Saturday, October 29, 2016

களிமண் கொட்டாரம்

என்ன நடக்கிறது அதிமுகவிற்குள். உட்கட்சி விவகாரம் என ஒதுக்கி தள்ளிவிட முடியாது ஏனெனில் ஜனநாயக கட்டமைப்பில் அல்லது சுதந்திர செயல்பாடுகளில் இயங்குகிற கட்சியல்ல மகோரா காலந்தொட்டே தனிநபர் விருப்புவெறுப்புகளுக்காக தனிநபரின் அபிலாசைகளுக்கு பணிந்து நடத்தபடும் கட்சி ..இது போன்ற கட்சிகளில் நடக்கும் விசயங்களில் எப்போதுமே ஒருவித மர்மத்தை கொண்டே இயங்கும்... .. கட்சிக்குள் என்கிற வரை அதை ஒரளவு விமர்சித்துவிட்டு போய்விடலாம் ஆனால் ஓட்டுமொத்த தமிழகத்தை பாதிக்கும் முட்டாளாக்குமெனில் கேட்க விவாதிக்க வேண்டியிருக்கிறது.. திரு.ம கோ ரா (எம்ஜிஆர்) உடல்நலிவுற்றிருந்த போது பண்ரூட்டி தன் ஜாதி சங்கத்தை வளர்தெடுக்க மரத்தை வெட்டி ரோட்டில் போட்டு தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க உதவியதைப்போல.. அதற்கு பிறகுதான் ஜாதீய சங்கங்கள் தமிழகத்தில் முழுவீச்சில் தலையெடுக்க தொடங்கின. இப்போது ஜெயலலிதா உடல்நிலையை சாக்காகவைத்து பாசிசம் தன் சிந்தனையை செயலாக்க முயல்கிறதோ என எண்ணவேண்டியிருக்கிறது.. ஏனெனில் தனிநபரின் செல்வாக்கோடு செயல்படும் கட்சிகளின் நிலை இப்படிதானாகும்.. சரியானவர்களை உருவாக்காமல் அடுத்தக்கட்ட தவைவர்களை தேர்வு செய்யமுடியாமல் போகநேரிடும்.. .. ஜெயலலிதா பூரண நலமென்று சொல்லி மக்களை நம்பவைத்து இப்போது வலது கை விளங்கவில்லை என அதிகாரபூர்வ அறிவிப்பாக தேர்தல் போட்டியிடுகிற கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தை ஒதுக்கும் B form ல் கைநாட்டு வைத்திருப்பது நிறைய சந்தேகங்களை எழுப்புகிறது..கைநாட்டு சுயநினைவோடு எடுக்கப்பட்டதா..அல்லது வேறெதாவது இதில் சூழ்ச்சிகள் உள்ளதா.. முதல்வர் எதிர்த்த உதய் மின்திட்டம் உணவு பாதுகாப்பு திட்டம்.. எந்தவித சத்தமுமில்லாமல் தமிழக அரசு ஒப்புக்கொள்வதிலிருந்தே இந்த அரசை பாஜக ஒளிந்திருந்து மிரட்டி இயக்குகிறதோ என்ற அச்சம் வருகிறது.. ஜெயலலிதாவின் அசைவுகளுக்கு மட்டுமே இயங்கிய கட்சியும் அரசும்.. இப்போது யார் கட்டுபாட்டில் என்பது விடைதெரியாத கேள்வி.. .. அதிமுக அரசியல்இயக்கமல்ல.. மாறாக அது கவர்ச்சியால் கட்டபட்ட களிமண் கொட்டாரம்.. .. #களிமண்மாளிகை_விழும்... .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment