Tuesday, October 25, 2016

தளபதி....மின்னும் தளபதி

இன்று முக்கியமான நாள். தமிழக அரசியலில் அரசியல்கட்சிகளின் #முகம் மக்களுக்குதெளிவாக தெரிந்தது... மக்கள் நலன் பொது பிரச்சனைகளில் பிற மாநிலங்களின் செயல்பாட்டிலிருந்து மாறுபட்டு பிரிந்து நிற்கிற அவலம்.. இங்கே காழ்புணர்ச்சி அரசியலில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.. MR. பொதுஜனம் உன்னிப்பாக கவனிக்கிறான்.. யார் யார் மக்களோடு இணைந்து இரண்டற கலந்து மக்களுக்காக இயக்கத்தை நடத்துகிறார்கள் யாரெல்லாம் சுயநலத்தோடுசெயல்படுகிறார்கள் என புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.. .. கர்நாடகாவில் எதிரெதிராக இயங்கும் காங்கிரஸும் பாஜகவும் தேவகவுடாவின் ஜனதாதளமும் .. சேர்ந்து பங்கெடுக்கிறது அதற்காக கூட்டணி அமைக்க போகிறார்கள் என பொருள் அல்ல.. மாறாக கர்நாடகநலன் மற்ற எல்லாவற்றையும் விட முதன்மையானது என்பதை அறிவார்கள்.. நேற்றே தா.பா அப்போலோ சென்ற போதே தங்கள் எஜமானியின் வேலைக்காரியிடம் கலந்தாலோசித்துவிட்டு வந்ததும் கம்யூனிஸ்ட் கலந்து கொள்ளாது என்பதை அறிவோம்.. பாவம் திருத்துறைப்பூண்டி போன்ற கடைநிலை விவசாயிகளை முதுகில் குத்தியிருக்கிறது இடது கம்யூனிஸ்ட் .. அந்த பகுதி விவசாய பெருங்குடிமக்கள்.. சாணியை கரைத்து அடிக்கலாம்.. இனி #கதிர்அருவாள் விவசாயிகளுக்கு தேவையில்லை கலந்து கொள்ளததற்கு திருமா சொல்லும் காரணம் கூட ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதை யாவரும் அறிவோம்.. இவர்களை மக்கள் புறக்கணித்தில் தவறில்லை .. எதிர்க்கட்சித்தவைவர் மாண்பிமை திரு.ஸ்டாலின் அதிமுக என்றில்லை எந்த கட்சி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தாலும் திமுக கலந்துக்கொண்டிருக்குமென்றார்.. அந்த பக்குவம் தலைசிறந்த தலைவனாக மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சேர்க்கும்.. வரும் காலங்களில் இன்றைக்கு வராதவர்கள் தானாக கலந்துக்கொள்வார்கள். .. தமிழக அரசியலில் சிலரை மக்கள் முழுவதுமாக புறக்கணிக்கவேண்டும்.. கட்சியின் அங்கீகாரத்தை இழந்து தனி மரமாக நிற்கிறவர்களை ஊடகங்கள் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றன.. ஊடக முக்கியத்துவம் குறைந்தால் தமிழிருவியை போல காணமல் போவர்.. இந்த உண்மையை விளங்கியிருக்கிறது தமிழகம் .. அதுவரை திமுகவிற்கு வெற்றிதான்.. .. #இனி_தளபதிதான்_தமிழகம்..

No comments:

Post a Comment