Friday, September 30, 2016
நிழலாட்சி..
அரசு நிர்வாகத்தை ஆளுநர் ஏற்கவேண்டும் ..
கலைஞர்..
சிலர் எப்படி சொல்லலாம் ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கிற செயல் .. திமுகவின் பிரதான கொள்கையான ஆளுநரின் அதிகாரமே வேண்டாமென்பதற்கு எதிரானது என்கிறார்கள்..
ஆளுநரே வேண்டாமென்பது தான் எங்கள் கொள்கை ஆனால் ஆளுநர்
இருக்கிறவரை அவரின் பொறுப்பை உணர்ந்துதான் இதுபோன்ற உண்மைகள் மூடிமறைக்கப்படுகிற அல்லது இலைமறைவு ஆட்சியை நடுத்துகிற நேரங்களில் பிறர் தலையீட்டை தடுக்கவேண்டிய பொறுப்பு ஆளுநருக்குண்டு.. அதைதான்
ஆனந்தவிகடனை மேற்கோள்காட்டி சசிகலாவும் ஷீலாவும் நிழல்கள் தான்
நிழல் ஆள மக்கள் வாக்களிக்கவில்லை ..என குறிப்பிட்டு இருக்கிறார்..
..
உண்மை அதுதான் ஜெயலலிதாவின் கையெழுத்தில்லாமல் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வருகிறது ..அது அவர்கள் உட்கட்சிவிவகாரமென்றாலும்.. தேர்தலை சந்திக்கிற மக்களிடம் வாக்கு கேட்க வருகிறவர்கள் ஜெயலலிதாவின் வேட்பாளரா என அறியவேண்டியிருக்கிறது .. ஆனால் அரசு நிர்வாகத்தை சசியோ ஷீலாவோ எடுத்து நடத்துவதென்பது சட்டவிரோதம் மட்டுமல்ல ஏற்புடையதுமல்ல அதனால் தான் கலைஞர் ஆளுநரின் தலையீடு வேண்டுமென்கிறார்..முறைபடி அதிமுக உறுப்பினர்களால் வேறொருவர் தேர்தெடுக்கபடட்டும் ஏன்
#அத்தாச்சி_சசிகலா வரட்டும் யார் வேண்டாமென்கிறார்கள்... மாறாக முதல்வரின் உடல்நிலையைப்பற்றி தவறான தகவல்கள் உலவும் போதாவது அவரின் புகைப்படங்களை வெளியிட்டு உண்மை நிலையை தெரிவிக்கவேண்டாமா..
..
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து தெரிந்துக்கொள்ள தமிழக மக்கள் விரும்புகிறார்கள் முழுமையாக குணமடைந்து விரைந்து வரவேண்டும் ஆனால் முதல்வரை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு சிலர் அரசு அதிகாரத்தை கையிலெடுத்து செயல்படுவதை ஏற்கமுடியாது..
ஆளுநர் அப்போலோ சென்று முதல்வரை காணவேண்டும்.. இதுவரை கண்டதாக சொன்னவர்களை தொடர்ந்து சிலர் மறுத்து யாரும் முதல்வரை காணவில்லை என செய்திகள் வருகிறது.. எது உண்மையென தெரியவில்லை தமிழக முதல்வரின் உடல்நிலைபபற்றிய ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்..
முழு அதிகாரமும் சசிகலாவின் கையில் இருப்பதாக செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன..அரைகுறையாக நாம் அறிந்ததுதான் என்றாலும்.. இப்போது முழுகட்டுபாட்டில் கட்சியும் அரசும் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது..
..
கலைஞர் சொன்னதிலும் காரியமிருக்கிறது..
ஆரம்பம் தொட்டே ஜெயலலிதா வாழ்க்கை / அரசியல் எல்லாவற்றிலும் நிழல்களின் சாயல் இருந்துக்கொண்டேயிருக்கிறது.. உண்மைகள் உறங்குகிறது..
#நிஜம்_வேறு_நிழல்வேறு..
#இப்போதுதமிழகத்தில்_நிழலாட்சியா_நடக்கிறது
உண்மை அறியவேண்டும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment