அப்படியே விசாரித்தால் கூட உயரதிகாரிக்கு சாதகமாகதான் வழக்கு முடியும்..
ஏன் ஈரானில் கூட உயரதிகாரியை கொன்ற வழக்கில் ரைஹானா தூக்குத்தணடனை விதிக்கப்பட்டபோது.. என் பக்கத்து நியாயங்களை அங்கீகரிக்கவே இல்லையென்றார்..
#வெறும்_மனித_கழிவல்ல நான் என்றார்..
..
உண்மையில் விசாரணை நியாயமாக நடந்திருக்கவேண்டும். தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்த போது மன்னரிடத்தில் கருணை மனு
Mercy petition கொடுப்பது வழக்கம். .
மன்னரின் பேரன் என்று அறிந்தும் நிராகரித்ததும்..
ராஜகுடும்பத்தை சேர்ந்தவரென்று அறிந்தும் மன்னிக்க மறுத்தும் தூக்குத்தண்டனை நிறைவேற்ற பட்டிருக்கிறது..
தண்டனை சரியா தவறா என்பதை தாண்டி
நீதி தடுமாறவில்லை..
..
நமது நிலைபாடு..
மரணத்திற்கு மரணமே தீர்வல்ல
#தூக்கை_தூக்கு…
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment