Saturday, October 22, 2016

தஞ்சை இடைத்தேர்தல்

தஞ்சை பூபதி.. நகர்மன்ற தவைவர் தஞ்சை நகர திமுகவில் தனி இடம் இவருக்குண்டு கொள்கை பிடிப்பும் கலைஞர் மேல் கொண்ட தீராத காதலும் ஒரு சிறந்த செயல்வீரராகவே இருந்தார்.. என் நடராசன் தொடர்ந்து தஞ்சையில் வெற்றிபெற காரணிகளில் ஒருவர்.. தஞ்சை நகராட்சியில் இவர் தலைவராக இருந்தபோது இவரை சந்திப்பது மிக எளிதாக இருக்கும் துணைத்தலைவர் சுல்தானையும் இங்கே குறிப்பிட வேண்டும் வடக்குவீதியின் நாயகன் சுல்தான்.. .. அஞ்சுகம் பூபதி மருத்துவர் தன் தந்தை நினைவாக மாதந்தோறும் இலவச மருத்துவ சேவையை குறிப்பாக ஏழைகளுக்கு செய்துவருகிறார்.. தந்தைப்போல எளிமையானவராக எளிதில் அணுககூடியவராக இருக்கிறார்.. தஞ்சை அதிமுக வேட்பாளரைவிட மிக சிறந்த தேர்வு அஞ்சுகம்.. .. இடைத்தேர்தவில் மக்களின் மனநிலை ஆளும்கட்சிக்கு ஆதரவார இருக்குமென தொடர்ந்து ஊடகங்கள் சொல்லிவருகிறது இது ஒருவகை தாக்கத்தை ஏற்படுத்துமென்றாலும்.. முன்பு இடைதேர்தலில் மயிலாடுதுறையிலும் அண்ணாநகரிலும் எதிர்கட்சி வெற்றிபெற்றிருக்கிறது.. இப்போது கூட நேர்மையாக நடந்தால் திமுகவே வெல்லும் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.. நேர்மை என்ற சொல் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல வாக்காளர்களும் உணரவேண்டும்.. தங்கள் வாக்கின் வலிமையை அறியாமல் சில்லரைகளுக்கு கொடுக்கிற வழக்கத்தை கைவிடவேண்டும்.. மிகவும் பின்தங்கிய மாநிலம் (கல்வியறிவில்) அறியபடுகிற பீகாரில் கூட வாக்கை விற்கும் பழக்கமில்லை.. ஆனால் தமிழகம் மட்டுமே விலைபேசபடுகிற மாநிலமாக இருப்பது உண்மையில் வேதனையான விடயம்.. .. யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்ற உரிமையில் அடுத்தவர்கள் தலையிடுவது அருவருப்பானதாக தெரியவில்லை.. எல்லோருக்கும் /எந்தகட்சியாக இருந்தாலும் வாக்கை கேட்கிற உரிமை மட்டுமே உள்ளது தீர்மானிக்கிற உரிமையில்லை .. வாக்கை விற்கும் வாங்கும் போக்கு ஜனநாயக பேராபத்து.. அதை யார் செய்தாலும் தவறு.. வாக்கிற்கு பணம் கொடுக்க பழக்கம் முன்பு பண்ணையார்கள் (காங்கிரஸ்காரர்கள்) தொடங்கிவைத்தது .. இப்போது விலை பேசும் நிலைக்கு வந்திருப்பதில் திராவிட கட்சிகளின் பங்கு அளப்பரியது.... .. இடைதேர்தல் இன்றைய சூழலில் திமுகவிற்கு வாக்களிப்பது அவசியமாகபடுகிறது.. இந்த அதிமுகஅரசு மிக மோசமான ஆட்சியை செய்கிறது இதற்கு கடிவாளம் போடப்படவேண்டும் அதற்கு திமுகவின் வெற்றி சாத்தியபடுகிறது.. தஞ்சையை பொறுத்தவரை அஞ்சுகம்பூபதி சிறந்த தேர்வாக இருக்கும்.. .. #நல்லது_நடக்கட்டும் .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment