Tuesday, October 18, 2016
வதந்திகள்.. வழக்குகள்
”When asked to bend, they (the media) crawled".
இந்த வாசகம் மிகவும் பிரபலம்
Maintenance of Internal Security Act மிசா (அவசரநிலை) காலத்தில் பேசப்பட்டது.. ஏறக்குறைய முதுகெலும்பு வளைந்து தான் இப்போது மீடியாக்கள் காணபடுகிறது.. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கவே அஞ்சுகிற / தயங்குகிற நிலை..
எது செய்தாலும் அது தவறென்றாலும் ஒத்தூதுகிற அவலம்.. ஆட்சியாளரின் அடாவடித்தனத்தை பாராட்டுகிற செயல்.. ஒரு விடயத்தை பற்றி பேச ஆரம்பித்தால் எதிர்கட்சி ஏன் அப்படி செய்தது என கேட்டு ஆட்சியாளருக்கு கூஜா தூக்குகிற வேலை இவைதான் சரியான ஜர்னலிஸமா.. journalism
..
சமூகவலைதளங்கள் மக்கள் பெருவாரியாக பங்கெடுக்க தொடங்கிய பிறகு தான் கருத்து சுதந்திரமும் நேர்மையான விமர்சனங்களும் வர தொடங்கியது..
..
மிசா காலத்தில் கூட இலைமறைவாக ஆட்சியாளர்களை பற்றி எழுதமுடிந்தது கலைஞர் போன்றோர் மிக சாதூர்யமாக எழுதினர்..
இப்போது எதற்கெடுத்தாலும் ஆட்சியாளர்கள் அவதூறு வழக்குகளை தொடுக்கிறார்கள்..
வதந்தியை பரப்பினார்கள் என சில வழக்குகள் குறிப்பிட்ட ஒரு சில இயக்கங்களை சேர்ந்தவர்கள் மீது தொடரபடுகிறது..
முதல்வர் உடல்நிலை குறித்து பத்திரிக்கைகளோ அரசோ சரியான தகவலை தர மறுக்கிற போது மக்களிடம் எழும் சந்தேகங்கள் சந்தை பேச்சாகதான் மாறும் இதெற்கெல்லாம் வழக்கென்பது மிசா காலத்தில் நடுவொடிந்த நிலையில் பத்திரிக்கைகள் இருந்ததைபோல தட்டிக்கேட்க தயக்கம் ஏன்..
..
முதல்வர் உடல்நிலைப்பற்றி பேசிக்கொண்டிருந்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட இரு வங்கி ஊழியர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி இருக்கிறது..நல்ல செய்தி.. கைது வழக்கு என மிரட்டுவதால் குறைந்ததா என கேட்டால் இல்லை இப்போது நையாண்டி மொழியில் பேசுகிறார்கள்.. முதலி்லாவது வருத்ததோடு கதைத்தவர்கள் இப்போது வஞ்சியிலும் நக்கல் செய்தும் நையாண்டி செய்தும் எழுத பேச தொடங்கியிருக்கிறார்கள்.. இது எதிர்வினையாற்று..
..
ஏன் மிசா காலத்தோடு ஒப்பிட்டேன் எனில் .. அப்போதும் இப்படிதான் எதையும் பேச எழுத தடைவிதித்தார்கள்.. ஆனால் இலைமறைவாக நையாண்டி செய்தும் நக்கல் செய்தும் கலைஞர், கோயங்கா, நய்யார் போன்றவர்கள் எழுதினார்கள்..
அது தான் இப்போது நடக்கிறது..
சமூகவலைதளத்தில் தனிநபரின் சொந்த விடயங்களை விமர்சிப்பது கூடாது தான் ஆனால் அரசின் செலவில் அத்தனை அதிகாரத்தை பயன்படுத்துக்கொள்ளும்.. ஆட்சி செலுத்தும் முதல்வரின் நிலைப்பற்றி தெரிந்துக்கொள்ள / என்னானது என கேட்க, அவரை வைத்து சிலர் நடத்தும் சகிக்கமுடியாத கூத்துக்களை விமர்சனம் செய்ய பொதுமக்களுக்கு உரிமை இருக்கிறது..
அதை தான் தவறென்று அரசு சொன்னால் நீதிமன்றம் ஏற்காது..
..
உண்மை நீண்டநாள் உறங்காது.
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment