Monday, October 24, 2016

இனங்காண்..

அனைத்துக்கட்சி கூட்டம். மநகூ நண்பர்களோடு விவாதிப்பதாக சொல்லி காயை கம்யூ. மதிமுக பக்கம் நகர்த்தியிருக்கிறார்..திருமா அரசியல் காழ்ப்புணர்வு, விரோதம் இதையெல்லாம் தாண்டி இது மாநிலத்தின் ஜீவாதார பிரச்சனை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.. கீழ்தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் பெருமளவில் தாழத்தப்பட்டோர்கள் அவர்களின் வாழ்வியல் போராட்டம் இது விசிக வரலாற்றுப்பிழையை செய்தால் மதிமுக நிலைதான் வரும் காணாமல் போகவேண்டிவரும்.. .. திரு.பொன்னர் ஆத்திரபடுவதில் கூட நியாயமிருக்கிறது தன் தலைமைக்கு எதிரான ஆணியடித்தல் என்பதால் குதிக்கிறார் ஆனால் வைகோ திமுக மீதான பகைமையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது.. இழப்பதற்கு ஏதுமில்லை என்றானபின் முடிந்தவரை கலைப்பதென்பதை தவிர வைகோவிற்கு வேறுமார்க்கமில்லை.. கம்யூனிஸ்ட்டுகள் கீழ்தஞ்சையில் குறிப்பாக திருத்துறைப்பூண்டி போன்ற விவசாயபகுதிகளில் கொஞ்சம் செல்வாக்கோடு இருப்பவர்கள் அவர்களின் முடிவு கட்சிக்கு பலமா பலவீனமா என்பது தெரிந்துவிடும்.... ஏனெனில் இ.கம்யூனிஸ்ட் பலமென்பதே விவசாயபெருங்குடிகள் தான்.. .. வைகோ போன்ற விவரகேடுகளால் தமிழக அரசியல்கட்சிகள் ஒரே குடையின் கீழ் நின்று போராடமுடியாமல் போகும்.. கர்நாடகவில் எத்தனை கசப்பு, விரோதம் ,அரசியல் காரணங்கள் இருந்தாலும் அவையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒரே புள்ளியில் இணைந்து போராடமுடிகிறது.. மத்திய அமைச்சரே உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக தங்களின் எதிராளி காங்கிரஸ் அரசோடு கைகோர்த்து போராட முடிகிறது..ஆனால் ஒன்றுக்கும் உதவாத மதிமுகவிற்கு முக்கியத்தும் அளித்து ஊடகங்கள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன.. தமிழக அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வரவேண்டும்.. திமுக தோழமைக்கட்சிகளின் கூட்டமென சொல்கிறார் கோபால்.. தமாக வோ விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் இவையெல்லாம் திமுக கூட்டணி கட்சிகள் அல்ல.. பங்கேற்க வேண்டாமென்ற முடிவு மநகூ உடையதல்ல மதிமுகவின் நிலைப்பாடு என்கிறார் முத்தரசன்.. நல்லது வைகோவை தனிமைபடுத்துங்கள்.. அனைத்துக்கட்சி கூட்டம் நடக்ககூடாதென்ற விரும்புகிற கர்நாடகாவின் நினைப்பை வைகோ தாங்கி பிடிப்பதில் கர்நாடகாவின் ஏதேனும் பேசியிருக்கிறாரா என தெரியவில்லை.. ஏனெனில் இவரின் அஜந்தா அதுதான். .. தடைகளைமீறி அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக விவசாய நலனை கருத்தில் கொண்டு வெற்றிபெறட்டும்.. துரோகிகளை இனங்காண்போம்..டெல்டா பக்கம் இந்த துரோகிகள் வந்தால் விரட்டியடிப்போம்.. .. #இனங்காண...வேண்டும் .. ஆலஞ்சி மன்சூர்..

No comments:

Post a Comment