Thursday, October 20, 2016

காலத்தின் கட்டாயம்

#காலத்தின்_கட்டாயம்.. வாரிசு என்ற சொல் பொதுவாழ்வில் அப்படியொன்றும் ஏற்புடையதல்ல.. ஆனாலும் சில சமயங்களில் கைத்தட்டி கரவோசையோடு வரவேற்க வேண்டியிருக்கிறது.. எனது அரசியல் வாரிசு என்று நேரடியாகவே பிரகடனப்படுத்திருக்கிறார்.. இதற்குமுன் பேராசிரியரும் ஏன் கலைஞர் கூட சொல்லியதுதான் அவையெல்லாம் கட்சியின் கூட்டங்களில் உட்கட்சியின் உரையாடல்களில் தான்.. .. நீண்டநாட்களுக்கு முன்பு அறிவித்திருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன் கொஞ்சம் காலதாமதம்.. நிறையபேர் கட்சிக்கு அப்பாற்ப்பட்டு இந்த அறிவிப்பை ரசிக்கிறார்கள் ஏன் விரும்புகிறார்கள்.. ஆலமர நிழலில் எதுவும் வளர்ந்துவிடாது என்பார்கள் அது யாருக்கு பொருந்துகிறதோ ஸ்டாலினுக்கு மிகவும் பொருந்தியது.. நீண்டகாலமாக பேசபட்டு வந்தாலும் இன்னமும் தலைமை பொறுப்பை அளிக்கவில்லை என்கிற வருத்தம்., கோபம் என்று கூட கூட்டிக்கொள்ளுங்கள் எனக்குண்டு.. செயல்தலைவராகவாவது பொறுப்பளித்திருக்கவேண்டும். .. ஒன்று தெளிவாகி இருக்கிறது இனி இதை சொல்லி கலகமூட்ட முடியாது.. வாரிசு அரசியல் என்பதை தாண்டி ஏறக்குறைய நாற்பதாண்டுக்கு மேலாக பொதுவாழ்வில் பலபடித்தரங்களை கடந்து கோபாலபுர இளைஞர் அணி தொடங்கி கட்சியின் பொருளாளர் வரை உயர்ந்து நிற்கிறார்.. நிறைய அழுத்தங்கள், விமர்சனங்கள் பாராட்டுக்கள் என வழிநெடுக காயங்களும் புகழ்மாலைகளும் கிடைத்திருக்கிறது.. முதன்முதலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் நின்று கே.ஏ. கே விடம் தோற்றபோது .. திரு.கே.ஏ. கிருஷ்ணசாமி அப்போது சொன்னார்.. மிகசிறந்த நல்ல துடிப்பான இளைஞர் ஸ்டாலின் மிகசிறந்த எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.. இந்த கே.ஏ.கே தான் எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர்..? பட்டத்தை மெரினாவில் நடந்த பொதுகூட்டத்தில் கொடுத்தவர் .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த மக்களுக்கு தொண்டாற்ற.. திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு பாசிச சக்திகளால் வரும் இடையூறுகளை தடுத்துநிறுத்திட.. காலுன்றாமல் தடுத்திட... பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை நிலைநாட்ட , சமூகநீதியை நடைமுறைபடுத்திட, சமூக நல்லிணக்கத்தை காத்திட.. வருக! வருக!! தமிழகம் காத்திருக்கிறது.. #நல்லகாலம்_பொறக்குது.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment