Wednesday, October 26, 2016

கலைஞர்..ஓய்வில்

கலைஞர் ஓய்வில்.. கலைஞர் தான் உட்கொண்ட மருத்து உணவு ஒவ்வாமையால் வீட்டில் ஓய்வெடுக்கிறார். மனிதனுக்கு உடல் முடியாமல் போவது சாதாரணவிடயம் .. அதிலும் தொண்ணூறை தாண்டியவர் உடலால் பலவீனபடுவது இயற்கை .. அதை பெரிதுபடுத்தாமல் திமுக தொடர்ந்து மக்கள் நலனில் இயங்கிக்கொண்டிருக்கிறது பாருங்கள் அங்குதான் சரியாக பயிற்றுவிக்கபட்டியிருக்கிறது.. .. மருத்துவமனையையோ வீட்டியையோ கட்டிக்கொண்டு யாரும் அழவில்லை.. மாறாக தொண்டனுக்கு கட்சிகாரர்களுக்கு நிர்வாகிகளுக்கு அவரவர் பணிகளை செய்ய ஆலோசனை வழங்கி வழிநடத்திக்கொண்டுதானிருக்கிறார்.. எதேனும் எழுதிக்கொண்டும் புதிதாய் வாசித்துக்கொண்டும் இருப்பதுதான் கலைஞருக்கு ஓய்வு.. நல்ல இலக்கியம் கிடைக்கும்.கலைஞர் எப்போதெல்லாம் ஓய்வெடுக்கிறாரோ அப்போதெல்லாம் தமிழுக்கு சிறந்த படைப்புகளை தந்திருக்கிறார்... தொல்காப்பியம் பொன்னர் சங்கர், உளியின் ஓசை.. சிறிய சிறிய ஓய்வுகள் தான் தமிழின் தலைசிறந்த இலக்கியங்களை தந்திருக்கிறது.. .. இங்கே மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும்.. இயக்கத்தின் செயல்பாடுகள் தனியொரு மனிதனுக்காக நிறுத்தபடுவதில்லை.. அதனால்தான் அனைத்துக்கட்சி கூட்டம் இடைத்தேர்தல் பணிகள் .. கட்சிகூட்டங்கள் போராட்டங்கள் நடந்துக்கொண்டுதானிருக்கும்.. இங்கே அழுகுரல் கேட்காது.. உருண்டு பிரண்டு நடிக்க எங்களுக்கு தெரியாது.. மனம் சற்று கவலைக்கொள்ளும் இந்த 93 வயதிலும் தன் இன மக்களுக்காக மொழிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறாரே என்று.. இந்த வயதிலும் நல்ல ஞாபகசக்தியோடு மாபெரும் இயக்கத்தை வழிநடத்துகிற ஆற்றலோடு #செயல்பட்டு கொண்டிருப்பது தமிழன் வாங்கிவந்த,இயற்கைதந்த #வரம் ... .. #ஓய்வறியா_தமிழ்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment