Sunday, October 30, 2016
திமுக.. எஃகுகோட்டை
அழகிரி சந்திப்பு..
கலைஞரை அழகிரி சந்தித்ததும் ஊடகங்கள் உற்சாகம் அடைந்தன .. கனிமொழி காய் நகர்த்துகிறார் .. அவர்தான் கலைஞர் அழகிரி சந்திப்பின் பின்னில். இப்படியெல்லாம் எழுதி ஏதேனும் கலகமூட்ட முடியாமா என பார்க்கின்றன..
ஏற்கனவே மிகதெளிவாக பெற்றோரை பார்க்க மகன் வீட்டிற்கு வருவதில் எந்த தடையுமில்லையென தெளிவாக கலைஞர் சொல்லியிருக்கிறார்..
..
ஏற்கனவே அழகிரி பின்னால் சென்று அவரை உசுப்பேற்றி அவரை குழந்தைத்தனமாய்.. தலைவர் பதிவிக்கே போட்டியிடுவேன் என்றெல்லாம் போகிறபோக்கில் ஊடகத்திடம் சொல்லிவிட்டு போக கடைசியில் நிற்க இடமில்லாமல் போனகதையாக
திமுகவிலிருந்து நீக்கப்பட்டு கடைசியில் எந்த தொண்டனும் கண்டுக்கொள்ளாமல்..சீந்துவாரற்று போகவேண்டியிருந்தது.. இப்போது கனிமொழியை காவுக்கொடுக்க ஊடகங்கள் தயாரெடுக்கின்றன..
..
ஸ்டாலின் வளர்ச்சி ஒற்றை இரவில் வந்ததல்ல ஏறக்குறைய நாற்பத்தைந்துகால அரசியல் வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சம் செதுக்கப்பட்டிருக்கிறார்.. அடிமட்ட தொண்டனின், இயக்க முன்னோடிகள் திமுகவை விரும்புகிறவர்களின், ஏகோபித்த ஆதரவை பெற்று இன்று தமிழகத்தின் நம்பிக்கையாக உயர்ந்து நிற்கிறார்.. கலைஞரோடு திமுகவை சிதைத்துவிட எண்ணியவர்களின் எண்ணத்தில் இடிவிழுந்ததைப்போல, தளபதி ஸ்டாலின் அவர்களின் வளர்ச்சி எதிராளிகள் அனைவரையும்
அசரவைத்திருக்கிறது..
..
அழகிரியை கொம்பு சீவி எதேதோ செய்து பார்த்தார்கள்..நடக்காமல் போனது..காரணம் இதுதான் அதிமுக போல தனிநபர் துதிபாடுதல் அல்லது வழிநடத்தல் அல்ல திமுக இங்கே பொதுக்குழுவில் தலைவரையே கேள்விக்கேட்க கருத்தை சொல்ல முடியும்.. சேலம் வீரபாண்டி போன்றோரெல்லாம் எதிர்கருத்தை பதிவுசெய்து அதற்கு விளக்கமளித்திருக்கிறார் கலைஞர்.
..
திமுகவை மட்டுமே குறிவைத்து தாக்குவதின் நோக்கம் நமக்கு புரியாமல் இல்லை.. அதிமுக போன்று பாசிசத்திற்கு வழங்கிநிற்கும் செயலை இங்கே காணமுடியாது.. சமூகநீதிக்கான தொடர்பயணத்தில் இருந்து பிறகோட்டு செல்லும் நிலையில்லை .. இடஒதுக்கீடு போன்ற விடயங்கள் சமூகத்தின் அடித்தட்டுமக்களின் நலன் போன்றவைகளில் உரத்துநிற்கும் செயல் இவையெல்லாம்.. உயர்தட்டு சிந்தனையாளர்களும் சிம்மசொப்பனமாய் இருக்கிறது.. அதனால் தான் திமுகவை தொடர்ந்து நசுக்க அல்லது சலசலப்பை உண்டுசெய்ய நினைக்கிறது..
..
திமுகவில் குடும்பத்தினரின் ஆதிக்கம் என்ற பழைய பல்லவியை பாடி கலகமூட்டுகிறார்கள்.. யாராக இருந்தாலும் ஒருபகுதிவரை கலைஞரின் பிள்ளைகள் என்பது பலம் சேர்க்கலாம் ஆனால் தொடர்ந்து வந்து துணை செய்யாது.. கஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியைப்போல முயாலம்சிங்கின் சமாஜ்வாடியைப்போல அல்ல திமுகவின் கட்டமைப்பு தனிநபரால் அமைக்கப்பட்டதல்ல..
இங்கே அடிமட்டம் தொடங்கி ஜனநாயகத்தை / போட்டியை காணலாம் கருத்தொற்றுமை /வேற்றுமை எல்லாம்உண்டு.. தேர்தல் கமிஷனராக இருந்த டி.என்.சேஷன் சொன்னதைப்போல இந்தியாவில் ஜனநாயக கட்சி என்றால் அது திமுக. இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் ..
#திமுக_ஜனநாயகஇயக்கம்.. கீறல்கள் விழலாம் உடைத்தெறியமுடியாது.
..
#திமுக_எஃகுகோட்டை..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment