Friday, October 28, 2016

கைநாட்டு..

#கைநாட்டு.. கைநாட்டுக்களின் மீது அலாதி நம்பிக்கை/ பிரியம் எனக்குண்டு .. காரணம் படிப்பறிவில்லாவிட்டாலும் யாரையும் ஏமாற்ற தெரியாத வெள்ளந்தி மனிதர்கள்.. மிகவும் நம்பிக்கையானவர்கள்..யாரையும் வஞ்சிக்கத்தெரியாத உயர்குணம் கொண்டவர்கள் .. 95 சதவிகிதம் குணமடைந்த ஒருவரால் கையெழுத்திட முடியவில்லையெனில் #சரஸ்வதியை கைது செய்யலாம்.. பொய்யான தகவலை பரப்பியதற்காக.. பூரண குணமடைந்தவரால் ஏன் கையெழுத்திட முடியவில்லை.. அல்லது அவரது கைநாட்டை வேறு யாராவது அவருக்கு தெரியாமல் பதிவு செய்தார்களா.. கையெழுத்திட முடியாத அளவிற்கு உடல் பாதிக்கப்பட்டிருக்கிறதா.. கொஞ்சம் கூட விளக்கிசொல்லவேண்டுமெனில் #கைவிளங்காது போனதா.. நிறைய சந்தேகங்களை தருகிறது.. மக்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டியது அரசின் கடமையல்லவா.. .. இங்கே படித்தவர் ஆங்கில அறிவில் தன்னை சிறந்தவர் என கூறிக்கொண்டவர்.. உடல்நலம் குன்றி இன்று கையெழுத்து இடமுடியாத நிலைக்கு வந்திருக்கிறார்.. உண்மையில் வருத்தமே மேலிடுகிறது.. மற்றவரை கிண்டலடித்து ரசிக்கிற மனபான்மையோடு வாழ்ந்தவரை காலம் வெகுவிரைவில் பாடம் புகட்டியிருக்கிறது.. கைநாட்டு வைத்தது சுயநினைவோடுதானா என்பதை அறிவதை காட்டிலும் சிலர் அதை வைத்து நாடகமாடி ஏதேனும் சதிவலைபின்னுகிறார்களோ என்ற அச்சம் வருகிறது.. .. முழுவதுமான அறிக்கையை அப்போலோவோ அரசோ ஏன் தரமறுக்கிறது.. தனது உணவே தானே சாப்பிட்டார் என்றவர்களின் பேச்சு எந்தளவிற்கு உண்மை.. தன் கையால் சாப்பிட முடிகிற ஒருவர் ஏன் கைநாட்டு இடவேண்டும்.. எங்கோ இடிக்கிறதே.. .. என்ன செய்ய #நாமெல்லாம்விளங்காத_கைநாட்டுக்கள் .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment