Sunday, October 23, 2016

கமல்

கமல்.. தன் பிறந்தநாளை கொண்டாடாதீர்கள் என தன் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.. அது அவரது சொந்த விடயம் அதில் கருத்துச்சொல்வதற்கு ஏதுமில்லை.. அவர் பிறந்தநாள் கொண்டாடாமல் போகட்டும் ஆனால் அவர் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல.. முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் என்கிறார்.. முதல்வர் நலமாகி வருவதாக தகவல் வருவதை கவனிக்கவேண்டும்.. .. கமல் தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக்கொள்ளும் சிறந்த நடிகர்..எனக்கு தெரிந்து எந்த சமரசமும் செய்திக்கொள்ளாத சுத்தமான பகுத்தறிவாளன் எஸ்.எஸ். ஆர் தான்.. புராணகதாபாத்திரங்களை கூட ஏற்று நடிக்கமாட்டேன் என்று சொன்ன லட்சிய நடிகர். திரைத்துறையிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட முதல் நடிகர் இவர்தான்.. தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்தெடுக்கப்பட்டவரும் கூட. அக்டோபர்24 அவர் நினைவு நாள்.. அவரைப்பற்றி பிறகு பார்ப்போம் .. கமலில் செயல்கள் தன்னை நாத்திகராக அல்லது பகுத்தறிவாளராக வெளியில் காட்டும்.. அவரின் தசாவதாரத்தில் நீங்கள் காணலாம் கடைசி காட்சி கூட பிராமணனை உயிரோடு கடலில் மூழ்கடித்தை கடைசி காட்சியில் கரையில் கொண்டுவந்து சேர்த்து சுனாமியே அதனால்தான் என்பது போல காட்சியை அமைத்திருப்பார்.. இது ஒரு சிறு உதாரணம்தான்.. நிறைய விடயங்களில் சமரசம் செய்துக்கொள்ளும் தன் நிலையை மாற்றிக்கொண்டதே இல்லை.. தயவு செய்து அவரை பெரியாரியவாதியாக சித்தரிப்பதை விட்டுவிடுங்கள்.. சிறந்த நடிகர் என்பதில் மறு கருத்தே இல்லை அரிதாரம் கலைத்தபிறகும்.. இந்தவிடயத்தில் திரு.ரஜினி கேமராவில் முன் மட்டுமே நடிப்பவர்.. சமரசம் செய்துக்கொள்ளாத தனக்கு தோன்றியதை செய்பவர்.. கமலைப்பற்றி அவரின் துணைவியாராக இருந்த வாணிகணபதி அவர்கள் சொன்ன கருத்து இன்றைக்கும் சரியாகவே தோன்றுகிறது.. கமல் நல்லநடிகர் நல்லமனிதரல்ல.. .. #அரிதாரம்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment