Monday, October 3, 2016

காவிரி மேலாண்மை கனவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமுடியாது மத்திய அரசு .. சிலர் பச்சை துரோகம் என செய்திகளை வெளியிடுகிறார்கள்.. எப்போது மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட்டது.. மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு காவிரியில் தமிழகம் உரிமை கோரமுடியாது என்ற போது நடுநிலையோடு நடந்து கொண்டாரா அல்லது மத்தியஅரசு அவரை கண்டித்து தன் நடுநிலையை பறைசாற்றியதா என்ன..? தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீரங்கத்து நிர்மலா சீதாராமன் கர்நாடக எம்பிகளோடு சேர்ந்து நிர்வளத்துறை அமைச்சரை சந்தித்தாரே அப்போது தெரியாதா இந்த தமிழ்பேசும் ஆரியச்சிக்கு ..நடுநிலையோடு செயல்படவேண்டுமென்று... இருமாநிலத்தை சேர்ந்தவர்களோடு பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என உச்சநீதிமன்றம் சொன்னபோது நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கர்நாடக முதல்வரின் அறிக்கையை வாசித்து கைவிரித்தபோது தமிழகமும் இந்தியாவில்தானியிருக்கிறது என்ற உண்மையை மறந்து போனாரா.. .. ஏற்கனவே இவர்களின் செயல்கள் நாம் அறிந்ததுதான் எப்போதும் போல் நாடகமாடுவது பாஜக அரசிற்கு கைவந்த கலை போட்டோஷாப் அரசு நடத்துபவர்களிடம் வாய்ச்சொல் வீரர்களிடமும் இறையாண்மையை எதிர்பார்க்கமுடியாது.. இதே நேரம் திமுக ஆட்சியில் இருந்தால் எம்.பிக்களை வைத்து அழுத்தம் தந்திருக்கும் .. இப்போதிருக்கிற அரசிற்கு பெரியளவில் நாட்டமில்லை.. தங்கள் மீதுள்ள வழக்குகளிலிருந்து எப்படி உருவி வெளியேறலாம் என்றுதான் நினைக்கிறது.. 50 எம்பிக்கள் தமிழகத்திற்கான திட்டங்கள்/உரிமைகள், தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற/அடையமுடியும்.. என்ன செய்வது விவரகேடுகளை அனுப்பியிருக்கிறோம் .. #அடிமாடுகள்_உழவிற்குஉதவாது.. .. ஆலஞ்சி மன்சூர்..

No comments:

Post a Comment