Monday, October 10, 2016
ஊடகதர்மம்
கழுத்தில் துளையிட்டு டியூப் வழியாக திரவ உணவை உட்கொள்ளும் ஒருவர் எப்படி பேசமுடியும்.. புதுவை ஆளுநர் கிரண்பேடி..
சரியாகதானே சொல்கிறார்.. ஆனால் தந்தி டிவி இரண்டொரு வார்த்தை பேசினார் முதல்வர் என்பது மிகபெரிய பொய்யல்லவா..ஒரு ஊடகம் சராசரி பொதுஅறிவு common sense கூட இல்லாத ஒருவரை தலைமை செய்தி ஆசிரியராக வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுகிறது..
..
இதற்கு முன்பு அதிகாரிகளோடு அளவளாவினார் என்று செய்திகள் வெளியிட்டதும் காவிரி பிரச்சனையில் ஒருமணி நேரம் அமைச்சர்கள் மற்றும் துறைசெயலர்களோடு விவாதித்தார் என்று செய்திகள் வெளியிட்டது பொய்யென்றே நினைக்கவேண்டியிருக்கிறது.. திபாவளி போனஸ் கூட அரசு ஊழியர்களுக்கு அறிவித்தார் ஜெயலலிதா..இவையெல்லாம் ஊடகங்களும் அரசு செய்தியும் பொய்களை மக்களுக்கு சொல்லியிருக்கிறது..
..
மிகவும் சிரமபட்டு தூக்கி நிறுத்துகிற செயல் சரிதானா.. மயிலாப்பூர் மாலினி முதல் பாண்டே வரை ஏதோ ஒன்றிக்காக துடிக்கிறார்கள் நமக்கு புரியாமல் இல்லை.. அப்போலோவின் அறிக்கையில் முதல் பேசியதாகவோ அல்லது சாதாரண நிலைக்கு திரும்பிவிட்டதாகவோ இல்லை தொடர்ந்து Passive physiotherapy சிகிச்சை தரப்படுவதாக சொல்கிறார்கள்.. எய்ம்ஸ் மருத்துமனை Pulmonary நுரையீரல் துறையின் தலைவர் மீண்டும் வந்து சிகிச்சை அளிப்பதாக சொல்கிறதே தவிர முதல்வர் பேசியதாக இல்லை..
..
சசிகலா பஷ்பாவின் இன்று ஆணியடித்ததை மக்களிடமிருந்து மறக்க செய்ய இவர்கள் கிளப்பிய செய்தியா இது என சந்தேகம் எழுகிறது..
முதல்வர் உடல்நிலை சரியில்லாத போது இரண்டு சசிகளும் மோதுவதென்பது அதிமுகவிற்கு நல்லதல்ல.. சசிகலா பகிரங்கமாகவோ தன் சாதியை துணைக்கழைத்து ஆடுவது மிகப்பெரிய அபகடம்.. அரசியலில் சாதிகளின் பங்கு தவிர்க்கமுடியாததாகிவிட்டநிலையில் ..இப்படி வெறிக்கொண்டு வெளிப்படையாக செயல்படுவது மிகப்பெரிய விளைவை தரும்.. அதிமுக அரசியலில்
மிகமோசமாகவர்களை தயார் செய்திருக்கிறது..என நினைக்கிறேன்.. இதுபோன்ற சதிராடுபவர்கள் நாட்டிற்கும் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்தானவர்கள்.. என்னசெய்வது எம்ஜிஆர் தந்துவிட்டு போன ஆபத்தையே தமிழகம் தாங்கிக்கொண்டுதானே இருக்கிறது.. தெளிவில்லாதவர்களை சுயமில்லாதவர்களை, எதற்கும் லாயக்கில்லாத, தகுதியில்லாதவர்களைதான் அதிமுகவில் அதிகம் இவர்களை போன்றோர்களை வளர்த்துவிட்டால்தான்.. ஊடகங்களை நாலுகாசு பார்க்கமுடியும்..
அதைதான் பாண்டே வகையறாக்கள் செய்கிறார்கள்..
..
#ஊடகதர்மமாவது_வெங்காயம்…
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment