Monday, October 3, 2016
ஜெயலலிதா.. உண்மைநிலை
#முரண்கள்..
முதல்வர் அபாயநிலையை தாண்டிவிட்டார்
மயிலாப்பூர் மாலினி பார்த்தசாரதி.. நன்றியும் மகிழ்ச்சியும்..
..
ஆனால் இதுவரை அப்போலோ நிர்வாகம் முதல்வர் அபாயநிலையில் இருந்தார் என்பதை நாட்டுமக்களுக்கு அறிவிக்கவில்லையே ஏன்..
அரசோ அரசு நிர்வாகமோ முதல்வர் அபாயநிலையில் இருந்தார் என எந்த அறிக்கையிலும் விளக்கவில்லையே ஏன்.
அப்போலோ மீதான நம்பிக்கையை பொய்யாக்கியிருக்கிறது.... அப்படியெனில் ஏன் மூடிமறைக்கவேண்டும்.. இதுவரை காய்ச்சல் நீர்சத்து குறைவு என்று பொய்யான தகவலை தந்து யாரை ஏமாற்றுகிறார்கள்..
..
பார்த்தசாரதிகளால் பார்க்க முடிகிற முதல்வரை ஏன் அரசின் தலைவர் என அறியபடுகிற ஆளுநரால் சந்திக்கவோ /பார்க்கவோ முடியவில்லை.. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூட பார்க்க அனுமதியில்லை என கூறப்படுகிறது.. சிகிச்சை எடுத்துக்கொள்வது பெண் என்பதால் ஆண்கள் அனுமதியில்லையென்றால் சோ மட்டும் வந்து சென்றாரே எப்படி..
..
இன்னமும் கூட நிறைய ஊகங்களை தான் ஊடகங்களும் வேண்டப்பட்டவர்களும் தருகிறார்கள். உண்மை நிலையை வெளிப்படையான அறிக்கை மூலம் யாரும் தருவதில்லை.. தினம் தினம் தவறான தகவல்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிற வகையில் உலவும் போதும் .. இல்லை முதல்வர் நல்லநிலையில் இருக்கிறார்.. உணவருந்தினார் அரசு அதிகாரிகளோடு கலந்தாலோசித்தார்.. காவிரி விடயத்தில் ஆலோசனைகளை வழங்கினார் என செய்திகள் தொலைகாட்சிகளிலும் நாளிதழ்களில் வந்ததே அதெல்லாம் பொய்யா.. முதல்வர் ஆலோசிக்காமல் அதிகாரிகள் அமைச்சர்கள் யாரிடம் ஆலோசனை பெற்றனர்.
இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது..
முதல்வர் உடல்நிலையை காரணம் காட்டி யாரோ திரைமறைவில் களிக்கின்றனர்..
யார் அவர்கள்.. முன்னுக்குப்பின் முரணான தகவலை பரப்புகிறார்கள்..
என்பதை அறிந்துக்கொள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு உரிமை இருக்கிறது..
..
என்ன நடக்கிறது..
நாடகமாடுவது யார்..
..
ஆலஞ்சி மன்சூர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment