Wednesday, October 5, 2016

அரசாங்கம் அதிகாரிகள் கையில் ஜனநாயக விரோதம்

ஷீலா பாலகிருஷ்ணன்.. முதல்வர் உடல் நிலையை மிக மோசமானதால் முதல்வர் செய்யவேண்டிய காரியங்களை/பணிகளை அவரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்றெடுத்தார்/கவனிக்கிறார்.. மலையாள ஏசியாநெட் சேனலும், ஹிந்துஸ்தான் இதழும் முக்கிய செய்தியாக்கியிருக்கிறது.. முதவ்வர் முடியாமல் போனால் வேறொருவரை தேர்வு செய்யவேண்டுமே தவிர அதிகாரிகள் அரசாள்வது ஜனநாயக விரோதம்.. .. ஏற்கனவே ஜூனியர்விகடனும் நிஜத்திற்கு ஒட்டளித்திருக்கிறார்கள் நிழலுக்கல்ல என எழுதியதை கலைஞரும் மேற்கோள்காட்டி கவர்னர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றார்.. அதுதான் சரியும் கூட .. முதல்வர் நிலை குறித்து ஊகாபோகங்கள் நிலவும் சூழலில் ஆட்சியை கலைக்கவேண்டும் அல்லது வேறொருவரை ஆட்சியில் அமர்த்தவேண்டும் அவர் பினாமி என்றாலும் பரவாயில்லை .. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி செய்வதுதான் மக்களாட்சிக்கு உகந்தது மாறாக அதிகாரிகள் அல்ல.. தற்போதைய தேவை Dissolve Government.. .. மிகசிறந்த நிர்வாகியாக கூட இருக்கலாம் அவரால் தமிழகம் மேம்படகூட செய்யலாம் மிக சிறந்த ஆளுமையை கூச தந்திருக்கலாம் . வேண்டுமெனில் ஷீலாவை அதிமுக உறுப்பினர்கள் தேர்வுசெய்து முதல்வராக்கட்டும்.. அடிமைகளுக்குதான் மானம் மரியாதை கிடையாதே.. இதுவும் கடந்துபோகுமென எண்ணிக்கொள்கிறோம் மாறாக திரைமறைவாக நடந்தரவந்தவைகள் வெளிப்படையாக அதிகாரிகள் கைகளில் அரசாங்கம் என்பது ஜனநாயக முறைகேடு .. அப்பட்டமான ஜனநாயக விரோதம் Patently undemocratic.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment