Tuesday, October 18, 2016
கல்நெஞ்ச காய்ச்சல்..
கடவுளுக்கு தெரியாதா..
..
மண்சோறு திங்கின்றாய்
பளபளக்கும் கிரைனைட்
தரையில் அமர்ந்து..
காவடி தூக்குகிறாய்..
உன் கண்களில் பக்தியில்லை
உடம்பெல்லாம் துளையிட்டு
ரணமாய் கிடந்தாலும்..
உன் போலித்தனம்..
அறியாமலாபோகும்..
..
மூன்று நாள்
நோன்பிருக்கிறாய்..
பசியறிதல் நலம்
பக்கத்துவீட்டில்
பசியோடு இருப்பவனை
மறந்து நடிக்கிறாய்..
உன்..
எண்ணம் ..
அழுக்காலானது..
நம்பிக்கையில்
இடைசொருகல்..
..
தேவாயவத்தில்
திருப்பலி..
உருகி வேண்டுகிறாய்..
உண்மையில் நீ..
வேண்டுவது தெய்வத்திடமில்லை
உனக்கான தெய்வத்திடம்..?
வேறொருவன் முநிதிக்கொண்டு
நம்மை முறியடித்துவிடுவானோ..
பாவம் உனது செயலை அறியாமல்
மூர்ச்சையாய்..
..
நீ.. பைத்தியகாரனில்லை
பிழைக்க வழி தேடி
பாசாங்கு செய்கிறாய்
கல்நெஞ்ச காய்ச்சல்
கடவுளுக்கு தெரியாதா
பாவம் கடவுளுக்கே
காது குத்துகிறாய்..
..
ஆசை பேராசை
நாமும் கொஞ்சம்
பிழைத்துக்கொள்ளலாம்..
ஆற்றுமணலை அள்ளி..
சின்னதாய் தனக்கொரு மாளிகை
கட்டிக்கொள்ளலாம்..
ஆயிரம் பேருக்கு
அன்னதானம் செய்துவிட்டு
அம்பது ஏக்கரை ஆட்டயபோடலாம்..
..
உண்மையில்
தீதும் வஞ்சகமும்..
மற்றவரை
இழிச்சொல்லால்
எள்ளுவதும்..
துரத்தும்.. விடாது துரத்தும்..
இனியேனும்..
நல்லதாய் சிந்தி
நாவடக்கி பேசு
ஆணவம் தவிர்..
பொய்யை மற..
உண்மையில்
உருகிவேண்டு.
கடவுள்..?
காது கொடுப்பார்.
..
கடவுளுக்கு..?
தெரியாதா..
அதுசரி
எந்த கடவுள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment