Wednesday, October 26, 2016
தளபதி காலத்தின் தேவை
நாத்திகம் பகுத்தறிவு ...
பெரியார் சொல்கிறார் எனக்கு கடவுள் மீதெல்லாம் கோபமில்லை .. இந்த சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை கலைய வேண்டும் என எண்ணினேன்.. அது ஜாதீய கட்டமைப்புக்குள் என்றார் ஜாதியை ஒழிக்கலாமென்றேன் அது மதத்திற்குள் என்றார் மதத்தை புறக்கணிப்போம் என்றேன் அது கடவுளின் செயல் என்றார்.. அதனால்தான் நான் கடவுளை எதிர்க்கிறேன் என்றார்.. இங்கே இந்துமத கடவுளை மட்டும்தானே பெரியார் எதிர்த்தார் என்கிறார்கள்.. பிற மத கடவுள்கள் மனிதர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கு
ஆதாரம் உண்டு இங்கே எல்லாம் கற்பனையாக பாத்திரங்கள் என்றார்... அதே நேரம் எல்லா மதத்திலும் உள்ள மூடவழக்கங்களை எதிர்த்தார்
எது அறிவு ஏற்றுக்கொள்ளவில்லையோ அதை நீ ஏற்றுக்கொள்ளாதே என்றார் அது மதம் கடவுள் கற்பனை இத்யாதி...
..
ஆனால் திமுக அப்படியல்ல..
தி க விலிருந்து பிரிந்துவந்த பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்..
கடவுள் மறுப்பு அல்ல திமுகவின் கொள்கை ...
..
திமுக கடவுள் மறுப்பை பிரதானமாக்கி செயல்படும் இயக்கமல்ல இங்கு நாத்திகனும் உண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவனும்,உண்டு... காரணம் தனிநபரின் செயல்பாடுகளில் விருப்புவெறுப்புகளில் இயக்கம் தவையிடுவதில்லை.. திமுகவின் பிரதான கொள்கைகளிலிருந்து மீறாமல் இந்த சமூகத்தில் நடக்கும் ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக ஒரு சிலரே எல்லா வாய்ப்பையும் தட்டிப்பறிக்கிற செயல்களுக்கெதிராக ..சமூகநீதியை நல்லிணக்கத்தை கட்டிகாக்க. நாட்டின் நலன் இன,மொழி கொள்கை கோட்பாட்டிலிருந்து மாறாத
சமூகத்தில் அனைவருக்குமான உரிமைகளை பெற்று தர போராடிக்கொண்டிருக்கிறது..
..
இங்கே சிலர் ஸ்டாலின் கோவிலுக்கு போகிறார் என்கிறார்கள்.. எனக்கு கடவுள் மீதான நம்பிக்கை இல்லையென்பதற்காக அவரை போகவேண்டாமென்று சொல்ல முடியாது.. அவரின் அவரை சார்ந்தவர்களின் தனிப்பட்ட விரும்பங்களை தடைபோட முடியாது..திமுக கடவுள் மறுப்பை மட்டுமே முன்னெடுக்கிற இயக்கமல்ல..
யாரையும் கட்டுபடுத்தாத அதே வேளை திமுகவின் பிரதான கொள்கையிலிருந்து விலகி செல்வாரே ஆனால் அப்போது மிகவும் கடுமை விமர்சிப்போம்..அது மாற்று கருத்தே இல்லை..
..
இனத்தின் மொழியின் மீதான தாக்குதலை தொடுக்க முடியாதவர்கள் தொடுத்து தோல்வியுற்றவர்களின் கூப்பாடு இது. தமிழர்களின் கலாச்சார பண்பாட்டை சிதைக்க எண்ணி தங்களின் தேவைகளை மட்டுமே புகுத்தும்
சிலரின் கையாலாகாததனம் தான் இந்த ஏன் ஸ்டாலின் கடவுளை கும்பிடுகிறார் என்பது..
எதிரிகள் செயலற்று நிற்கும் போதுதான் தனிநபரின் செயல்பாட்டை விமர்சிப்பார்கள்..
அது இயலாமை..
கருணாநிதியோடு திமுகவின் செல்வாக்கு முடிந்தது என எண்ணிக்கொண்டிருந்தவர்களில் எண்ணங்களில் பேரிடியாக விழுந்ததுதான் திரு.ஸ்டாலின் அவர்களின் வளர்ச்சி.. அண்ணனை கொம்பு சீவினார்கள்.. அதெல்லாம் நடக்காமல் போய் கடைசியில் தனிநபர் செயல்பாடுகளை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கதைக்கிறார்கள்..
..
திரு.ஸ்டாலின் அவர்களோடு அரசியல் செய்யுங்கள் விமர்சனம் செய்யுங்கள் எதிர்கருத்தை சொல்லுங்கள்.. கடுமையான கண்டனத்தை கூட பதிவு செய்யுங்கள் அது அவரது அரசியலாக மட்டும் இருக்கவேண்டும்
..
#காலத்தின்தேர்வு_தளபதி...
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment