Monday, October 17, 2016

அசுர இனமடா..

இராவணன் பார்பனன்.. தமிழனுக்குரிய அடையாளம் எதுவுமில்லை என்கிறார் விசிக பொதுசெயலர் இரவிக்குமார்.. கூடவே ராணவலீலா பாஜக ஆட்சியில் இருப்பதால் அதை எதிர்ப்பதற்காக நடத்தப்படுகிறது.. என்கிறார்.. .. முதலில் திரு.ரவிக்குமார் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினால் நல்லது.. விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இவர் மட்டுமே அறிவுஜீவியாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் போக்கு மிகவும் ஆபத்தானது.. கருத்து சுதந்திரம் என்பது வேறு வரலாற்று புனைவு என்பது வேறு.. .. தந்தை பெரியார் மிக தெளிவாக திராவிட ஆரியர் போரை மறைக்க திட்டமிட்டு மறைக்க தொடுக்கப்பட்ட புனைவு தான் இராமாயணம் என்பார்.. இதே கருத்தை தான் அம்பேத்கரும் கொண்டிருந்தார்.. பண்டிட் ஜவகர்லால் நேரு கூட திராவிடர்களின் மீதான ஆரிய தாக்குதலே இராமாயணமென்றார்... .. சரி எதை வைத்து இராவணனை பார்பனன் என தீர்மானித்தார் என விளக்கம் தரவில்லை.. இசையில் வல்லவனாக இருந்ததை ஒருவேளை கருத்தில் கொண்டிருக்கலாம்.. வீணை ஆரியர்களின் இசைகருவியல்ல .. இசையில் திராவிடர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எல்லாகாலகட்டங்களிலும் தனி இசையை கொண்டிருந்தார்கள்..இப்போதும் காணலாம்.. .. இராவணனை அரக்கர் இனத்தை சேர்ந்தவன் என வேதம்கற்ற விற்பன்னர்கள் சொல்லி வருகிறார்கள்.. அவர்கள் கூட ராவணனை பிராமணன் என சொல்வதில்லை.. மாறாக அசுர இனத்தவன் என்றுதான் அழைக்கிறார்கள்.. அசுரன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா.. சுரா என்றால் மது என்று பொருள் சுரர் என்றால் மது அருந்துபவர்.. #அசுரர்கள் என்றால் #மதுஅருந்தாவர்கள் என்று பொருள்.. ஒழுக்கசீலனான ராவணனை பார்பனன் என சொல்ல வருவதிலிருந்தே காவிகளின் அருகில் செல்ல நினைக்கிறார்.. இராவணனின் தந்தை பிராமணன் தாய் அசுரக்குலத்தை சேர்ந்தவள் என்ற கட்டுகதைகளை / புனைவுகளை ஒருவேளை சொல்கிறாரோ தெரியவில்லை .. #பெரியாரையே பெரிய சிந்தனையாளர் எல்லாம் இல்லையென்ற சொன்ன பேரறிவாளர்.?..தான் இந்த இரவிக்குமார்.. .. இரவிக்குமார் அவர்களே.. எங்குவேண்டுமானாலும் செல்லுங்கள் எதைவேண்டுமானாலும் சொல்லுங்கள் ஆனால் தவறானவற்றை .. தராதீர்கள்.. வரலாற்றை திருத்தி எழுதுவது புனைவுகளை சேர்ப்பது அழகல்ல .. எங்கள் புரட்சி கவிஞனின் இப்படிதான் பாடினான்.. தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன்! என்றன் சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா! அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன் குன்றெடுக்கும் பெருந்தோளான், கொடை கொடுக்கும் கையான் குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம் என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்! இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும். என்றார் #புரட்சிகவிஞர்_பாரதிதாசன்.. .. #அசுரஇனமடா_நாங்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment