Thursday, October 27, 2016

தஞ்சையின் பாசமகள்

#பாசமகள்.. தஞ்சையில் இப்படிதான் பேசிக்கொள்கிறார்கள் நம்ம பூபதி பொண்ணு.. தஞ்சை காணும் பெண்வேட்பாளர்.. வெற்றிபெற்றால் தஞ்சையின் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர்.. சரியான தேர்வாக பரவலாக பேசபடுவதை அறியமுடிந்தது. .. இதுவரை தஞ்சை கண்ட வேட்பாளர்கள் திமுக உட்பட கொஞ்சம் திமிரின் சாயல் இருக்கும் அல்லது கம்பீரம் என்ற சொல்லால் கட்டமைக்கப்பட்டிருப்பார்கள் ஆனால் முற்றிலும் மாறுபட்டு மிகவும் எளிமையானவராக தேர்தல் அரசியலை சந்திப்பதற்கு முன்பே அறியபட்டிருக்கிறார்.. எளிமை இவரது பலம்.. எளிமையென்பது எளிதில் கண்டுவிட முடியுமென்பதுமட்டுமல்ல ஏனெனில் எல்லோரையும் கூட சந்தித்திவிட முடியும் ஆனால் யாருடைய பரிந்துரையின்றி எப்போது வேண்டுமானாலும் சந்திக்க கூடியவராக இவரின் தந்தை இருந்தார் தந்தையைப்போல மகளும் எளிதில் அணுகமுடிகிறவராக இருக்கிறார் பொதுவாக இவரைபோன்றவர்களால் தொகுதி நிச்சயம் பயனடையும்.. இவர் தந்தை பூபதியை அறிவேன் பழகுவதற்கு மிக எளிமையாக எல்லோரோடும் தன்மையாக பழகுகிறவராக இருப்பார்..உரிமையோடு பேசகூடியவர்.. அதேவேளை கழகப்பணிகள் என்றால் இவரைப்போல சுறுசுறுப்பாக வேலைசெய்யமுடியாது.. .. தஞ்சை அரசியல் எப்போதுமே ஒரு சில ஆளுமைகளின் கீழ் வந்துக்கொண்டிருந்தது அதை மாற்றி கலைஞர் இவரை அறிவித்தி்ருக்கிறார்.. குறிப்பாக திமுகவினரிடையே மட்டுமல்லாது பொதுமக்களிடயேயும் நல்ல தேர்வாக கருதபடுகிறது.. இந்தமுறை அதிமுக ரெங்கசாமி அதிகளவில் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.. சென்ற பொதுதேர்தலின் போது கூட அஞ்சுகம் மீது பழிச்சொல் இல்லை. .. தஞ்சை வாக்காளர்களிடத்தில் அஞ்சுகம் சொல்வது இதுதான் திட்டமிட்டபடி தேர்தல் மே மாதம் நடந்திருந்தால் இப்பொழுது சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக்கொண்டு இருப்பேன் ஆனால் இப்போது ஆட்சியில் அதிமுக இருப்பதால் பண மற்றும் அதிகார பலத்தோடு மோதவேண்டியிருக்கிறது ஆனாலும் எத்தகைய எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொள்ளும் வல்லமையோடும் உங்களின் அன்போடும் களத்தில் நிற்கிறேன் ... மக்கள் சேவையாற்றும் ஒரே எண்ணத்தோடும் உங்களில் ஒருவராக உங்களுக்கு உழைத்திடும் உறுதியோடும் நம்பிக்கையோடும் களத்தில் நிற்கின்றேன்... வெற்றி நிச்சயம் சற்றே தாமதமாக அதேநேரம் வரலாற்று வெற்றியாக அமையப்போகிறது .. .. இடைத்தேர்தல் பணத்திற்கும் பாசத்திற்குமான தேர்தல் என பேசிக்கொள்கிறார்கள் பார்ப்போம் வெல்வது.. #பணமா_பாசமா.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment