Thursday, October 20, 2016
சிப்பெட்..
எனக்கு இந்த ஆட்சியாளர் மீது வருத்தமெல்லாம் இல்லை.. அவர்களை சொல்லி பலனுமில்லை ..
வாக்கை விற்றபிறகு நம்மை நம் உரிமை லீசிற்கு lease குத்தகைக்கு எடுத்தவனிடம் எதுவும் கேட்க முடியாது..
..
சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றுகிறார்கள்.. தமிழகத்தின் லாபம் தரும் பொது நிறுவனங்கள் கொள்ளை போகிறது.. சேலம் உருக்காலை தொடங்கி இதோ சிப்பெட் வரை.
பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியை வழங்குகிற தன்னாட்சி நிறுவனம்..
1968 ல் திமுக ஆட்சியில் தொடங்கபட்ட இந்த நிறுவனம் 28 மையங்களோடு செயல்படுகிறது..
அதுமட்டுமல்ல 14 உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான படிப்பும் உண்டு சென்ற ஆண்டு மட்டும் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இங்கே பயின்று /பயிற்சிபெற்று பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் ..
இவையெல்லாம் மத்திய அரசின் தொழில்துறை அறிக்கையில் உள்ளது.
.
ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் டெல்லிக்கு மாற்ற போவதாக சொல்லி திமுக தலையிட்டு தடுத்துநிறுத்தியது.. இப்போது கர்நாடக அனந்தகுமார் தான் ரசாயணத்துறை அமைச்சர்.. நம் மீது பகைக்கொண்டு தமிழகத்திலிருந்து டெல்லிக்கு நகர்த்த துடிக்கிறார்.. ஆட்சியாளர்கள் உறக்கத்தில்.
தமிழக நலன் மீதான வெறுப்பின் பார்வையை பாஜக அரசு கொண்டிருக்கிறதோ என சந்தேகம் வருகிறது.. சேலம் உருக்காலையை தனியாருக்கு கொடுக்க மோடி அரசு துடிக்கிறது..
பொதுத்துறை நிறுவனங்களில் தமிழகத்தில் செயல்படுபவை தான் அதிக லாபத்தோடு செயல்படுகிறது.. இதில் கூட பாஜக அரசு கடுமையான போக்கை கொண்டிருப்பது சரியல்ல
..
இங்கே ஆட்சியும் இல்லை அதிகாரமும் இல்லை..
பூசணிக்காய் உடைப்பதிலும் மருத்துவமனை வாசலில் தீபாராதனை செய்வதையும்.. பாத்தியா ஓதுவதிலுமே அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலை சரியாக இருக்கிறது..
வேறுவழியின்றி எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து பணியாளர்கள் முறையிடுகிறார்கள்.. எனக்கென்னவோ திமுகதான் ஆட்சியில் இருப்பதாக தோன்றுகிறது..
இதுபோன்ற சூழலில் திமுகவை தவிர வேறு யாரும் கைகொடுக்க முடியாதென்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது.
..
நாம் செய்ய சிறிய தவறு ஒட்டுமொத்த தமிழகத்தின்
நலனை உரிமை எப்படி பாதிக்கிறது பாருங்கள்..
எய்ம்ஸ் மருத்துவமனை இல்லை.. சேலம் உருக்காலை தனியாருக்கு சிப்பெட் தலைமையகம் டெல்லிக்கு.. சொல்லிக்கொண்டே போகலாம்..
யாருக்கு வாக்களிப்பது என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பது தெரிய வேண்டும்..
இல்லையெனில்.. இதுதான் நடக்கும்..
..
#அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
என்றான் வள்ளுவன்
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலாற்ற அனுமதிக்க கூடாது..
அப்படி அனுமதித்தால்..
இப்படிதான் நடக்கும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment