Sunday, October 30, 2016

திமுக தலைமைக்கு..

திருபரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் .. ஸ்டாலின் பேச்சு.. பழைய கலைஞர் கருணாநிதியின் பேச்சைப்போல காண்கிறேன்.. நிறைய உட்கட்சி சலசலப்புக்கள் இருக்கும் நிறைய பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பார்கள் மனகசப்புக்கள் வரும் ..ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கு கலைஞர் வருவார்.. வேட்பாளர் பெயரைச்சொல்லி இவர்தான் அதிகாரபூர்வ வேட்பாளர் என்பார் அதன் சூட்சமம் புரிந்து அனைவரும் செயலாற்றுவார்கள். அதேபாணியை ஸ்டாலின் கையிலெடுக்கிறார்.. #மகிழ்ச்சி.. .. கட்சி தலைமைத்துவம் இப்படிதான் இருக்கவேண்டும் ஒரு ஜனநாயக கட்சியில் நிறைய கருத்தொற்றுமையும் வேற்றுமையும் வரும் ஆனால் அவையெல்லாம் தலைமையின் அறிவிப்பிற்கு பின் மாறிவிடும் .. அறிவிக்கிற தலைமைக்கு கட்டுபட்டு நடக்க.. சரியான நேரத்தில் சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து .. சிலர் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சனையை உண்டு செய்வதை அறிந்து தலையில் குட்டுவைக்கிற செயல் இதில் #தயா எல்லாம் பார்க்கமுடியாது கூடாதும்கூட.. .. சரியானவரை தான் இயக்கம் தயார் செய்திருக்கிறது.. கட்சியின் தலைவராக மட்டுமல்ல தமிழகம் கண்ட காணுகிற சிறந்த தலைவர்களில் /தலைமைகளில் ஒருவர் திரு.ஸ்டாலின்.. மக்களோடு மக்களாக அவர்களோடு இணைந்து பணியாற்றுகிறவரே சிறந்த தலைமைத்துவத்தை பெற முடியும்.. அணைக்கிறபோதும் சில நேரம் அதட்டியும் சிலநேரம் கடுமையாகவும் சிலநேரம் கனிவோடும்.. காரியத்தில் கண்ணாகவும் செயல்படுவரே சிறந்த தலைவருக்கான தகுதியை பெறுகிறார்.. நிச்சயமாக நம்பிக்கையோடு தைரியமாக சொல்லலாம்.. தளபதி சிறந்த தலைமையை தருவார்.. .. அண்ணாவிற்கு பிறகு நாவலர் போன்றவர்கள் தலைமை பொறுப்பிற்கு வந்திருந்திருந்தால் இயக்கம் சிதறுண்டு போயிருக்கும்.. பாசிச சக்திகளின் வேலை எளிதாகியிருக்கும்..என எண்ணுவதுண்டு.. இப்போது கலைஞருக்கு பின் #மற்றவர்கள் தலைமை பொறுப்பிற்கு வந்தால் நினைக்கவே முடியவில்லை.. நல்லவேளை சரியானவர் தேர்வாகிறார்/தயாராகிறார்.. #மகிழ்ச்சி.. .. #கனிவும்_கண்டிப்பும்_தலைமையின்பண்புகள்_பெரும்மகிழ்ச்சி.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment