Sunday, October 23, 2016
காவிரி அனைத்துக்கட்சி கூட்டம்
அனைத்துக்கட்சி கூட்டம்..
ஆளும் அதிமுகவை விட பாஜக அதிகம் பதறுகிறது..
பொன்னரும் தமிழிசையும் ஏதேதோ அறிக்கை என்ற பெயரில் உளறிக்கொட்டுகிறார்கள்..
திமுக இதற்கு முன் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டால் நாங்களும் பங்கெடுப்போம் என்கிறார்..
திமுக மட்டும் தான் காவிரி பிரச்சனையில் துறைரீதியாகவும் அரசியல்ரீதியாகவும். . சட்டநடவடிக்கைகளின் மூலமும் சரியாக நடந்துக்கொள்கிறது/கொண்டது.. நதிநீர் ஒப்பந்தம் புதுப்பிக்கபடவில்லையென்ற குற்றசாட்டு உண்மையில்லை அப்போதிருந்த காங்கிரஸ் அரசு நீதிமன்றத்தை அணுகியதும் பேச்சுவார்த்தைக்கு வரமறுத்ததும் காவிரி பிரச்சனையை கவனமாக உற்றுநேக்குபவர்கள் அறிவார்கள் .. திமுக ஆட்சிக்கு பிறகு ஆட்சிக்குவந்த எம்ஜிஆர் காவிரி விடயத்தை கண்டுக்கொள்ளவே இல்லை.. முல்லை பெரியாரில் கூட கேரளத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்..
..
காவிரி விடயத்தில்
திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நடுவர் மன்றத்தை மரியாதைக்குரிய வி.பி.சிங் அவர்களை கொண்டு அமைத்தது ..அப்போது நடுவர் மன்றத்தால் எந்த பிரயோசனமும் இல்லையென்றவர் தான் ஜெயலலிதா.. இடைக்கால நிவாரணமாக 250 டிஎம்சியை நடுவர் மன்றம் அறிவித்த போது அதையும் எதிர்த்தார்.. அதுமட்டுமல்ல நடுமன்ற இறுதி தீர்ப்பையும் எதிர்த்தவர்தான் ஜெயலலிதா..
இது நடந்தபோதெல்லாம் பொன்னர் யாரென்றே தமிழகமக்களுக்கு தெரியாது..
..
அதிமுகவை விட மதிமுகவின் கோபாலும் பாஜகவின் பொன்னரும் தமிழிசையும் தான் அதிகம் பதறுகிறார்கள்.. மக்களால் புறக்கணிக்கப்பட்ட சொந்த கட்சியையே கட்டி காப்பாற்ற முடியாமல் நாளுக்குநாள் கட்சியினர் வெளியேறி கொண்டிருப்பது கூட அறியாமல் இன்னமும் கட்சித்தலைவர் போல் பேசிக்கொண்டு திரியும் கோபால் .. அரசியல்அவமானம்... இப்ப நெடுமாறன் திமுக அரசியல் உள்நோக்கத்தோடு செய்கிறது யார் இவர் .. இலங்கை தமிழர்களை வைத்து பிழைத்து கொண்டிருக்கும் இவரிடமெல்லாம் கருத்து கேட்பதே தவறான செயல்..
இவர்களை மக்கள் ஏற்கனவே புறக்கணித்துவிட்டார்கள்.. ஊடகங்களும் புறக்கணிக்கவேண்டும்.. லெட்டர்பேட்களை காரியமாக்க தேவையில்லை
..
இவர்களை போன்ற நாலாந்தர அரசியல்வாதிகளின் எதிர்ப்பிலிருந்தே திமுக சரியாக பயணிப்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது.
..
#திமுக_சரியானதிசையில்…
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment