Saturday, October 1, 2016

காமராஜர் நினைவு

#காமராஜர்.. எளிமை அரசியலில் யாவரையும் அனுசரிக்கும் அழகு.. காமராஜரை முதல்வராக விடாமல் ராஜாஜி போன்றோர் முட்டுகட்டையாக இருந்த போது பெரியார் தான் அவரை குடியாத்தத்தில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார் அப்போது அவரை திமுகவும் இ.யூ. முஸ்லீம் லீக்கும் ஆதரித்தது.. அப்படியாகதான் பிராமணர்கள் பிடியிலிருந்த தமிழக காங்கிரஸை/ அரசை சாமானியன் கைகளுக்கு கொண்டுவந்தார்.. காமராஜரை கடைசிவரை ஆதரித்த /பின்துணைத்தவர் பெரியார்.. இன்னும் பத்தாண்டுகள் காமராஜரை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள் ..தமிழகத்தை தமிழர்கள் வாழ்வை சிறந்ததாக மாற்றும் வல்லமை உள்ளவர் என்றார்.. .. அரசியலில் எதிரெதிராக களம் கண்டாலும் கடுமையாக விமர்சித்தாலும்..கலைஞர் மீது காமராஜரும் காமராஜர் மீது கலைஞரும் தீராத காதல்/அன்பு கொண்டிருந்தனர் சட்டமன்றத்தில் காமராஜரை எதிர்த்து கடுமையான விவாதம் செய்துவிட்டு வருகிறார் வரும் வழியிலேயே தன் தாயார் அஞ்சுகம் அம்மையார் இறந்த சேதி வருகிறது வீட்டுக்கு விரைகிறார் வீட்டுவாசலில் காமராஜர் நிற்கிறார் காமராஜரை பார்த்தவுடன் கண்கலங்கி கரைந்தார்.. காமராஜர் மறைந்தபோது கலைஞர் அவர்கள் தன் மூத்த சகோதரனுக்கு செய்வதைப்போல அனைத்து காரியங்களையும் கூட இருந்தே பார்த்துக்கொண்டார்.. என்றார் பெருந்தலைவரின் உதவியாளர் வைரவன் .. நிறைய எழுதிக்கொண்டே போகலாம்.. நீங்களும் நானும் நம் சந்ததியும் படிக்கவேண்டும் என்று நினைத்து இலவசமாய் கல்விதந்தானே .. அந்த பெருந்தலைவனை நினைவுகூற வேண்டாமா கிழட்டு சிங்கம் எங்கள் #பெருங்கிழவன் சொன்னதை நினைவுகூறுகிறேன் கல்வியியல் நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குபதில் காமராஜர் வாழ்த்துபா பாடவேண்டும் பொன்நாடார் பொருள்நாடார் என்ற கண்ணதாசன்வரிகளே போதும் ... காமராஜர் புகழ்பாட... .. கல்விகண்திறந்த காமராஜரை நினைவுகூர்வோம் .. #அக்டோபர்2_ .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment