Saturday, October 22, 2016

அனைத்துக்கட்சி கூட்டம்

அனைத்துக்கட்சி கூட்டம்.. ஆளும் கட்சி அயர்ந்து உறங்கும் போது அதை தட்டியொழுப்பும் அதிகாரம் எதிர்க்கட்சிக்குண்டு. தூங்கிவழிகிற அரசை தட்டியெழுப்ப முயற்சித்து தூங்கவில்லை தூங்குவது போல் நடிக்கிறது அரசு என்றானபின் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் தார்மீக அவகாசம் பிரதான எதிர்க்கட்சிக்கே உண்டு.. .. இப்போது அனைத்துக்கட்சிகளுக்கு அழைப்பு கொடுத்திருப்பது கூட காலதாமதமானது தான் எனினும் இப்போது திமுக எடுத்துள்ள நடவடிக்கை தமிழக விவசாயிகள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.. தஞ்சையில் நடந்த அனைத்து விவசாயசங்களின் கூட்டத்திற்கு பின் அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றே விவசாயிகள் விரும்பினர்.. திரு.ஸ்டாலின் கூட அதிமுக அரசு கூட்டத்தை கூட்டாவிட்டால் திமுக அதை செய்யுமென்றார்.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் அரசுக்கு அவகாசம் வழங்கி பொறுப்பு முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்து அரசு செவியேற்காதபட்சத்தில் திமுக அழைப்பு விடுத்திருக்கிறது.. .. பொன்னரும் தமிழசையும் குதிக்கிறார்கள் காரணம் நிச்சயமாக பாஜக அரசுக்கு எதிரான செயல் என்பதால் இது மிகப்பெரிய பின்னடைவை தரும் மோடி அரசிற்கு எதிராக மக்களை திசைதிருப்பும் என அஞ்சுகிறார்கள்.... எதிர்க்கட்சி தலைவர் மாண்பிமை திரு.ஸ்டாலின் அதிமுகவிற்கும் அழைப்பு அனுப்பியிருப்பதாக சொல்கிறார் #நல்லதொடக்கம் .. அரசியல்கட்சிகள் தமிழக்தில் எதிரெதிராக செயல்படுவது தமிழக நலனுக்கு உகந்ததல்ல.. கொள்கையில் எதிரெதிராக செயல்பட்டாலும் தமிழக நலன்களின் ஒன்றிணைந்து போராடுவதே நல்லது.. சமீபகாலமாக எதிரி மனப்பான்மையோடே பிரதான கட்சிகள் செயல்பட்டு வந்திருக்கின்றன.. திரு.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு மெச்சதகுந்ததும் போற்றப்படவேண்டியதுமாகும். .. ஆளும் கட்சி கலந்துக்கொள்ளாமல் போனாலும் கருத்துச்சொல்ல கூட அவர்களுக்கு அதிகாரமில்லை ஏனெனில் சுயமாக செயல்பட தெரியாத இரண்டாம் நிலை தலைவர்கள்.. எனவே அவர்களை எதிர்பார்க்க முடியாது.. அவர்கள் ஆட்டுவைக்கப்படும் பொம்மைகள். மதிமுகவின் கோபால் தரகராக காட்சியளிக்கிறார் .. அவரின் பேச்சு திமுக எதிர்ப்புமட்டுமே .. பாமக தேமுதிக முஸ்லிம்லீக் காங்கிரஸ் விசிக புதியதமிழகம் தமுமுக.. இடதுசாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், விவசாயசங்கங்கள்.. கலந்துக்கொள்ள வேண்டும்.. சில கட்சிகள் பிணங்கிக்கொள்ளலாம்.. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனை/ உரிமையில் பிற்போக்குத்தனமாக சிந்திக்காமல் தமிழக நலனை மட்டுமே கருதி அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து ..இதில் யார் பெரியவர் சிறியவர் என்றில்லாமல் சரியான யோசனைகளை யார் சொன்னாலும் அதை அலசி ஆராய்ந்து சரியெனில் தீர்மானமாக கொண்டுவரவேண்டும்.. இதில் பெரியண்ணன் மனப்பான்மை Big brother attitude.. தவிர்க்கவேண்டும்.. இது நல்ல தொடங்கமாக இருக்கட்டும்.. .. #நல்லதை_விதைப்போம்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment