Tuesday, October 11, 2016

பெண்கள் தினம்

பெண்கள் தினம்.. தாயென்றும் மகளென்றும் தாரமெனும் இளைப்பாறும் நிழலாய் தாங்கி நிற்கும் வலிமையாய் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் சர்வம் பெண்.. ஒருவர் வாழ்வில் எல்லாபக்கங்களிலும் அலங்கரிக்கும் ஆப்பரிக்கும் அள்ளிதரும் ஆலோசனை தரும் அன்பைதரும் ஜீவன்.. பெண் வாழ்வின் மையம்.. பெண்களைப்பற்றி எழுதும் போது நினைவில் வந்துநிற்கிறார் பெரியார்.. கடுமையாக பார்பணீயத்தை எதிர்த்த போதும் பிராமண பெண்கள் மீது சமூகம் கொண்ட பார்வையை கடுமையாக கண்டித்தவர்.. விதவைகளை விலகிவைக்கும் செயலை கண்டித்த அவர் மறுமணத்தை வெகுவாக ஆதரித்தார். பெண்கள் கல்விப்பற்றி .. உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் என்றார்.. எவ்வளவு ஆழமான சிந்தனை..கூடவே .. அதற்கான வசதி உள்ளுரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது பெண்குழந்தைகளுக்கு கல்வியை கொடுங்கள் என்றார்.. பெரியார்.. இந்த சமூகம் சீர்படவேண்டுமெனில் பெண்கள் கல்வியறிவு பெறுவது அவசியம்.. இன்றைக்கு பல்வேறு துறைகளில் பெண்கள் சிறப்பாக பங்களிக்கிறார்கள் .. ஆனாலும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல் இன்னமும் தொடர்வது மிக கேவலமான ஒன்று. .. உலகளவில் கூட இன்னமும் பெண்கள் பங்களிப்பில்லாமல் எதுவும் முடியாதென்கிற நிலையில் கூட நசுக்கபடுகிறார்கள் என்பதே கவலைகுரியது.. பெண்களை இலக்கியங்களில் புகழ்ந்ததோடு சரியாகிவிட்டதாக நினைப்பதுதான் கஷ்டம்.. யதார்த்த நிலை மிகவும் கவலைக்குரியதாக அல்லது அவர்கள் உரிமைகளில் தலையிடுவதாகதான் இருக்கிறது.. பெண்களில் ஆளுமைகளே இல்லையா என கேட்டால் சொற்ப எண்ணிக்கையில் அடங்கிப்போகும்.. அரசியல் அதிகாரத்தில் இந்திரா, மம்தா,ஜெயலலிதா என இருந்தாலும் நிறைய பெண் ஆளுமைகளின் திறமைகள் அங்கரீக்கபடாமலேயே இருக்கிறது.. .. ஈரானில் தூக்கிலடப்பட்ட ரெஹானா தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் இப்படிதான் குறிப்பிட்டார் வெறும் கழிவாக இந்த பூமியில் விழ விரும்பவில்லை.. ஆம் பெண் வெறும் கேளிக்கையோ கழிவோ அல்ல.. அது #மா_தவம்_போற்றுவோம்_பெண்களை… ‍.. ஆலஞ்சி மன்சூர் புகைப்படத்தில் பேராசிரியர் மானமிகு Sylvia Nithia Kumari

No comments:

Post a Comment