Thursday, October 20, 2016
எய்ம்ஸ்....
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில்
ஏற்ற இடமில்லை ..
ஆனால் ஆந்திராவில் அல்லது கர்நாடகாவில் இடமிருக்கும்.. கழிவுகளை கொட்டுவதற்கும்.. அணுஉலைகளை நிறுவுவதற்கும்..இங்கே தாராளமாக இடமுண்டு..
..
கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டியிருக்கிறது காங்கிரஸ் ஆட்சியில் மத்திய பல்கலைகழகத்தை திருவாரூரில் நிறுவ முடிந்தது.. புதிய இரயில்களை தமிழகத்திலிருந்து இயக்கமுடிந்தது..எந்தவொரு திட்டமானாலும் அது கடல்சார் பல்கலைகழகமாகட்டும்...எதுவானாலும் தமிழகத்தின் கருத்து ஏற்கப்பட்டது.. இப்போதெல்லாம் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்க படுகிறது .. அதை இங்குள்ள தமிழர்கள் வரவேற்கிறார்கள் என்பதுதான் கொடுமை.. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டும் தண்ணீர் கிடைத்துவிடுமா என ஆளும்கட்சிகாரனே கேட்கிறான்.. ஏன் நடப்பாக்கவில்லையென்று கேட்டால் உடனே தீபாவளிக்கு கலைஞர் ஏன் வாழ்த்து சொல்வதில்லை என பழைய பல்லவியை பாடுகிறான். பொங்கலுக்கு வாழ்த்துச்சொல்லவில்லையா.. எங்கள் இனத்தவனை கொன்றுவிட்டு வடகத்தியன் கொண்டாடுகிறான் அதை ஏன் நாங்கள் கொண்டாடவேண்டுமென்று யோசிக்கவே மறுக்கிறான் .. கைரளியர் (மலையாளிகள்) ஓணத்தை போல தீபாவளி கண்டுக்கொள்வதில்லை.. ஏன் பார்பான் பொங்கலை கொண்டாடவில்லையென இங்கே யாரும் கேட்பதில்லை..
..
திமுக அதிகாரத்தில் இருந்த போது தமிழகத்திற்கான திட்டங்கள் எதுவும் கைமீறிப்போனதில்லை.. இப்போது ஆட்சி செய்பவர் தன் நலம் மட்டுமே பார்பதால்.. தன் தலைக்கு மேலே உள்ள கத்தி விழுந்துவிட கூடாது என எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பதால் நாட்டின் வளர்ச்சிப்பற்றிய அக்கறை சிறுதும் கொள்வதில்லை.. பல்நோக்கு மருத்துவமனையின் அவசியம் ஆட்சியாளர் அறிந்திருக்கவில்லையா
ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி புதுக்கோட்டை நகரம் காஞ்சீபுரம் மதுரை தோரப்பூர்
என தேர்வு செய்திருப்பதாக பிப்ரவரி 16 லேயே கடிதமெழுதியிருந்தார் .. கடிதத்தோடு முடிந்து விட்டது.. எந்த விடயமாக/ பிரச்சனையாக இருந்தாலும் கடிதம் எழுதுவதோடு காரியத்தை முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்..
டெல்லி குப்பைகளில் தமிழகம்.
..
ஆளுமையில்லாத தலைமையால் தமிழகம் பிறகோட்டு போகிறது..
#வெகுபின்னில்...
..
#நமக்கு200ரூபாயும்லெக்பீஸ்பிரியாணியும்போதும்
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment