Saturday, October 1, 2016

சசிகலா ஆளுமை

நான் முற்றிலுமாக மாறுபட்டவன் இவரின் செயல்கள் கொள்கைகள் எதிலும் எனக்கு உடன்பாடில்லை ஆனாலும் சொல்கிறேன்..சிறந்த ஆளுமை இவர்.. #சசிகலா.. கடந்த பத்து நாட்களாக முதல்வரை சசிகலா தவிர யாரும் பார்க்கவில்லை என தந்தியின் பாண்டே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.. யாரும் இவரை கேள்வி கேட்கவில்லை.. அமைச்சர் தொடங்கி ஆளுநர் வரை யாரும் இவர் யாரென கேள்வி எழுப்பவில்லை.. .. இந்த மன்னார்குடி தமிழச்சியின் ஆளுமை கண்டு உண்மையில் மகிழ்ச்சி.. ஒருவேளை தஞ்சாவூர்காரன் என்பதாலா என கேட்டால் பதில் இல்லை.. கொஞ்சம் பின்னோக்கி செல்லவேண்டும்.. திராவிட இயக்கம் தங்கள் சித்தாந்தத்தை சிதைத்துவிடுமென அஞ்சி மிக சாதூர்யமாக மகோரா வை இயக்கத்திற்குள் புகுத்தினார்கள் அவரின் கவர்ச்சியால் மெல்ல சிதைத்து திராவிட கொள்கைகளில் சிறு சலசலப்பை உண்டாக்கி மெல்ல காலூன்றுவதே அவர்கள் எண்ணம்.. அது ஒருவகையில் கைகூடியது.. மகோராவிற்கு பின் தங்கள் இனம் சார்ந்தவரை அனுப்பி முழுவதுமாக தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரவேண்டுமென்பதே அவர்களின் திட்டமாக இருந்தது அதுவும் செயலானது.. மெல்ல ஜெயலலிதாவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து தங்களின் எண்ணம் சித்தாந்தம் கொள்கையை .. நிலைநாட்ட எண்ணி செயல்பட்டார்கள்.. அதில் தான் இடிவிழுந்தது... ஜெயலலிதாவின் நிழலாய் பின் தொடர்ந்து சசிகலா எனும் பிம்பம் விஸ்வரூபமெடுக்குமென யாரும் எதிர்பார்க்கவில்லை.. இடையில் சிலர் தலையிட்டு சசிகலாவை ஜெயலலிதாவிடமிருந்து பிரித்தனர்.. சோ போன்றோரின் பெரும் முயற்சி சிறிது பலனளித்தது அது நீண்டகாலம் தொடர முடியவில்லை. மீண்டும் சசிகலா.. ஜெயலலிதாவோடு சேர்ந்தார்.. மொத்தத்தில் முழுகட்டுபாடு என்ற தங்களின் விருப்பம் சிதைந்து போனது..காரணம் எல்லாவற்றையும் விழுங்கும் #திமிங்கலம் என அறியாமல் போனார்கள்.. .. ஒருவகையில் மகிழ்ச்சி.. ஜெயலலிதா பேர் சொல்லி எங்கே #சோ போன்ற பாசிசத்தின் கையில் அதிகாரம் செல்லாமல் .. மன்னார்குடி அத்தாச்சியின் விரலசைவில்/கட்டுபாட்டில் கட்சியும் அரசும் அமைச்சர்களும் இருப்பதில் மகிழ்ச்சி.. நமக்கு விரும்பமில்லையெனினும்,. அதை கடுமையாக எதிர்ப்பவர்கள் நாம்... அதிமுகவின் கொள்கை செயல்திட்டங்கள். . அமைச்சர் முதல் அடிமட்ட தொண்டன் வரை மூடர்களாகவே/ அடிமைகளாக வைத்திருக்கும் செயல் ..எல்லாவற்றையும் வெறுத்தும் எதிர்த்தும் நின்றாலும்... ஜெயலலிதா உடல்நிலையை காரணம் காட்டி .. எங்கே ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளின் கையில் அதிகாரம் செல்லாமல் காத்து நிற்கிறார்..சசிகலா.. .. சசிகலாவின் கண்ணசைவில் தான் காரியங்கள் நகர்கின்றன.. கட்சியின் முழு கட்டுபாட்டையும் கையில் வைத்திருக்கிறார் அவரை மீறி அரசின் அமைச்சர்கள் கூட செயல்படமுடியாது.. யாரும் கேள்வி கேட்க முடியாது..மொத்தத்தில் அவர்தான் #அதிமுகவின்_ஆளுமை Personality .. சிறிய தகவல்.. சசிகலா நடராஜன் திருமணத்தை கலைஞர்தான் நடத்திவைத்தார். .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment