Saturday, October 8, 2016

அநாகரீக கூத்து

நான் சொல்லல சிறந்த அறிவாளி இவருதான்னு.. பொறுப்பு முதல்வர் எல்லாம் தேவையில்லை கருணாநிதி 45 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது யாரும் கேட்கவில்லையே என்கிறார் வாய்ச்சொல்வீரர் வைகோ.. .. கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது நாடகமாடுகிறார் .. காவிரியில் தண்ணீரில்லை விவசாயி சாககிடக்கிறான் இவர் உல்லாசமாக ஓய்வெடுக்கிறார் தலையில்லா தமிழகம் என பேசியவர்தான் இந்த வைகோ.. .. கலைஞர் முதுகுதண்டு அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கபட்டபோது தளபதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்புக்களை பார்த்துக்கொண்டார்.. என்று தெரிந்தும் #நக்காபிச்சைக்காக இன்று கலைஞரை இதில் இழுத்துவிடுகிறார்.. ஜெயலலிதாவிற்கு உடல்நிலை வைத்து அரசியல் செய்யபோவதில்லை என்ற உயர்குணம் கொண்ட ஸ்டாலின் முன் சிறிதாய் போனார் வைகோ.. வைகோ என்றில்லை உதிரிகள் எல்லோருமே அன்று கலைஞரை கரித்துக்கொட்டியவர்கள்தான் இவர்கள் நேர்மையான அரசியல் செய்பவர்களில்லை மாறாக அரசியலை மக்கள்நலனுக்காக அல்ல இவர்கள் கட்சி நடத்துவதும் இவர்கள் கருணாநிதியை திட்டினால் ஏதாவது கிடைக்காதா என நினைக்கிற கூட்டம்.. அப்படியே பழகிப்போய்விட்டது.. இவர்கள் தங்களுக்கென்ற முகத்தை இழந்து வெகுகாலமாகிவிட்டது.. இவர்களை மக்கள் புறந்தள்ளியாகிவிட்டது யாரிடமாவது எதாவது கிடைக்காதா என அலைகிறார்கள் அவ்வளவுதான் இவர்களின் பலம்.. .. முதல்வர் உடல்நிலை குறித்த தகவல்கள் (வதந்திகள்) கவலையளிக்கிறது என பாண்டே உருகுகுறார்.. உண்மைநிலையை உலகுக்கு சொல்லவேண்டுமென்ற தார்மீக கடமையை கூட ஊடகங்கள் செய்ய மறுக்கிற சூழல் .. தினம் ஒருவரை அழைத்து கண்ணீரோடு ஒரு பேட்டி அல்லது சிறிய பிரசங்கம் இதெல்லாம்.. முதல்வரை வைத்து நடத்தப்படும் அநாகரீக கூத்து.. .. உண்மையில் இவர்கள்யாவரும் முதல்வர் மீது அக்கறை இல்லாதவர்கள் அதேபோல் நாட்டின் மீதும் மக்களின் மீதும் சிறிதும் கவலையில்லாதவர்கள்.. எதையாவது பேசி உள்ளேன் ஐயா சொல்லி காலம் கடத்தும் காரியஸ்தர்கள்.. பாவம் அவர்களுக்கு அவர்கள் #காரியம் பெரிது.. .. #நொண்டிக்குதிரைகள்_பந்தயத்திற்கில்லை.. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment