Monday, October 31, 2016

கைநாட்டு..

ஜெயலலிதா சுயநினைவோடு இருக்கிறார்.. என்னோடு நன்றாக பேசினார்.. டாக்டர் பாலாஜி.. இதைதான் சொல்வாரென்று எல்லோருக்கும் தெரியும்.. ஜெயலலிதா சுயநினைவோடு இல்லையென்று யாரும் இங்கே சொல்லவில்லை.. ஆனால் செயல்படமுடியாமல் இருக்கிறார் என்பதை டாக்டரின் உறுதிமொழி உணர்த்துகிறது.. இதுவரை வதந்தி பரப்பியதாக சொல்லப்பட்ட செய்தியெல்லாம் உண்மையோ என எண்ணவேண்டியிருக்கிறது.. செயல்படமுடியாமல் ஒரு முதல்வர் அவரை வைத்து பின்னிருந்து இயக்குகிறவர் யார்..? இதில் மத்திய அரசின் பங்கென்ன என்று தான் கேட்கவேண்டியிருக்கிறது.. முதல்வரால் பார்த்து பேச முடிகிறபோது ஏன் மற்றவர்களை ஆளுநர் உட்பட யாரையும் அனுமதிக்கவில்லை.. எல்லா தலைவர்களும் இரண்டாவது மாடி வராண்டாவோடு திருப்பி அனுப்புவதேன்.. டாக்டர் சந்தித்தற்கான புகைப்படம் கூட வெளியிடவில்லையே. ஏன்.. .. முதவ்வர் படத்தை வைத்து ஓட்டுகேட்போம் என்கிறார்.. படத்தை வைத்து வாக்குகேட்கும் பழக்கம் முன்பே எம்ஜிஆருக்குண்டு அதிமுகவிற்கு அதையே செய்ய நினைக்கிற போதே இவர்களின் இயலாமை நமக்கு புரிகிறது.. இந்த ஆறுமாதகாலத்தில் எதையுமே செய்யாத ஒரு அரசாய் எந்தவித முன்னேற்றமும் தமிழகம் காணாமல்.. மிகவும் பின்தங்கியநிலைக்கு அரசு நிர்வாகத்தை கொண்டுசென்றுவிட்டு ஸ்டாலின் சொன்னதைப்போல படுக்கையில் கிடக்கிற ஆட்சி. அதிகாரத்தில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் செய்யலாம்.. எதையும் வாங்கிவிடலாம்.. பணத்தால் விலைபேசமுடியுமென்கிற திமிர் .. தம்பிதுரையின் பேச்சில் தெரிகிறது.. .. ஜெயலலிதாவை பொம்மையாக வைத்து வேறாரோ இயக்க/இயங்க நினைப்பதும் அதை செயல்படுத்த அரசு நிர்வாகம் துணைபோவதும்.. டாக்டர் பாலாஜி மொழிகளிலிருந்து நமக்கு புரியும்.. டான்சி வழக்கில் கையெழுத்தே இல்லையென்று உச்சநீதிமன்றத்தில் மறுமொழி நல்கிய ஜெயலலிதா நாளை நான் தூங்கும் போதோ அல்லது சுயநினைவின்றி இருந்தபோதோ எடுத்தது என சொல்லமாட்டார் என எப்படி நம்புவது.. ஏனெனில் நேர்வழி நேர்மை உண்மை இவையெல்லாம் ஜெயலலிதா அறியாதது மறைந்த மகோரா(எம்ஜிஆர்) உடல் முடியாமல் இருந்தபோது ராஜீவ்காந்தி கடிதமெழுதி தன்னை முதல்வராக்க வேண்டியவர்தான் இந்த ஜெயலலிதா.. .. இதில் மற்றொன்று உண்டு இதுவரை முதல்வரின் மருத்துவசெலவுகள் முறையாக அறிவிக்கப்படவில்லை.. ₹1000 கோடி செலவென சில ஊடகங்கள் சொல்கிறது.. திரு.மாறன் உடல்நலிவுற்று இருந்த போது இதே ஜெயலலிதா தான் யார் வரிப்பணத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றார்.. அப்போது கலாநிதி மாறன் தன் தந்தையின் மருத்துவசெலவை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.. இப்போது ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை மாறாக தனியாரிடம் உயர்தர சிகிச்சை பெறுகிறார்.. இவ்வளவு சீக்கிரம் தமக்கு வருமென எதிர்பார்த்திருக்கமாட்டார்.. .. இப்போது கூட திரு.ஸ்டாலின் ஜெயலலிதா உடல்நிலையை காட்டி அரசியல் செய்ய தேர்தல் பிரச்சாரம் செய்ய விரும்பவில்லை என்கிறார்.. இந்த நாகரீக அரசியல் திமுகவிற்கு மட்டுமே உண்டு.. அதிமுகவிற்கு மகோரா( எம்ஜிஆர்) காலத்திலிருந்தே இல்லை.. .. #திமுக_பண்பட்ட_ஜனநாயகஇயக்கம்.. .. ஆலஞ்சி மன்சூர்

Sunday, October 30, 2016

திமுக தலைமைக்கு..

திருபரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் .. ஸ்டாலின் பேச்சு.. பழைய கலைஞர் கருணாநிதியின் பேச்சைப்போல காண்கிறேன்.. நிறைய உட்கட்சி சலசலப்புக்கள் இருக்கும் நிறைய பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பார்கள் மனகசப்புக்கள் வரும் ..ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கு கலைஞர் வருவார்.. வேட்பாளர் பெயரைச்சொல்லி இவர்தான் அதிகாரபூர்வ வேட்பாளர் என்பார் அதன் சூட்சமம் புரிந்து அனைவரும் செயலாற்றுவார்கள். அதேபாணியை ஸ்டாலின் கையிலெடுக்கிறார்.. #மகிழ்ச்சி.. .. கட்சி தலைமைத்துவம் இப்படிதான் இருக்கவேண்டும் ஒரு ஜனநாயக கட்சியில் நிறைய கருத்தொற்றுமையும் வேற்றுமையும் வரும் ஆனால் அவையெல்லாம் தலைமையின் அறிவிப்பிற்கு பின் மாறிவிடும் .. அறிவிக்கிற தலைமைக்கு கட்டுபட்டு நடக்க.. சரியான நேரத்தில் சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து .. சிலர் தேவையில்லாமல் தலையிட்டு பிரச்சனையை உண்டு செய்வதை அறிந்து தலையில் குட்டுவைக்கிற செயல் இதில் #தயா எல்லாம் பார்க்கமுடியாது கூடாதும்கூட.. .. சரியானவரை தான் இயக்கம் தயார் செய்திருக்கிறது.. கட்சியின் தலைவராக மட்டுமல்ல தமிழகம் கண்ட காணுகிற சிறந்த தலைவர்களில் /தலைமைகளில் ஒருவர் திரு.ஸ்டாலின்.. மக்களோடு மக்களாக அவர்களோடு இணைந்து பணியாற்றுகிறவரே சிறந்த தலைமைத்துவத்தை பெற முடியும்.. அணைக்கிறபோதும் சில நேரம் அதட்டியும் சிலநேரம் கடுமையாகவும் சிலநேரம் கனிவோடும்.. காரியத்தில் கண்ணாகவும் செயல்படுவரே சிறந்த தலைவருக்கான தகுதியை பெறுகிறார்.. நிச்சயமாக நம்பிக்கையோடு தைரியமாக சொல்லலாம்.. தளபதி சிறந்த தலைமையை தருவார்.. .. அண்ணாவிற்கு பிறகு நாவலர் போன்றவர்கள் தலைமை பொறுப்பிற்கு வந்திருந்திருந்தால் இயக்கம் சிதறுண்டு போயிருக்கும்.. பாசிச சக்திகளின் வேலை எளிதாகியிருக்கும்..என எண்ணுவதுண்டு.. இப்போது கலைஞருக்கு பின் #மற்றவர்கள் தலைமை பொறுப்பிற்கு வந்தால் நினைக்கவே முடியவில்லை.. நல்லவேளை சரியானவர் தேர்வாகிறார்/தயாராகிறார்.. #மகிழ்ச்சி.. .. #கனிவும்_கண்டிப்பும்_தலைமையின்பண்புகள்_பெரும்மகிழ்ச்சி.. .. ஆலஞ்சி மன்சூர்

திமுக.. எஃகுகோட்டை

அழகிரி சந்திப்பு.. கலைஞரை அழகிரி சந்தித்ததும் ஊடகங்கள் உற்சாகம் அடைந்தன .. கனிமொழி காய் நகர்த்துகிறார் .. அவர்தான் கலைஞர் அழகிரி சந்திப்பின் பின்னில். இப்படியெல்லாம் எழுதி ஏதேனும் கலகமூட்ட முடியாமா என பார்க்கின்றன.. ஏற்கனவே மிகதெளிவாக பெற்றோரை பார்க்க மகன் வீட்டிற்கு வருவதில் எந்த தடையுமில்லையென தெளிவாக கலைஞர் சொல்லியிருக்கிறார்.. .. ஏற்கனவே அழகிரி பின்னால் சென்று அவரை உசுப்பேற்றி அவரை குழந்தைத்தனமாய்.. தலைவர் பதிவிக்கே போட்டியிடுவேன் என்றெல்லாம் போகிறபோக்கில் ஊடகத்திடம் சொல்லிவிட்டு போக கடைசியில் நிற்க இடமில்லாமல் போனகதையாக திமுகவிலிருந்து நீக்கப்பட்டு கடைசியில் எந்த தொண்டனும் கண்டுக்கொள்ளாமல்..சீந்துவாரற்று போகவேண்டியிருந்தது.. இப்போது கனிமொழியை காவுக்கொடுக்க ஊடகங்கள் தயாரெடுக்கின்றன.. .. ஸ்டாலின் வளர்ச்சி ஒற்றை இரவில் வந்ததல்ல ஏறக்குறைய நாற்பத்தைந்துகால அரசியல் வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சம் செதுக்கப்பட்டிருக்கிறார்.. அடிமட்ட தொண்டனின், இயக்க முன்னோடிகள் திமுகவை விரும்புகிறவர்களின், ஏகோபித்த ஆதரவை பெற்று இன்று தமிழகத்தின் நம்பிக்கையாக உயர்ந்து நிற்கிறார்.. கலைஞரோடு திமுகவை சிதைத்துவிட எண்ணியவர்களின் எண்ணத்தில் இடிவிழுந்ததைப்போல, தளபதி ஸ்டாலின் அவர்களின் வளர்ச்சி எதிராளிகள் அனைவரையும் அசரவைத்திருக்கிறது.. .. அழகிரியை கொம்பு சீவி எதேதோ செய்து பார்த்தார்கள்..நடக்காமல் போனது..காரணம் இதுதான் அதிமுக போல தனிநபர் துதிபாடுதல் அல்லது வழிநடத்தல் அல்ல திமுக இங்கே பொதுக்குழுவில் தலைவரையே கேள்விக்கேட்க கருத்தை சொல்ல முடியும்.. சேலம் வீரபாண்டி போன்றோரெல்லாம் எதிர்கருத்தை பதிவுசெய்து அதற்கு விளக்கமளித்திருக்கிறார் கலைஞர். .. திமுகவை மட்டுமே குறிவைத்து தாக்குவதின் நோக்கம் நமக்கு புரியாமல் இல்லை.. அதிமுக போன்று பாசிசத்திற்கு வழங்கிநிற்கும் செயலை இங்கே காணமுடியாது.. சமூகநீதிக்கான தொடர்பயணத்தில் இருந்து பிறகோட்டு செல்லும் நிலையில்லை .. இடஒதுக்கீடு போன்ற விடயங்கள் சமூகத்தின் அடித்தட்டுமக்களின் நலன் போன்றவைகளில் உரத்துநிற்கும் செயல் இவையெல்லாம்.. உயர்தட்டு சிந்தனையாளர்களும் சிம்மசொப்பனமாய் இருக்கிறது.. அதனால் தான் திமுகவை தொடர்ந்து நசுக்க அல்லது சலசலப்பை உண்டுசெய்ய நினைக்கிறது.. .. திமுகவில் குடும்பத்தினரின் ஆதிக்கம் என்ற பழைய பல்லவியை பாடி கலகமூட்டுகிறார்கள்.. யாராக இருந்தாலும் ஒருபகுதிவரை கலைஞரின் பிள்ளைகள் என்பது பலம் சேர்க்கலாம் ஆனால் தொடர்ந்து வந்து துணை செய்யாது.. கஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியைப்போல முயாலம்சிங்கின் சமாஜ்வாடியைப்போல அல்ல திமுகவின் கட்டமைப்பு தனிநபரால் அமைக்கப்பட்டதல்ல.. இங்கே அடிமட்டம் தொடங்கி ஜனநாயகத்தை / போட்டியை காணலாம் கருத்தொற்றுமை /வேற்றுமை எல்லாம்உண்டு.. தேர்தல் கமிஷனராக இருந்த டி.என்.சேஷன் சொன்னதைப்போல இந்தியாவில் ஜனநாயக கட்சி என்றால் அது திமுக. இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் .. #திமுக_ஜனநாயகஇயக்கம்.. கீறல்கள் விழலாம் உடைத்தெறியமுடியாது. .. #திமுக_எஃகுகோட்டை.. .. ஆலஞ்சி மன்சூர்

Saturday, October 29, 2016

களிமண் கொட்டாரம்

என்ன நடக்கிறது அதிமுகவிற்குள். உட்கட்சி விவகாரம் என ஒதுக்கி தள்ளிவிட முடியாது ஏனெனில் ஜனநாயக கட்டமைப்பில் அல்லது சுதந்திர செயல்பாடுகளில் இயங்குகிற கட்சியல்ல மகோரா காலந்தொட்டே தனிநபர் விருப்புவெறுப்புகளுக்காக தனிநபரின் அபிலாசைகளுக்கு பணிந்து நடத்தபடும் கட்சி ..இது போன்ற கட்சிகளில் நடக்கும் விசயங்களில் எப்போதுமே ஒருவித மர்மத்தை கொண்டே இயங்கும்... .. கட்சிக்குள் என்கிற வரை அதை ஒரளவு விமர்சித்துவிட்டு போய்விடலாம் ஆனால் ஓட்டுமொத்த தமிழகத்தை பாதிக்கும் முட்டாளாக்குமெனில் கேட்க விவாதிக்க வேண்டியிருக்கிறது.. திரு.ம கோ ரா (எம்ஜிஆர்) உடல்நலிவுற்றிருந்த போது பண்ரூட்டி தன் ஜாதி சங்கத்தை வளர்தெடுக்க மரத்தை வெட்டி ரோட்டில் போட்டு தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்க உதவியதைப்போல.. அதற்கு பிறகுதான் ஜாதீய சங்கங்கள் தமிழகத்தில் முழுவீச்சில் தலையெடுக்க தொடங்கின. இப்போது ஜெயலலிதா உடல்நிலையை சாக்காகவைத்து பாசிசம் தன் சிந்தனையை செயலாக்க முயல்கிறதோ என எண்ணவேண்டியிருக்கிறது.. ஏனெனில் தனிநபரின் செல்வாக்கோடு செயல்படும் கட்சிகளின் நிலை இப்படிதானாகும்.. சரியானவர்களை உருவாக்காமல் அடுத்தக்கட்ட தவைவர்களை தேர்வு செய்யமுடியாமல் போகநேரிடும்.. .. ஜெயலலிதா பூரண நலமென்று சொல்லி மக்களை நம்பவைத்து இப்போது வலது கை விளங்கவில்லை என அதிகாரபூர்வ அறிவிப்பாக தேர்தல் போட்டியிடுகிற கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தை ஒதுக்கும் B form ல் கைநாட்டு வைத்திருப்பது நிறைய சந்தேகங்களை எழுப்புகிறது..கைநாட்டு சுயநினைவோடு எடுக்கப்பட்டதா..அல்லது வேறெதாவது இதில் சூழ்ச்சிகள் உள்ளதா.. முதல்வர் எதிர்த்த உதய் மின்திட்டம் உணவு பாதுகாப்பு திட்டம்.. எந்தவித சத்தமுமில்லாமல் தமிழக அரசு ஒப்புக்கொள்வதிலிருந்தே இந்த அரசை பாஜக ஒளிந்திருந்து மிரட்டி இயக்குகிறதோ என்ற அச்சம் வருகிறது.. ஜெயலலிதாவின் அசைவுகளுக்கு மட்டுமே இயங்கிய கட்சியும் அரசும்.. இப்போது யார் கட்டுபாட்டில் என்பது விடைதெரியாத கேள்வி.. .. அதிமுக அரசியல்இயக்கமல்ல.. மாறாக அது கவர்ச்சியால் கட்டபட்ட களிமண் கொட்டாரம்.. .. #களிமண்மாளிகை_விழும்... .. ஆலஞ்சி மன்சூர்

நாகரீக கோமாளிகள்

மோடி கௌதமியை மோடி சந்தித்தார் .. இதுவெறும் செய்தியல்ல.. மோடி என்கிற தனிநபர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் அது அவரின் உரிமை.. யாரும் கேள்வி கேட்கபோவதில்லை.. பிரதமரான மோடி கௌதமியை சந்தித்தார்.... சந்திக்க கூடாதா என்றால் இல்லை சந்திப்பதில் எந்த தவறுமில்லை.. 24 மணிநேரமும் ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதாக ஊடகங்கள் கட்டமைக்கிற பிம்பத்திற்கு சிறு ஓய்வு தேவைதான்.. குடும்பமில்லாதவரின் ஒப்பற்ற சேவையில் சிறு மனமகிழ்வு திரை கலைஞர்களை சந்திப்பதால் வருமெனில் வரவேற்போம்.. .. ஆனால்.. நாட்டின் மிக முக்கியமான இரு மாநில பிரச்சனைக்காக ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்சனையைப்பற்றி சந்தித்து முறையிட 50 எம்பிக்கள் ஒன்று சேர்ந்து சந்திக்க நேரம் ஒதுக்குங்கள் என்ற போது .. அதெற்கெல்லாம் நேரமில்லாமல் போனது.. திமுக சேர்ந்த நாடாளுமன்ற ஆளுமைகள் சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டும் இன்னமும் அதற்கான நேரமில்லை என்கிற நிலையில்.. முன்னாள் நடிகையும் இந்நாள் சமூகஆர்வலரும்(இப்படிதான் சமூகஆர்வலர்கள்உருவாகிறார்கள்) தொலைக்காட்சி (ரிக்கார்ட் டான்ஸ்) நடனபோட்டியின் நீதிபதியுமான கௌதமியை சந்தித்திருக்கிறார்.. .. ஏற்கனவே கஜோலை சந்தித்து நாட்டின் பிரதான பிரச்சனைகளை பேசியதைப்போல திருமதி.கௌதமியையும் சந்தித்து தமிழ்நாட்டின் தீர்க்கமுடியாத சிக்கல்கள் நிறைந்த விடயங்கள் குறித்து கலந்தாலோசித்தார்.. ஒரு வேளை கௌதமியின் நெருங்கிய நண்பரும் பகுத்தறிவாளருமான( என்ன பகுத்தறிவுக்கு வந்த சோதனை) திரு.கமல்ஹாசனை இந்திய தூய்மைத்திட்டத்திற்கு அழைத்ததைப்போல ஏதேனும் மாபெரும் புரட்சித்திட்டத்திற்கு தலைமையேற்க அழைத்திருக்கலாம். யார் கண்டார்கள்.. .. பாஜகவின் அருண்ஷோரி சொன்னதைப்போல விடுதலை இந்தியா மோடியைப்போல ஒரு பிரதமரை கண்டதில்லை.. என்னசெய்ய 58 இன்ச் மார்பளவு எல்லாம் தகுதியென பிரச்சாரம் செய்ததை ஏற்றுக்கொண்ட நம்மால்.. வேறெதை எதிர்பார்க்கமுடியும்.. .. #நாகரீக_கோமாளிகள் .. ஆலஞ்சி மன்சூர்

Friday, October 28, 2016

கைநாட்டு..

#கைநாட்டு.. கைநாட்டுக்களின் மீது அலாதி நம்பிக்கை/ பிரியம் எனக்குண்டு .. காரணம் படிப்பறிவில்லாவிட்டாலும் யாரையும் ஏமாற்ற தெரியாத வெள்ளந்தி மனிதர்கள்.. மிகவும் நம்பிக்கையானவர்கள்..யாரையும் வஞ்சிக்கத்தெரியாத உயர்குணம் கொண்டவர்கள் .. 95 சதவிகிதம் குணமடைந்த ஒருவரால் கையெழுத்திட முடியவில்லையெனில் #சரஸ்வதியை கைது செய்யலாம்.. பொய்யான தகவலை பரப்பியதற்காக.. பூரண குணமடைந்தவரால் ஏன் கையெழுத்திட முடியவில்லை.. அல்லது அவரது கைநாட்டை வேறு யாராவது அவருக்கு தெரியாமல் பதிவு செய்தார்களா.. கையெழுத்திட முடியாத அளவிற்கு உடல் பாதிக்கப்பட்டிருக்கிறதா.. கொஞ்சம் கூட விளக்கிசொல்லவேண்டுமெனில் #கைவிளங்காது போனதா.. நிறைய சந்தேகங்களை தருகிறது.. மக்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டியது அரசின் கடமையல்லவா.. .. இங்கே படித்தவர் ஆங்கில அறிவில் தன்னை சிறந்தவர் என கூறிக்கொண்டவர்.. உடல்நலம் குன்றி இன்று கையெழுத்து இடமுடியாத நிலைக்கு வந்திருக்கிறார்.. உண்மையில் வருத்தமே மேலிடுகிறது.. மற்றவரை கிண்டலடித்து ரசிக்கிற மனபான்மையோடு வாழ்ந்தவரை காலம் வெகுவிரைவில் பாடம் புகட்டியிருக்கிறது.. கைநாட்டு வைத்தது சுயநினைவோடுதானா என்பதை அறிவதை காட்டிலும் சிலர் அதை வைத்து நாடகமாடி ஏதேனும் சதிவலைபின்னுகிறார்களோ என்ற அச்சம் வருகிறது.. .. முழுவதுமான அறிக்கையை அப்போலோவோ அரசோ ஏன் தரமறுக்கிறது.. தனது உணவே தானே சாப்பிட்டார் என்றவர்களின் பேச்சு எந்தளவிற்கு உண்மை.. தன் கையால் சாப்பிட முடிகிற ஒருவர் ஏன் கைநாட்டு இடவேண்டும்.. எங்கோ இடிக்கிறதே.. .. என்ன செய்ய #நாமெல்லாம்விளங்காத_கைநாட்டுக்கள் .. ஆலஞ்சி மன்சூர்

கடனாளி..

₹85000 கோடி 57 பேருக்கு... சில ஆயிரங்கள் கடன் வாங்கி விவசாயம் செய்து தண்ணீரின்றி மழையும் பொய்த்துப்போய் திருப்பிதர முடியாமல் கதியற்று நிற்கிறவனை கழுத்தில் தூண்டை போட்டு இழுத்துவர முடிகிறது. அவன் சொத்தை ஜப்தி என்றுநடவடிக்கை எடுக்க முடிகிறது.. கோடிக்கணக்கில் கடன்வாங்கி ராஜ வாழ்க்கை வாழ்கிறவனை ஒன்றும் செய்யமுடியவில்லை.... விசித்திர இந்தியா.. ஆம்.. இந்திய சட்டங்கள் நேர்மையானதாய் இல்லை திட்டம் போட்டு திருடினால் இங்கே பாராட்டி பட்டமளிப்பார்கள்... .. ஊழல் செய்து கொள்ளையடித்தவன் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனைப்பெற்றாலும்.. ஆட்சியாளராக வரமுடியும்.. செம்பு திருடிவிட்டு சிறைக்கு போனால் ஓட்டளிக்ககூட அவகாசமில்லை.. ஆனால் சிறைச்சென்றவன் தேர்தலில் இரண்டு இடங்களில்போட்டியிடலாம்.. விசித்தர இந்தியா.. .. இந்தியாவின் பிரபலங்கள் மிக இலகுவாக கடன்வாங்க முடிகிறது சாமானியன் சரியான தேவைக்கு கூட கடன்வாங்க கையூட்டு கொடுக்கவேண்டியிருக்கிறது.. சில சமயம் திருப்பி தர காலதாமதமானால் மிரட்டபடுவதும் குண்டர்களை அனுப்பி தாக்குதல் நடத்துவதும் கூட நடைபெறும். இங்கே தொழில் தொடங்க கூட நம்மால் சில லட்சங்கள் கூட பெற முடியாது.. ஆனால் கோடிகளில் பணம் பெற ஒன்றும் தேவையில்லை. சாமானியன் திருப்பிகட்டாமல் போனால் வங்கிகள் பெயரை விலாசத்தோடு பகிரங்கப்படுத்தும்.. பெருத்தவர்கள் பெயர்கள் வெளிவராது அதைதான் உச்சநீதிமன்ற கேள்வி கேட்கிறது.. .. வல்லவனுக்கு இங்கே தீது இல்லை.. .. ஆலஞ்சி மன்சூர்

Thursday, October 27, 2016

தஞ்சையின் பாசமகள்

#பாசமகள்.. தஞ்சையில் இப்படிதான் பேசிக்கொள்கிறார்கள் நம்ம பூபதி பொண்ணு.. தஞ்சை காணும் பெண்வேட்பாளர்.. வெற்றிபெற்றால் தஞ்சையின் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர்.. சரியான தேர்வாக பரவலாக பேசபடுவதை அறியமுடிந்தது. .. இதுவரை தஞ்சை கண்ட வேட்பாளர்கள் திமுக உட்பட கொஞ்சம் திமிரின் சாயல் இருக்கும் அல்லது கம்பீரம் என்ற சொல்லால் கட்டமைக்கப்பட்டிருப்பார்கள் ஆனால் முற்றிலும் மாறுபட்டு மிகவும் எளிமையானவராக தேர்தல் அரசியலை சந்திப்பதற்கு முன்பே அறியபட்டிருக்கிறார்.. எளிமை இவரது பலம்.. எளிமையென்பது எளிதில் கண்டுவிட முடியுமென்பதுமட்டுமல்ல ஏனெனில் எல்லோரையும் கூட சந்தித்திவிட முடியும் ஆனால் யாருடைய பரிந்துரையின்றி எப்போது வேண்டுமானாலும் சந்திக்க கூடியவராக இவரின் தந்தை இருந்தார் தந்தையைப்போல மகளும் எளிதில் அணுகமுடிகிறவராக இருக்கிறார் பொதுவாக இவரைபோன்றவர்களால் தொகுதி நிச்சயம் பயனடையும்.. இவர் தந்தை பூபதியை அறிவேன் பழகுவதற்கு மிக எளிமையாக எல்லோரோடும் தன்மையாக பழகுகிறவராக இருப்பார்..உரிமையோடு பேசகூடியவர்.. அதேவேளை கழகப்பணிகள் என்றால் இவரைப்போல சுறுசுறுப்பாக வேலைசெய்யமுடியாது.. .. தஞ்சை அரசியல் எப்போதுமே ஒரு சில ஆளுமைகளின் கீழ் வந்துக்கொண்டிருந்தது அதை மாற்றி கலைஞர் இவரை அறிவித்தி்ருக்கிறார்.. குறிப்பாக திமுகவினரிடையே மட்டுமல்லாது பொதுமக்களிடயேயும் நல்ல தேர்வாக கருதபடுகிறது.. இந்தமுறை அதிமுக ரெங்கசாமி அதிகளவில் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.. சென்ற பொதுதேர்தலின் போது கூட அஞ்சுகம் மீது பழிச்சொல் இல்லை. .. தஞ்சை வாக்காளர்களிடத்தில் அஞ்சுகம் சொல்வது இதுதான் திட்டமிட்டபடி தேர்தல் மே மாதம் நடந்திருந்தால் இப்பொழுது சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிக்கொண்டு இருப்பேன் ஆனால் இப்போது ஆட்சியில் அதிமுக இருப்பதால் பண மற்றும் அதிகார பலத்தோடு மோதவேண்டியிருக்கிறது ஆனாலும் எத்தகைய எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொள்ளும் வல்லமையோடும் உங்களின் அன்போடும் களத்தில் நிற்கிறேன் ... மக்கள் சேவையாற்றும் ஒரே எண்ணத்தோடும் உங்களில் ஒருவராக உங்களுக்கு உழைத்திடும் உறுதியோடும் நம்பிக்கையோடும் களத்தில் நிற்கின்றேன்... வெற்றி நிச்சயம் சற்றே தாமதமாக அதேநேரம் வரலாற்று வெற்றியாக அமையப்போகிறது .. .. இடைத்தேர்தல் பணத்திற்கும் பாசத்திற்குமான தேர்தல் என பேசிக்கொள்கிறார்கள் பார்ப்போம் வெல்வது.. #பணமா_பாசமா.. .. ஆலஞ்சி மன்சூர்

Wednesday, October 26, 2016

கலைஞர்..ஓய்வில்

கலைஞர் ஓய்வில்.. கலைஞர் தான் உட்கொண்ட மருத்து உணவு ஒவ்வாமையால் வீட்டில் ஓய்வெடுக்கிறார். மனிதனுக்கு உடல் முடியாமல் போவது சாதாரணவிடயம் .. அதிலும் தொண்ணூறை தாண்டியவர் உடலால் பலவீனபடுவது இயற்கை .. அதை பெரிதுபடுத்தாமல் திமுக தொடர்ந்து மக்கள் நலனில் இயங்கிக்கொண்டிருக்கிறது பாருங்கள் அங்குதான் சரியாக பயிற்றுவிக்கபட்டியிருக்கிறது.. .. மருத்துவமனையையோ வீட்டியையோ கட்டிக்கொண்டு யாரும் அழவில்லை.. மாறாக தொண்டனுக்கு கட்சிகாரர்களுக்கு நிர்வாகிகளுக்கு அவரவர் பணிகளை செய்ய ஆலோசனை வழங்கி வழிநடத்திக்கொண்டுதானிருக்கிறார்.. எதேனும் எழுதிக்கொண்டும் புதிதாய் வாசித்துக்கொண்டும் இருப்பதுதான் கலைஞருக்கு ஓய்வு.. நல்ல இலக்கியம் கிடைக்கும்.கலைஞர் எப்போதெல்லாம் ஓய்வெடுக்கிறாரோ அப்போதெல்லாம் தமிழுக்கு சிறந்த படைப்புகளை தந்திருக்கிறார்... தொல்காப்பியம் பொன்னர் சங்கர், உளியின் ஓசை.. சிறிய சிறிய ஓய்வுகள் தான் தமிழின் தலைசிறந்த இலக்கியங்களை தந்திருக்கிறது.. .. இங்கே மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும்.. இயக்கத்தின் செயல்பாடுகள் தனியொரு மனிதனுக்காக நிறுத்தபடுவதில்லை.. அதனால்தான் அனைத்துக்கட்சி கூட்டம் இடைத்தேர்தல் பணிகள் .. கட்சிகூட்டங்கள் போராட்டங்கள் நடந்துக்கொண்டுதானிருக்கும்.. இங்கே அழுகுரல் கேட்காது.. உருண்டு பிரண்டு நடிக்க எங்களுக்கு தெரியாது.. மனம் சற்று கவலைக்கொள்ளும் இந்த 93 வயதிலும் தன் இன மக்களுக்காக மொழிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறாரே என்று.. இந்த வயதிலும் நல்ல ஞாபகசக்தியோடு மாபெரும் இயக்கத்தை வழிநடத்துகிற ஆற்றலோடு #செயல்பட்டு கொண்டிருப்பது தமிழன் வாங்கிவந்த,இயற்கைதந்த #வரம் ... .. #ஓய்வறியா_தமிழ்.. .. ஆலஞ்சி மன்சூர்

தளபதி காலத்தின் தேவை

நாத்திகம் பகுத்தறிவு ‍ ... பெரியார் சொல்கிறார் எனக்கு கடவுள் மீதெல்லாம் கோபமில்லை .. இந்த சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை கலைய வேண்டும் என எண்ணினேன்.. அது ஜாதீய கட்டமைப்புக்குள் என்றார் ஜாதியை ஒழிக்கலாமென்றேன் அது மதத்திற்குள் என்றார் மதத்தை புறக்கணிப்போம் என்றேன் அது கடவுளின் செயல் என்றார்.. அதனால்தான் நான் கடவுளை எதிர்க்கிறேன் என்றார்.. இங்கே இந்துமத கடவுளை மட்டும்தானே பெரியார் எதிர்த்தார் என்கிறார்கள்.. பிற மத கடவுள்கள் மனிதர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டு இங்கே எல்லாம் கற்பனையாக பாத்திரங்கள் என்றார்... அதே நேரம் எல்லா மதத்திலும் உள்ள மூடவழக்கங்களை எதிர்த்தார் எது அறிவு ஏற்றுக்கொள்ளவில்லையோ அதை நீ ஏற்றுக்கொள்ளாதே என்றார் அது மதம் கடவுள் கற்பனை இத்யாதி... .. ஆனால் திமுக அப்படியல்ல.. தி க விலிருந்து பிரிந்துவந்த பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்.. கடவுள் மறுப்பு அல்ல திமுகவின் கொள்கை ... .. திமுக கடவுள் மறுப்பை பிரதானமாக்கி செயல்படும் இயக்கமல்ல இங்கு நாத்திகனும் உண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவனும்,உண்டு... காரணம் தனிநபரின் செயல்பாடுகளில் விருப்புவெறுப்புகளில் இயக்கம் தவையிடுவதில்லை.. திமுகவின் பிரதான கொள்கைகளிலிருந்து மீறாமல் இந்த சமூகத்தில் நடக்கும் ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக ஒரு சிலரே எல்லா வாய்ப்பையும் தட்டிப்பறிக்கிற செயல்களுக்கெதிராக ..சமூகநீதியை நல்லிணக்கத்தை கட்டிகாக்க. நாட்டின் நலன் இன,மொழி கொள்கை கோட்பாட்டிலிருந்து மாறாத சமூகத்தில் அனைவருக்குமான உரிமைகளை பெற்று தர போராடிக்கொண்டிருக்கிறது.. .. இங்கே சிலர் ஸ்டாலின் கோவிலுக்கு போகிறார் என்கிறார்கள்.. எனக்கு கடவுள் மீதான நம்பிக்கை இல்லையென்பதற்காக அவரை போகவேண்டாமென்று சொல்ல முடியாது.. அவரின் அவரை சார்ந்தவர்களின் தனிப்பட்ட விரும்பங்களை தடைபோட முடியாது..திமுக கடவுள் மறுப்பை மட்டுமே முன்னெடுக்கிற இயக்கமல்ல.. யாரையும் கட்டுபடுத்தாத அதே வேளை திமுகவின் பிரதான கொள்கையிலிருந்து விலகி செல்வாரே ஆனால் அப்போது மிகவும் கடுமை விமர்சிப்போம்..அது மாற்று கருத்தே இல்லை.. .. இனத்தின் மொழியின் மீதான தாக்குதலை தொடுக்க முடியாதவர்கள் தொடுத்து தோல்வியுற்றவர்களின் கூப்பாடு இது. தமிழர்களின் கலாச்சார பண்பாட்டை சிதைக்க எண்ணி தங்களின் தேவைகளை மட்டுமே புகுத்தும் சிலரின் கையாலாகாததனம் தான் இந்த ஏன் ஸ்டாலின் கடவுளை கும்பிடுகிறார் என்பது.. எதிரிகள் செயலற்று நிற்கும் போதுதான் தனிநபரின் செயல்பாட்டை விமர்சிப்பார்கள்.. அது இயலாமை.. கருணாநிதியோடு திமுகவின் செல்வாக்கு முடிந்தது என எண்ணிக்கொண்டிருந்தவர்களில் எண்ணங்களில் பேரிடியாக விழுந்ததுதான் திரு.ஸ்டாலின் அவர்களின் வளர்ச்சி.. அண்ணனை கொம்பு சீவினார்கள்.. அதெல்லாம் நடக்காமல் போய் கடைசியில் தனிநபர் செயல்பாடுகளை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கதைக்கிறார்கள்.. .. திரு.ஸ்டாலின் அவர்களோடு அரசியல் செய்யுங்கள் விமர்சனம் செய்யுங்கள் எதிர்கருத்தை சொல்லுங்கள்.. கடுமையான கண்டனத்தை கூட பதிவு செய்யுங்கள் அது அவரது அரசியலாக மட்டும் இருக்கவேண்டும் .. #காலத்தின்தேர்வு_தளபதி... .. ஆலஞ்சி மன்சூர்

Tuesday, October 25, 2016

தளபதி....மின்னும் தளபதி

இன்று முக்கியமான நாள். தமிழக அரசியலில் அரசியல்கட்சிகளின் #முகம் மக்களுக்குதெளிவாக தெரிந்தது... மக்கள் நலன் பொது பிரச்சனைகளில் பிற மாநிலங்களின் செயல்பாட்டிலிருந்து மாறுபட்டு பிரிந்து நிற்கிற அவலம்.. இங்கே காழ்புணர்ச்சி அரசியலில் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.. MR. பொதுஜனம் உன்னிப்பாக கவனிக்கிறான்.. யார் யார் மக்களோடு இணைந்து இரண்டற கலந்து மக்களுக்காக இயக்கத்தை நடத்துகிறார்கள் யாரெல்லாம் சுயநலத்தோடுசெயல்படுகிறார்கள் என புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.. .. கர்நாடகாவில் எதிரெதிராக இயங்கும் காங்கிரஸும் பாஜகவும் தேவகவுடாவின் ஜனதாதளமும் .. சேர்ந்து பங்கெடுக்கிறது அதற்காக கூட்டணி அமைக்க போகிறார்கள் என பொருள் அல்ல.. மாறாக கர்நாடகநலன் மற்ற எல்லாவற்றையும் விட முதன்மையானது என்பதை அறிவார்கள்.. நேற்றே தா.பா அப்போலோ சென்ற போதே தங்கள் எஜமானியின் வேலைக்காரியிடம் கலந்தாலோசித்துவிட்டு வந்ததும் கம்யூனிஸ்ட் கலந்து கொள்ளாது என்பதை அறிவோம்.. பாவம் திருத்துறைப்பூண்டி போன்ற கடைநிலை விவசாயிகளை முதுகில் குத்தியிருக்கிறது இடது கம்யூனிஸ்ட் .. அந்த பகுதி விவசாய பெருங்குடிமக்கள்.. சாணியை கரைத்து அடிக்கலாம்.. இனி #கதிர்அருவாள் விவசாயிகளுக்கு தேவையில்லை கலந்து கொள்ளததற்கு திருமா சொல்லும் காரணம் கூட ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதை யாவரும் அறிவோம்.. இவர்களை மக்கள் புறக்கணித்தில் தவறில்லை .. எதிர்க்கட்சித்தவைவர் மாண்பிமை திரு.ஸ்டாலின் அதிமுக என்றில்லை எந்த கட்சி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தாலும் திமுக கலந்துக்கொண்டிருக்குமென்றார்.. அந்த பக்குவம் தலைசிறந்த தலைவனாக மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சேர்க்கும்.. வரும் காலங்களில் இன்றைக்கு வராதவர்கள் தானாக கலந்துக்கொள்வார்கள். .. தமிழக அரசியலில் சிலரை மக்கள் முழுவதுமாக புறக்கணிக்கவேண்டும்.. கட்சியின் அங்கீகாரத்தை இழந்து தனி மரமாக நிற்கிறவர்களை ஊடகங்கள் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றன.. ஊடக முக்கியத்துவம் குறைந்தால் தமிழிருவியை போல காணமல் போவர்.. இந்த உண்மையை விளங்கியிருக்கிறது தமிழகம் .. அதுவரை திமுகவிற்கு வெற்றிதான்.. .. #இனி_தளபதிதான்_தமிழகம்..

Monday, October 24, 2016

இனங்காண்..

அனைத்துக்கட்சி கூட்டம். மநகூ நண்பர்களோடு விவாதிப்பதாக சொல்லி காயை கம்யூ. மதிமுக பக்கம் நகர்த்தியிருக்கிறார்..திருமா அரசியல் காழ்ப்புணர்வு, விரோதம் இதையெல்லாம் தாண்டி இது மாநிலத்தின் ஜீவாதார பிரச்சனை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.. கீழ்தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் பெருமளவில் தாழத்தப்பட்டோர்கள் அவர்களின் வாழ்வியல் போராட்டம் இது விசிக வரலாற்றுப்பிழையை செய்தால் மதிமுக நிலைதான் வரும் காணாமல் போகவேண்டிவரும்.. .. திரு.பொன்னர் ஆத்திரபடுவதில் கூட நியாயமிருக்கிறது தன் தலைமைக்கு எதிரான ஆணியடித்தல் என்பதால் குதிக்கிறார் ஆனால் வைகோ திமுக மீதான பகைமையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது.. இழப்பதற்கு ஏதுமில்லை என்றானபின் முடிந்தவரை கலைப்பதென்பதை தவிர வைகோவிற்கு வேறுமார்க்கமில்லை.. கம்யூனிஸ்ட்டுகள் கீழ்தஞ்சையில் குறிப்பாக திருத்துறைப்பூண்டி போன்ற விவசாயபகுதிகளில் கொஞ்சம் செல்வாக்கோடு இருப்பவர்கள் அவர்களின் முடிவு கட்சிக்கு பலமா பலவீனமா என்பது தெரிந்துவிடும்.... ஏனெனில் இ.கம்யூனிஸ்ட் பலமென்பதே விவசாயபெருங்குடிகள் தான்.. .. வைகோ போன்ற விவரகேடுகளால் தமிழக அரசியல்கட்சிகள் ஒரே குடையின் கீழ் நின்று போராடமுடியாமல் போகும்.. கர்நாடகவில் எத்தனை கசப்பு, விரோதம் ,அரசியல் காரணங்கள் இருந்தாலும் அவையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒரே புள்ளியில் இணைந்து போராடமுடிகிறது.. மத்திய அமைச்சரே உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கெதிராக தங்களின் எதிராளி காங்கிரஸ் அரசோடு கைகோர்த்து போராட முடிகிறது..ஆனால் ஒன்றுக்கும் உதவாத மதிமுகவிற்கு முக்கியத்தும் அளித்து ஊடகங்கள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன.. தமிழக அரசியல்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வரவேண்டும்.. திமுக தோழமைக்கட்சிகளின் கூட்டமென சொல்கிறார் கோபால்.. தமாக வோ விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட்டுகள் இவையெல்லாம் திமுக கூட்டணி கட்சிகள் அல்ல.. பங்கேற்க வேண்டாமென்ற முடிவு மநகூ உடையதல்ல மதிமுகவின் நிலைப்பாடு என்கிறார் முத்தரசன்.. நல்லது வைகோவை தனிமைபடுத்துங்கள்.. அனைத்துக்கட்சி கூட்டம் நடக்ககூடாதென்ற விரும்புகிற கர்நாடகாவின் நினைப்பை வைகோ தாங்கி பிடிப்பதில் கர்நாடகாவின் ஏதேனும் பேசியிருக்கிறாரா என தெரியவில்லை.. ஏனெனில் இவரின் அஜந்தா அதுதான். .. தடைகளைமீறி அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக விவசாய நலனை கருத்தில் கொண்டு வெற்றிபெறட்டும்.. துரோகிகளை இனங்காண்போம்..டெல்டா பக்கம் இந்த துரோகிகள் வந்தால் விரட்டியடிப்போம்.. .. #இனங்காண...வேண்டும் .. ஆலஞ்சி மன்சூர்..

Sunday, October 23, 2016

இலட்சிய நடிகர்

இலட்சிய நடிகர் திரையில்.. இவன்.. மணிமகுடம்.. அழகு தமிழ்.. அற்புதம்.. சொல்லினிக்க.. பேசிய..தமிழ் மறவன்.. இவன் தமிழ் பேசினால்.. தமிழ் மீது.. காதல் வரும்.. எங்கள்.. திராவிடன் . .. பெரியார் பேசிய பெருந்தகையாளன் சமரசம் செய்யாத லட்சிய நடிகன்.. திரையில் கூட மூடம் பேசியதில்லை கொள்கையில் உறுதி எல்லோருக்கும் வரும் சறுக்கல்கள் வந்தது ஆனாலும் .. கொள்கைமாறாதவன்.. இந்திய வரலாற்றில் சட்டமன்றத்திற்குள் நுழைந்த முதல் நடிகன்.. திமுகவின் அன்பகம் இவன் தந்தது.. .. தமிழ்திரையின்.. #மணிமகுடம்.. .. #நினைவில்_அக்டோபர்24… .. ஆலஞ்சி மன்சூர்

கமல்

கமல்.. தன் பிறந்தநாளை கொண்டாடாதீர்கள் என தன் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.. அது அவரது சொந்த விடயம் அதில் கருத்துச்சொல்வதற்கு ஏதுமில்லை.. அவர் பிறந்தநாள் கொண்டாடாமல் போகட்டும் ஆனால் அவர் சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல.. முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் என்கிறார்.. முதல்வர் நலமாகி வருவதாக தகவல் வருவதை கவனிக்கவேண்டும்.. .. கமல் தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக்கொள்ளும் சிறந்த நடிகர்..எனக்கு தெரிந்து எந்த சமரசமும் செய்திக்கொள்ளாத சுத்தமான பகுத்தறிவாளன் எஸ்.எஸ். ஆர் தான்.. புராணகதாபாத்திரங்களை கூட ஏற்று நடிக்கமாட்டேன் என்று சொன்ன லட்சிய நடிகர். திரைத்துறையிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட முதல் நடிகர் இவர்தான்.. தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்தெடுக்கப்பட்டவரும் கூட. அக்டோபர்24 அவர் நினைவு நாள்.. அவரைப்பற்றி பிறகு பார்ப்போம் .. கமலில் செயல்கள் தன்னை நாத்திகராக அல்லது பகுத்தறிவாளராக வெளியில் காட்டும்.. அவரின் தசாவதாரத்தில் நீங்கள் காணலாம் கடைசி காட்சி கூட பிராமணனை உயிரோடு கடலில் மூழ்கடித்தை கடைசி காட்சியில் கரையில் கொண்டுவந்து சேர்த்து சுனாமியே அதனால்தான் என்பது போல காட்சியை அமைத்திருப்பார்.. இது ஒரு சிறு உதாரணம்தான்.. நிறைய விடயங்களில் சமரசம் செய்துக்கொள்ளும் தன் நிலையை மாற்றிக்கொண்டதே இல்லை.. தயவு செய்து அவரை பெரியாரியவாதியாக சித்தரிப்பதை விட்டுவிடுங்கள்.. சிறந்த நடிகர் என்பதில் மறு கருத்தே இல்லை அரிதாரம் கலைத்தபிறகும்.. இந்தவிடயத்தில் திரு.ரஜினி கேமராவில் முன் மட்டுமே நடிப்பவர்.. சமரசம் செய்துக்கொள்ளாத தனக்கு தோன்றியதை செய்பவர்.. கமலைப்பற்றி அவரின் துணைவியாராக இருந்த வாணிகணபதி அவர்கள் சொன்ன கருத்து இன்றைக்கும் சரியாகவே தோன்றுகிறது.. கமல் நல்லநடிகர் நல்லமனிதரல்ல.. .. #அரிதாரம்.. .. ஆலஞ்சி மன்சூர்

காவிரி அனைத்துக்கட்சி கூட்டம்

அனைத்துக்கட்சி கூட்டம்.. ஆளும் அதிமுகவை விட பாஜக அதிகம் பதறுகிறது.. பொன்னரும் தமிழிசையும் ஏதேதோ அறிக்கை என்ற பெயரில் உளறிக்கொட்டுகிறார்கள்.. திமுக இதற்கு முன் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டால் நாங்களும் பங்கெடுப்போம் என்கிறார்.. திமுக மட்டும் தான் காவிரி பிரச்சனையில் துறைரீதியாகவும் அரசியல்ரீதியாகவும். . சட்டநடவடிக்கைகளின் மூலமும் சரியாக நடந்துக்கொள்கிறது/கொண்டது.. நதிநீர் ஒப்பந்தம் புதுப்பிக்கபடவில்லையென்ற குற்றசாட்டு உண்மையில்லை அப்போதிருந்த காங்கிரஸ் அரசு நீதிமன்றத்தை அணுகியதும் பேச்சுவார்த்தைக்கு வரமறுத்ததும் காவிரி பிரச்சனையை கவனமாக உற்றுநேக்குபவர்கள் அறிவார்கள் .. திமுக ஆட்சிக்கு பிறகு ஆட்சிக்குவந்த எம்ஜிஆர் காவிரி விடயத்தை கண்டுக்கொள்ளவே இல்லை.. முல்லை பெரியாரில் கூட கேரளத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்.. .. காவிரி விடயத்தில் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நடுவர் மன்றத்தை மரியாதைக்குரிய வி.பி.சிங் அவர்களை கொண்டு அமைத்தது ..அப்போது நடுவர் மன்றத்தால் எந்த பிரயோசனமும் இல்லையென்றவர் தான் ஜெயலலிதா.. இடைக்கால நிவாரணமாக 250 டிஎம்சியை நடுவர் மன்றம் அறிவித்த போது அதையும் எதிர்த்தார்.. அதுமட்டுமல்ல நடுமன்ற இறுதி தீர்ப்பையும் எதிர்த்தவர்தான் ஜெயலலிதா.. இது நடந்தபோதெல்லாம் பொன்னர் யாரென்றே தமிழகமக்களுக்கு தெரியாது.. .. அதிமுகவை விட மதிமுகவின் கோபாலும் பாஜகவின் பொன்னரும் தமிழிசையும் தான் அதிகம் பதறுகிறார்கள்.. மக்களால் புறக்கணிக்கப்பட்ட சொந்த கட்சியையே கட்டி காப்பாற்ற முடியாமல் நாளுக்குநாள் கட்சியினர் வெளியேறி கொண்டிருப்பது கூட அறியாமல் இன்னமும் கட்சித்தலைவர் போல் பேசிக்கொண்டு திரியும் கோபால் .. அரசியல்அவமானம்... இப்ப நெடுமாறன் திமுக அரசியல் உள்நோக்கத்தோடு செய்கிறது யார் இவர் .. இலங்கை தமிழர்களை வைத்து பிழைத்து கொண்டிருக்கும் இவரிடமெல்லாம் கருத்து கேட்பதே தவறான செயல்.. இவர்களை மக்கள் ஏற்கனவே புறக்கணித்துவிட்டார்கள்.. ஊடகங்களும் புறக்கணிக்கவேண்டும்.. லெட்டர்பேட்களை காரியமாக்க தேவையில்லை .. இவர்களை போன்ற நாலாந்தர அரசியல்வாதிகளின் எதிர்ப்பிலிருந்தே திமுக சரியாக பயணிப்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது. .. #திமுக_சரியானதிசையில்… .. ஆலஞ்சி மன்சூர்

யாரை எங்கே வைப்பது...

ஆளும் கட்சி அனைத்துக்கட்சி கூட்டாவிட்டால் எதிர்க்கட்சியான திமுக அதை செய்யவேண்டும் என்று சொன்னவர் திருமா.. என்ற நெறியாளர் கேள்விக்கு இப்போது அதற்கான சூழல் இல்லை ..என்றார் விசிக பொதுசெயலர் ரவிக்குமார்.. .. இப்போது சூழல் மாறிவிட்டதா கர்நாடகம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டதா..காவிரியில் தண்ணீரை முழுமையாக நமக்கு தரவேண்டிய அளவு திறந்துவிட்டதா.. அல்லது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுவிட்டதா.. இவையாவும் நடக்காதபோது திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ளமாட்டோம் என நேரடியாக சொல்லாமல் அதற்கான சூழல் இப்போதில்லை என்பது கடைந்தெடுத்த #அயோக்கியத்தனம்.. திரு.பொன்னாரை சந்தித்ததின் விளைவு என்றெல்லாம் கூற தேவையில்லை.. ஏற்கனவே பாஜகவோடு கைகோர்க்கும் முடிவை முன்பே எடுத்துவிட்டு இப்போது அதற்கான காரணங்களை கேடிக்கொண்டிருக்கிறது விசிக.. .. யாரால் ஓடுக்கப்பட்டிருக்கிறதோ.. யாரால் சமுதாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறதோ அவர்களோடு கைகோர்க்கும் சிறுத்தைகளின் செயல் அந்த சமுதாயமக்களிடம் பெரிய பின்னைடைவை சந்திக்க நேரிடும் நம்பிக்கையை இழக்கநேரிடும்... திருமா நாளை கட்சி கூடி முடிவெடுக்கும் என்கிறார் முடிவை பொதுசெயலர் தொலைக்காட்சி வாயிலாக தெரிவித்துவிட்டபிறகு கூட்டத்தின் முடிவு அறிந்ததுதான்.. ஒருமுறை ரவிக்குமாருக்கும் ஆளுர் சாநவாஸிற்கும் நடந்த கருத்து வேறுபாட்டில் ரவிக்குமாரை பின்துணைத்த போதே #சொல்லுங்க_எஜமான் என துண்டை இடுப்பில் கட்ட தயாரானது தெரிந்தது… .. விடுதலைச்சிறுத்தைகளில் சமீபத்திய அரசியல் அந்த கட்சி கடந்துவந்த பாதையிலிருந்து முற்றிலுமாக மாறி வேறுபாதையை தேர்வு செய்திருக்கிறது.. ஆரம்பகாலங்களில் ஒடுக்கப்பட்ட தங்கள் இனத்திற்கான அரசியலாக இருந்தது பின் சமூக நல்லிணக்கம், சமூகநீதியென பயணத்தை விரிவாக்கிய சிறுத்தைகள் செல்வபெருந்தகை விலகலுக்குப்பிறகு .. பாசிச சக்திகளின் பிடியில் மெல்ல கரைய தொடங்கியிருக்கிறது.. பாசிச .. இந்துத்துவா அமைப்புகளைப்போல அராஜகம் அடிதடி கட்டபஞ்சாயத்து என வேறொரு வடிவத்தை கையிலெடுத்து பயணிக்கிறது.. அதற்கான அங்கீகாரமாக பாஜகவோடு இணைக்கமான செயல்பாட்டை கொண்டுநடக்கிறது. நேரடியாகவே பாஜகவின் கிளையாக செயல்படலாம்.. .. விசிக வாராமல் போனால் கூட கவலையில்லை இந்த கூட்டம் தமிழக விவசாயிகளின் நலன்களில் யாரெல்லாம் அக்கறைக்கொண்டிருக்கிறார்கள் அல்லது தமிழகவிவசாயிகளை வைத்து அரசியல் செய்து பிழைக்கிறார்கள் என்பதை தமிழக மக்களுக்கு படம்பிடித்துகாட்ட உதவும்.. .. #யாரைஎங்கேவைப்பதென்றுயாருக்கும்தெரியல...

Saturday, October 22, 2016

அனைத்துக்கட்சி கூட்டம்

அனைத்துக்கட்சி கூட்டம்.. ஆளும் கட்சி அயர்ந்து உறங்கும் போது அதை தட்டியொழுப்பும் அதிகாரம் எதிர்க்கட்சிக்குண்டு. தூங்கிவழிகிற அரசை தட்டியெழுப்ப முயற்சித்து தூங்கவில்லை தூங்குவது போல் நடிக்கிறது அரசு என்றானபின் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும் தார்மீக அவகாசம் பிரதான எதிர்க்கட்சிக்கே உண்டு.. .. இப்போது அனைத்துக்கட்சிகளுக்கு அழைப்பு கொடுத்திருப்பது கூட காலதாமதமானது தான் எனினும் இப்போது திமுக எடுத்துள்ள நடவடிக்கை தமிழக விவசாயிகள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.. தஞ்சையில் நடந்த அனைத்து விவசாயசங்களின் கூட்டத்திற்கு பின் அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றே விவசாயிகள் விரும்பினர்.. திரு.ஸ்டாலின் கூட அதிமுக அரசு கூட்டத்தை கூட்டாவிட்டால் திமுக அதை செய்யுமென்றார்.. எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல் அரசுக்கு அவகாசம் வழங்கி பொறுப்பு முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்து அரசு செவியேற்காதபட்சத்தில் திமுக அழைப்பு விடுத்திருக்கிறது.. .. பொன்னரும் தமிழசையும் குதிக்கிறார்கள் காரணம் நிச்சயமாக பாஜக அரசுக்கு எதிரான செயல் என்பதால் இது மிகப்பெரிய பின்னடைவை தரும் மோடி அரசிற்கு எதிராக மக்களை திசைதிருப்பும் என அஞ்சுகிறார்கள்.... எதிர்க்கட்சி தலைவர் மாண்பிமை திரு.ஸ்டாலின் அதிமுகவிற்கும் அழைப்பு அனுப்பியிருப்பதாக சொல்கிறார் #நல்லதொடக்கம் .. அரசியல்கட்சிகள் தமிழக்தில் எதிரெதிராக செயல்படுவது தமிழக நலனுக்கு உகந்ததல்ல.. கொள்கையில் எதிரெதிராக செயல்பட்டாலும் தமிழக நலன்களின் ஒன்றிணைந்து போராடுவதே நல்லது.. சமீபகாலமாக எதிரி மனப்பான்மையோடே பிரதான கட்சிகள் செயல்பட்டு வந்திருக்கின்றன.. திரு.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு மெச்சதகுந்ததும் போற்றப்படவேண்டியதுமாகும். .. ஆளும் கட்சி கலந்துக்கொள்ளாமல் போனாலும் கருத்துச்சொல்ல கூட அவர்களுக்கு அதிகாரமில்லை ஏனெனில் சுயமாக செயல்பட தெரியாத இரண்டாம் நிலை தலைவர்கள்.. எனவே அவர்களை எதிர்பார்க்க முடியாது.. அவர்கள் ஆட்டுவைக்கப்படும் பொம்மைகள். மதிமுகவின் கோபால் தரகராக காட்சியளிக்கிறார் .. அவரின் பேச்சு திமுக எதிர்ப்புமட்டுமே .. பாமக தேமுதிக முஸ்லிம்லீக் காங்கிரஸ் விசிக புதியதமிழகம் தமுமுக.. இடதுசாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், விவசாயசங்கங்கள்.. கலந்துக்கொள்ள வேண்டும்.. சில கட்சிகள் பிணங்கிக்கொள்ளலாம்.. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனை/ உரிமையில் பிற்போக்குத்தனமாக சிந்திக்காமல் தமிழக நலனை மட்டுமே கருதி அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து ..இதில் யார் பெரியவர் சிறியவர் என்றில்லாமல் சரியான யோசனைகளை யார் சொன்னாலும் அதை அலசி ஆராய்ந்து சரியெனில் தீர்மானமாக கொண்டுவரவேண்டும்.. இதில் பெரியண்ணன் மனப்பான்மை Big brother attitude.. தவிர்க்கவேண்டும்.. இது நல்ல தொடங்கமாக இருக்கட்டும்.. .. #நல்லதை_விதைப்போம்.. .. ஆலஞ்சி மன்சூர்

தஞ்சை இடைத்தேர்தல்

தஞ்சை பூபதி.. நகர்மன்ற தவைவர் தஞ்சை நகர திமுகவில் தனி இடம் இவருக்குண்டு கொள்கை பிடிப்பும் கலைஞர் மேல் கொண்ட தீராத காதலும் ஒரு சிறந்த செயல்வீரராகவே இருந்தார்.. என் நடராசன் தொடர்ந்து தஞ்சையில் வெற்றிபெற காரணிகளில் ஒருவர்.. தஞ்சை நகராட்சியில் இவர் தலைவராக இருந்தபோது இவரை சந்திப்பது மிக எளிதாக இருக்கும் துணைத்தலைவர் சுல்தானையும் இங்கே குறிப்பிட வேண்டும் வடக்குவீதியின் நாயகன் சுல்தான்.. .. அஞ்சுகம் பூபதி மருத்துவர் தன் தந்தை நினைவாக மாதந்தோறும் இலவச மருத்துவ சேவையை குறிப்பாக ஏழைகளுக்கு செய்துவருகிறார்.. தந்தைப்போல எளிமையானவராக எளிதில் அணுககூடியவராக இருக்கிறார்.. தஞ்சை அதிமுக வேட்பாளரைவிட மிக சிறந்த தேர்வு அஞ்சுகம்.. .. இடைத்தேர்தவில் மக்களின் மனநிலை ஆளும்கட்சிக்கு ஆதரவார இருக்குமென தொடர்ந்து ஊடகங்கள் சொல்லிவருகிறது இது ஒருவகை தாக்கத்தை ஏற்படுத்துமென்றாலும்.. முன்பு இடைதேர்தலில் மயிலாடுதுறையிலும் அண்ணாநகரிலும் எதிர்கட்சி வெற்றிபெற்றிருக்கிறது.. இப்போது கூட நேர்மையாக நடந்தால் திமுகவே வெல்லும் என ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.. நேர்மை என்ற சொல் அதிகாரிகளுக்கு மட்டுமல்ல வாக்காளர்களும் உணரவேண்டும்.. தங்கள் வாக்கின் வலிமையை அறியாமல் சில்லரைகளுக்கு கொடுக்கிற வழக்கத்தை கைவிடவேண்டும்.. மிகவும் பின்தங்கிய மாநிலம் (கல்வியறிவில்) அறியபடுகிற பீகாரில் கூட வாக்கை விற்கும் பழக்கமில்லை.. ஆனால் தமிழகம் மட்டுமே விலைபேசபடுகிற மாநிலமாக இருப்பது உண்மையில் வேதனையான விடயம்.. .. யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்ற உரிமையில் அடுத்தவர்கள் தலையிடுவது அருவருப்பானதாக தெரியவில்லை.. எல்லோருக்கும் /எந்தகட்சியாக இருந்தாலும் வாக்கை கேட்கிற உரிமை மட்டுமே உள்ளது தீர்மானிக்கிற உரிமையில்லை .. வாக்கை விற்கும் வாங்கும் போக்கு ஜனநாயக பேராபத்து.. அதை யார் செய்தாலும் தவறு.. வாக்கிற்கு பணம் கொடுக்க பழக்கம் முன்பு பண்ணையார்கள் (காங்கிரஸ்காரர்கள்) தொடங்கிவைத்தது .. இப்போது விலை பேசும் நிலைக்கு வந்திருப்பதில் திராவிட கட்சிகளின் பங்கு அளப்பரியது.... .. இடைதேர்தல் இன்றைய சூழலில் திமுகவிற்கு வாக்களிப்பது அவசியமாகபடுகிறது.. இந்த அதிமுகஅரசு மிக மோசமான ஆட்சியை செய்கிறது இதற்கு கடிவாளம் போடப்படவேண்டும் அதற்கு திமுகவின் வெற்றி சாத்தியபடுகிறது.. தஞ்சையை பொறுத்தவரை அஞ்சுகம்பூபதி சிறந்த தேர்வாக இருக்கும்.. .. #நல்லது_நடக்கட்டும் .. ஆலஞ்சி மன்சூர்

Thursday, October 20, 2016

காலத்தின் கட்டாயம்

#காலத்தின்_கட்டாயம்.. வாரிசு என்ற சொல் பொதுவாழ்வில் அப்படியொன்றும் ஏற்புடையதல்ல.. ஆனாலும் சில சமயங்களில் கைத்தட்டி கரவோசையோடு வரவேற்க வேண்டியிருக்கிறது.. எனது அரசியல் வாரிசு என்று நேரடியாகவே பிரகடனப்படுத்திருக்கிறார்.. இதற்குமுன் பேராசிரியரும் ஏன் கலைஞர் கூட சொல்லியதுதான் அவையெல்லாம் கட்சியின் கூட்டங்களில் உட்கட்சியின் உரையாடல்களில் தான்.. .. நீண்டநாட்களுக்கு முன்பு அறிவித்திருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன் கொஞ்சம் காலதாமதம்.. நிறையபேர் கட்சிக்கு அப்பாற்ப்பட்டு இந்த அறிவிப்பை ரசிக்கிறார்கள் ஏன் விரும்புகிறார்கள்.. ஆலமர நிழலில் எதுவும் வளர்ந்துவிடாது என்பார்கள் அது யாருக்கு பொருந்துகிறதோ ஸ்டாலினுக்கு மிகவும் பொருந்தியது.. நீண்டகாலமாக பேசபட்டு வந்தாலும் இன்னமும் தலைமை பொறுப்பை அளிக்கவில்லை என்கிற வருத்தம்., கோபம் என்று கூட கூட்டிக்கொள்ளுங்கள் எனக்குண்டு.. செயல்தலைவராகவாவது பொறுப்பளித்திருக்கவேண்டும். .. ஒன்று தெளிவாகி இருக்கிறது இனி இதை சொல்லி கலகமூட்ட முடியாது.. வாரிசு அரசியல் என்பதை தாண்டி ஏறக்குறைய நாற்பதாண்டுக்கு மேலாக பொதுவாழ்வில் பலபடித்தரங்களை கடந்து கோபாலபுர இளைஞர் அணி தொடங்கி கட்சியின் பொருளாளர் வரை உயர்ந்து நிற்கிறார்.. நிறைய அழுத்தங்கள், விமர்சனங்கள் பாராட்டுக்கள் என வழிநெடுக காயங்களும் புகழ்மாலைகளும் கிடைத்திருக்கிறது.. முதன்முதலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் நின்று கே.ஏ. கே விடம் தோற்றபோது .. திரு.கே.ஏ. கிருஷ்ணசாமி அப்போது சொன்னார்.. மிகசிறந்த நல்ல துடிப்பான இளைஞர் ஸ்டாலின் மிகசிறந்த எதிர்காலம் இவருக்கு காத்திருக்கிறது.. இந்த கே.ஏ.கே தான் எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவர்..? பட்டத்தை மெரினாவில் நடந்த பொதுகூட்டத்தில் கொடுத்தவர் .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த மக்களுக்கு தொண்டாற்ற.. திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு பாசிச சக்திகளால் வரும் இடையூறுகளை தடுத்துநிறுத்திட.. காலுன்றாமல் தடுத்திட... பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை நிலைநாட்ட , சமூகநீதியை நடைமுறைபடுத்திட, சமூக நல்லிணக்கத்தை காத்திட.. வருக! வருக!! தமிழகம் காத்திருக்கிறது.. #நல்லகாலம்_பொறக்குது.. .. ஆலஞ்சி மன்சூர்

சிப்பெட்..

எனக்கு இந்த ஆட்சியாளர் மீது வருத்தமெல்லாம் இல்லை.. அவர்களை சொல்லி பலனுமில்லை .. வாக்கை விற்றபிறகு நம்மை நம் உரிமை லீசிற்கு lease குத்தகைக்கு எடுத்தவனிடம் எதுவும் கேட்க முடியாது.. .. சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்றுகிறார்கள்.. தமிழகத்தின் லாபம் தரும் பொது நிறுவனங்கள் கொள்ளை போகிறது.. சேலம் உருக்காலை தொடங்கி இதோ சிப்பெட் வரை. பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியை வழங்குகிற தன்னாட்சி நிறுவனம்.. 1968 ல் திமுக ஆட்சியில் தொடங்கபட்ட இந்த நிறுவனம் 28 மையங்களோடு செயல்படுகிறது.. அதுமட்டுமல்ல 14 உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான படிப்பும் உண்டு சென்ற ஆண்டு மட்டும் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இங்கே பயின்று /பயிற்சிபெற்று பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் .. இவையெல்லாம் மத்திய அரசின் தொழில்துறை அறிக்கையில் உள்ளது. . ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியில் டெல்லிக்கு மாற்ற போவதாக சொல்லி திமுக தலையிட்டு தடுத்துநிறுத்தியது.. இப்போது கர்நாடக அனந்தகுமார் தான் ரசாயணத்துறை அமைச்சர்.. நம் மீது பகைக்கொண்டு தமிழகத்திலிருந்து டெல்லிக்கு நகர்த்த துடிக்கிறார்.. ஆட்சியாளர்கள் உறக்கத்தில். தமிழக நலன் மீதான வெறுப்பின் பார்வையை பாஜக அரசு கொண்டிருக்கிறதோ என சந்தேகம் வருகிறது.. சேலம் உருக்காலையை தனியாருக்கு கொடுக்க மோடி அரசு துடிக்கிறது.. பொதுத்துறை நிறுவனங்களில் தமிழகத்தில் செயல்படுபவை தான் அதிக லாபத்தோடு செயல்படுகிறது.. இதில் கூட பாஜக அரசு கடுமையான போக்கை கொண்டிருப்பது சரியல்ல .. இங்கே ஆட்சியும் இல்லை அதிகாரமும் இல்லை.. பூசணிக்காய் உடைப்பதிலும் மருத்துவமனை வாசலில் தீபாராதனை செய்வதையும்.. பாத்தியா ஓதுவதிலுமே அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலை சரியாக இருக்கிறது.. வேறுவழியின்றி எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து பணியாளர்கள் முறையிடுகிறார்கள்.. எனக்கென்னவோ திமுகதான் ஆட்சியில் இருப்பதாக தோன்றுகிறது.. இதுபோன்ற சூழலில் திமுகவை தவிர வேறு யாரும் கைகொடுக்க முடியாதென்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது. .. நாம் செய்ய சிறிய தவறு ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனை உரிமை எப்படி பாதிக்கிறது பாருங்கள்.. எய்ம்ஸ் மருத்துவமனை இல்லை.. சேலம் உருக்காலை தனியாருக்கு சிப்பெட் தலைமையகம் டெல்லிக்கு.. சொல்லிக்கொண்டே போகலாம்.. யாருக்கு வாக்களிப்பது என்பதை விட யாருக்கு வாக்களிக்க கூடாது என்பது தெரிய வேண்டும்.. இல்லையெனில்.. இதுதான் நடக்கும்.. .. #அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. என்றான் வள்ளுவன் ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலாற்ற அனுமதிக்க கூடாது.. அப்படி அனுமதித்தால்.. இப்படிதான் நடக்கும்.. .. ஆலஞ்சி மன்சூர்

எய்ம்ஸ்....

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஏற்ற இடமில்லை .. ஆனால் ஆந்திராவில் அல்லது கர்நாடகாவில் இடமிருக்கும்.. கழிவுகளை கொட்டுவதற்கும்.. அணுஉலைகளை நிறுவுவதற்கும்..இங்கே தாராளமாக இடமுண்டு.. .. கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டியிருக்கிறது காங்கிரஸ் ஆட்சியில் மத்திய பல்கலைகழகத்தை திருவாரூரில் நிறுவ முடிந்தது.. புதிய இரயில்களை தமிழகத்திலிருந்து இயக்கமுடிந்தது..எந்தவொரு திட்டமானாலும் அது கடல்சார் பல்கலைகழகமாகட்டும்...எதுவானாலும் தமிழகத்தின் கருத்து ஏற்கப்பட்டது.. இப்போதெல்லாம் தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்க படுகிறது .. அதை இங்குள்ள தமிழர்கள் வரவேற்கிறார்கள் என்பதுதான் கொடுமை.. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டும் தண்ணீர் கிடைத்துவிடுமா என ஆளும்கட்சிகாரனே கேட்கிறான்.. ஏன் நடப்பாக்கவில்லையென்று கேட்டால் உடனே தீபாவளிக்கு கலைஞர் ஏன் வாழ்த்து சொல்வதில்லை என பழைய பல்லவியை பாடுகிறான். பொங்கலுக்கு வாழ்த்துச்சொல்லவில்லையா.. எங்கள் இனத்தவனை கொன்றுவிட்டு வடகத்தியன் கொண்டாடுகிறான் அதை ஏன் நாங்கள் கொண்டாடவேண்டுமென்று யோசிக்கவே மறுக்கிறான் .. கைரளியர் (மலையாளிகள்) ஓணத்தை போல தீபாவளி கண்டுக்கொள்வதில்லை.. ஏன் பார்பான் பொங்கலை கொண்டாடவில்லையென இங்கே யாரும் கேட்பதில்லை.. .. திமுக அதிகாரத்தில் இருந்த போது தமிழகத்திற்கான திட்டங்கள் எதுவும் கைமீறிப்போனதில்லை.. இப்போது ஆட்சி செய்பவர் தன் நலம் மட்டுமே பார்பதால்.. தன் தலைக்கு மேலே உள்ள கத்தி விழுந்துவிட கூடாது என எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பதால் நாட்டின் வளர்ச்சிப்பற்றிய அக்கறை சிறுதும் கொள்வதில்லை.. பல்நோக்கு மருத்துவமனையின் அவசியம் ஆட்சியாளர் அறிந்திருக்கவில்லையா ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி புதுக்கோட்டை நகரம் காஞ்சீபுரம் மதுரை தோரப்பூர் என தேர்வு செய்திருப்பதாக பிப்ரவரி 16 லேயே கடிதமெழுதியிருந்தார் .. கடிதத்தோடு முடிந்து விட்டது.. எந்த விடயமாக/ பிரச்சனையாக இருந்தாலும் கடிதம் எழுதுவதோடு காரியத்தை முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்.. டெல்லி குப்பைகளில் தமிழகம். .. ஆளுமையில்லாத தலைமையால் தமிழகம் பிறகோட்டு போகிறது.. #வெகுபின்னில்... .. #நமக்கு200ரூபாயும்லெக்பீஸ்பிரியாணியும்போதும் .. ஆலஞ்சி மன்சூர்

Wednesday, October 19, 2016

பொம்மலாட்டம்

#பொம்மலாட்டம்.. Puppet Show தமிழனின் மரபுவழி கலை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு ..இப்போதெல்லாம் அரசியல் பொழுதுபோக்கானதால்.. பொம்மலாட்டத்தை காண்கிறோம்.. .. நாம் காண்கிற ஆள்பவர் ஆளுகிறவரல்ல.. அவர் பின்னால் வேறொருவர் இயக்குகிறார்.. கயிறு அவரது கையில் #சூத்தரதாரியின் கையில் கயிறு .. அவரின் ஆட்டத்திற்கிணங்க பொம்மை ஆடுகிறது.. தமிழகம் ஏறக்குறைய அப்படிதான்.. யார் இயக்குகிறார்கள் என்று எல்லோரும் அறிவோம்.. ஆனால் பொம்மைகள் ஆட்டத்ததை ரசித்து பொம்மையே ஆடுவதாய் நம்புகிறோம்.. .. நக்கீரன் இதழில் பன்னீர் செல்வத்திடம் முதல்வர் வகித்த வந்த துறையின் கோப்புகள் செல்வதில்லை என எழுதியிருக்கிறார்கள்.. அவர் நிதித்துறையை மட்டுமே பார்ப்பதாகவும்.. கார்டனின் நடந்ததை போல சசிகலாவே உயரதிகாரிகளிடம் ஆலோசனை செய்வதாகவும்... சொல்லியிருக்கிறது.. இது மிகவும் அபாயகரமானது.. சட்டவிரோதமானது.. இதில் பொய் எந்தளவிற்கென்று தெரியவில்லை.. .. ஆரம்பம் முதலே சில ஊடகங்கள் சசிகலாவின் தலையீட்டை மறைமுகமாக சொல்லியிருந்தன..சில ஊடகவியலாளர்கள் விமர்சித்துமிருந்தார்கள்.. அதையெல்லாம் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்த போதே மேடம் ஜெயலலிதா கண்டுக்கொள்ளவில்லை/காதோர்க்கவில்லை.. இப்போதெல்லாம் ஊடகங்கள் #மேடம்சசிகலா என அழைக்க தொடங்கியிருக்கின்றன.. அது மன்னார்குடி வகையறாவிற்கு மேலும் ஊக்கத்தை தந்தது.. இப்போது நடக்கும் விடயங்கள் ஜெயலலிதாவின் பார்வைக்கு செல்லுமா என்ற சந்தேகம் பாமரனுக்கல்ல படித்த விவரம் தெரிந்தவர்கள் கூட கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.. நக்கீரன் ஜூ.வி போன்ற பத்திரிக்கைகள் எழுதுவதில் உண்மையில்லாமல் இல்லை.. .. இன்றைக்கு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டதென்பதை அரசு விளக்கவில்லை ஒருமணி நேர ஆலோசனை என்று சொல்லிவிட்டு முதல்வரை புகழ்வதிலேயே நேரத்தை கடத்தியதாகவும் ஏற்கனவே வரைந்தவற்றை மொழிந்ததாகவும் சொல்லப்படுகிறது.. விவாதம் செய்யப்படவில்லை.. பண்ரூட்டி சொல்லில் வறுத்த முந்திரியும் சூடான டீயும் குடித்துவிட்டு வந்துவிட்டார்களா.. .. உண்மையில் அரசை இயக்குவது யார்..? என பாண்டே விவாதம் நடத்தலாம்.. நக்கீரனை மேற்கோள்காட்டி..செய்வாரா. ஊடகங்கள் முதுகொடிந்து நிற்கிறது.. பணம் விளம்பரம் வியாபாரம் இதை தாண்டி சிந்திப்பதில்லை நடப்பதென்னவோ #பொம்மலாட்டம் .. பொம்மலாட்டத்திற்கு மற்றொரு பெயரும் உண்டு.. #பாவை_கூத்து..… .. ஆலஞ்சி மன்சூர்

தூக்கை தூக்கு

மரண தண்டனை.. உலக நாடுகள் பலவற்றில் குறிப்பாக வளரும் நாடுகளில் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கிறது.. அதிபர் ஆட்சி செய்யும் நாடுகளிலும் மன்னராட்சி நடைபெறும் நாடுகளிலும் இன்னமும் மரணதண்டனை நிறைவேற்ற படுகிறது இந்தியா போன்ற நாடுகளில் எதிர்ப்பை மீறி .. அரிதிலும் அரிது என்கிற கொள்கையோடு சிலநேரம் அரசு ஆசைபடியும் மநுவின் யோசனைபடியும் நடந்தேறுகிறது.. .. பல நாடுகளில் விசாரணை என்பதே சிலநேரம் நேர்மையாக நடப்பதில்லை நிறைய தடைகள் திட்டமிட்டு ஒருசில சமூகத்தின் மீதான குறுகிய பார்வை.. அரசின், ஆளும்வர்க்கத்தின் அழுத்தம், பண பலம் மதஜாதி குறிக்கீடு இவையெல்லாம் மீறி நீதியை நிலைநாட்டுவதென்பது அரிது தான்.. தூக்கு தண்டனை குறித்தான விழிப்புணர்வு இன்னமும் நாகரீக மனித சமூகத்தின் படித்த மக்களிடையே கூட இல்லையென்பது யதார்த்தமான உண்மை.. .. நீதி நடப்பில் ஆக்கல் என்பதில் நிறைய படித்தரங்களை காணலாம்.. நீதி விற்க அல்லது வாங்கப்படுகிற நிலையில் தான் அல்லது அரசின் கொடூர முகத்தை நீதிபரிபாலன அமைப்பு ஏற்க கூடிய சூழல் தான் இத்தனை நூற்றாண்டு பின்னிட்டும் காண முடிகிறது. .. சவுதி இளவரசர் கொலைக்குற்றத்திற்காக தூக்கில் ஏற்றப்பட்டிருக்கிறார்.. ராஜ குடும்பத்தில் பிறந்தாலும் நீதியின் முன் குற்றவாளியாய் நின்றது.. ஜனநாயகம் பேசும் நாடுகளில் சாத்தியமில்லை.. சாதாரண உயர்ந்தவர்கள் என அறிய படுகிறவர்களை கூட தண்டிக்கமுடியாது அரசின் உயர்பதவி வகிப்பவர்களை விசாரிக்க கூட முடியாது.. அப்படியே விசாரித்தால் கூட உயரதிகாரிக்கு சாதகமாகதான் வழக்கு முடியும்.. ஏன் ஈரானில் கூட உயரதிகாரியை கொன்ற வழக்கில் ரைஹானா தூக்குத்தணடனை விதிக்கப்பட்டபோது.. என் பக்கத்து நியாயங்களை அங்கீகரிக்கவே இல்லையென்றார்.. #வெறும்_மனித_கழிவல்ல நான் என்றார்.. .. உண்மையில் விசாரணை நியாயமாக நடந்திருக்கவேண்டும். தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்த போது மன்னரிடத்தில் கருணை மனு Mercy petition கொடுப்பது வழக்கம். . மன்னரின் பேரன் என்று அறிந்தும் நிராகரித்ததும்.. ராஜகுடும்பத்தை சேர்ந்தவரென்று அறிந்தும் மன்னிக்க மறுத்தும் தூக்குத்தண்டனை நிறைவேற்ற பட்டிருக்கிறது.. தண்டனை சரியா தவறா என்பதை தாண்டி நீதி தடுமாறவில்லை.. .. நமது நிலைபாடு.. மரணத்திற்கு மரணமே தீர்வல்ல #தூக்கை_தூக்கு… .. ஆலஞ்சி மன்சூர்

Tuesday, October 18, 2016

கல்நெஞ்ச காய்ச்சல்..

கடவுளுக்கு தெரியாதா.. .. மண்சோறு திங்கின்றாய் பளபளக்கும் கிரைனைட் தரையில் அமர்ந்து.. காவடி தூக்குகிறாய்.. உன் கண்களில் பக்தியில்லை உடம்பெல்லாம் துளையிட்டு ரணமாய் கிடந்தாலும்.. உன் போலித்தனம்.. அறியாமலாபோகும்.. .. மூன்று நாள் நோன்பிருக்கிறாய்.. பசியறிதல் நலம் பக்கத்துவீட்டில் பசியோடு இருப்பவனை மறந்து நடிக்கிறாய்.. உன்.. எண்ணம் .. அழுக்காலானது.. நம்பிக்கையில் இடைசொருகல்.. .. தேவாயவத்தில் திருப்பலி.. உருகி வேண்டுகிறாய்.. உண்மையில் நீ.. வேண்டுவது தெய்வத்திடமில்லை உனக்கான தெய்வத்திடம்..? வேறொருவன் முநிதிக்கொண்டு நம்மை முறியடித்துவிடுவானோ.. பாவம் உனது செயலை அறியாமல் மூர்ச்சையாய்.. .. நீ.. பைத்தியகாரனில்லை பிழைக்க வழி தேடி பாசாங்கு செய்கிறாய் கல்நெஞ்ச காய்ச்சல் கடவுளுக்கு தெரியாதா பாவம் கடவுளுக்கே காது குத்துகிறாய்.. .. ஆசை பேராசை நாமும் கொஞ்சம் பிழைத்துக்கொள்ளலாம்.. ஆற்றுமணலை அள்ளி.. சின்னதாய் தனக்கொரு மாளிகை கட்டிக்கொள்ளலாம்.. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்துவிட்டு அம்பது ஏக்கரை ஆட்டயபோடலாம்.. .. உண்மையில் தீதும் வஞ்சகமும்.. மற்றவரை இழிச்சொல்லால் எள்ளுவதும்.. துரத்தும்.. விடாது துரத்தும்.. இனியேனும்.. நல்லதாய் சிந்தி நாவடக்கி பேசு ஆணவம் தவிர்.. பொய்யை மற.. உண்மையில் உருகிவேண்டு. கடவுள்..? காது கொடுப்பார். .. கடவுளுக்கு..? தெரியாதா.. அதுசரி எந்த கடவுள்.. .. ஆலஞ்சி மன்சூர்

வதந்திகள்.. வழக்குகள்

”When asked to bend, they (the media) crawled". இந்த வாசகம் மிகவும் பிரபலம் Maintenance of Internal Security Act மிசா (அவசரநிலை) காலத்தில் பேசப்பட்டது.. ஏறக்குறைய முதுகெலும்பு வளைந்து தான் இப்போது மீடியாக்கள் காணபடுகிறது.. அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கவே அஞ்சுகிற / தயங்குகிற நிலை.. எது செய்தாலும் அது தவறென்றாலும் ஒத்தூதுகிற அவலம்.. ஆட்சியாளரின் அடாவடித்தனத்தை பாராட்டுகிற செயல்.. ஒரு விடயத்தை பற்றி பேச ஆரம்பித்தால் எதிர்கட்சி ஏன் அப்படி செய்தது என கேட்டு ஆட்சியாளருக்கு கூஜா தூக்குகிற வேலை இவைதான் சரியான ஜர்னலிஸமா.. journalism .. சமூகவலைதளங்கள் மக்கள் பெருவாரியாக பங்கெடுக்க தொடங்கிய பிறகு தான் கருத்து சுதந்திரமும் நேர்மையான விமர்சனங்களும் வர தொடங்கியது.. .. மிசா காலத்தில் கூட இலைமறைவாக ஆட்சியாளர்களை பற்றி எழுதமுடிந்தது கலைஞர் போன்றோர் மிக சாதூர்யமாக எழுதினர்.. இப்போது எதற்கெடுத்தாலும் ஆட்சியாளர்கள் அவதூறு வழக்குகளை தொடுக்கிறார்கள்.. வதந்தியை பரப்பினார்கள் என சில வழக்குகள் குறிப்பிட்ட ஒரு சில இயக்கங்களை சேர்ந்தவர்கள் மீது தொடரபடுகிறது.. முதல்வர் உடல்நிலை குறித்து பத்திரிக்கைகளோ அரசோ சரியான தகவலை தர மறுக்கிற போது மக்களிடம் எழும் சந்தேகங்கள் சந்தை பேச்சாகதான் மாறும் இதெற்கெல்லாம் வழக்கென்பது மிசா காலத்தில் நடுவொடிந்த நிலையில் பத்திரிக்கைகள் இருந்ததைபோல தட்டிக்கேட்க தயக்கம் ஏன்.. .. முதல்வர் உடல்நிலைப்பற்றி பேசிக்கொண்டிருந்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட இரு வங்கி ஊழியர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி இருக்கிறது..நல்ல செய்தி.. கைது வழக்கு என மிரட்டுவதால் குறைந்ததா என கேட்டால் இல்லை இப்போது நையாண்டி மொழியில் பேசுகிறார்கள்.. முதலி்லாவது வருத்ததோடு கதைத்தவர்கள் இப்போது வஞ்சியிலும் நக்கல் செய்தும் நையாண்டி செய்தும் எழுத பேச தொடங்கியிருக்கிறார்கள்.. இது எதிர்வினையாற்று.. .. ஏன் மிசா காலத்தோடு ஒப்பிட்டேன் எனில் .. அப்போதும் இப்படிதான் எதையும் பேச எழுத தடைவிதித்தார்கள்.. ஆனால் இலைமறைவாக நையாண்டி செய்தும் நக்கல் செய்தும் கலைஞர், கோயங்கா, நய்யார் போன்றவர்கள் எழுதினார்கள்.. அது தான் இப்போது நடக்கிறது.. சமூகவலைதளத்தில் தனிநபரின் சொந்த விடயங்களை விமர்சிப்பது கூடாது தான் ஆனால் அரசின் செலவில் அத்தனை அதிகாரத்தை பயன்படுத்துக்கொள்ளும்.. ஆட்சி செலுத்தும் முதல்வரின் நிலைப்பற்றி தெரிந்துக்கொள்ள / என்னானது என கேட்க, அவரை வைத்து சிலர் நடத்தும் சகிக்கமுடியாத கூத்துக்களை விமர்சனம் செய்ய பொதுமக்களுக்கு உரிமை இருக்கிறது.. அதை தான் தவறென்று அரசு சொன்னால் நீதிமன்றம் ஏற்காது.. .. உண்மை நீண்டநாள் உறங்காது. .. ஆலஞ்சி மன்சூர்

இரயில் மறியல்

இரயில் மறியல் போராட்டம்.. .. தனித்தனியாக அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவதென்பது பலவீனமாகவே கருதவேண்டியிருக்கிறது..மிகப்பெரிய அளவில் இந்த போராட்டத்தை கொண்டு சென்றிருக்கலாம்.. விவசாய சங்களின் கோரிக்கையை ஏற்று அனைத்துக்கட்சிகளும் இணைந்திருக்கவேண்டும் ஆளும் அதிமுகவும் போராட்டத்திற்கு ஆதரவளித்திருக்கவேண்டும்..முதல்வர் உடல்நிலை காரணம் காட்டி இது போன்ற அரசியல் ரீதியாக மாநில உரிமைகளுக்கான போராட்டத்தை தவிர்ப்பதோ அல்லது மறைமுகமாக எதிர்ப்பதோ நல்ல பலனை தராது.. .. நாம் தமிழர் சீமான் திமுக எங்களை அழைக்கவில்லை அதனால் தனியாக போராடுகிறோம் என்கிறார்.. முதலில் இந்த மறியல் போராட்டத்தை விவசாய சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தது என்பதை உணர வேண்டும்.. பாஜக புறக்கணிப்பதில் கூட அவர்களின் கட்சி மத்தியில் ஆள்வதால் பிரச்சனையாக்க விரும்பாமல் தவிர்த்திருக்கிறது ஆனால் இதை முன்னெடுக்க வேண்டிய அதிமுக கண்டும் காணாமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்கிற மாபெரும் துரோகம்.. அதைவிட கொடுமை நாங்கள் ஏன் போராடவேண்டும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கேட்கிறார்... கொடுமை... .. திமுகவினரை தவிர மற்ற கட்சி மற்றும் அமைப்பினரின் மறியல் போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லையோ என எண்ண தோன்றுகிறது..காரணம் முதவ்வர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருக்கிறார் என்பதால் அவரின் பழைய கூட்டாளிகளின் தொண்டையின் ஈரம் வற்றவில்லையென நினைக்கிறேன்.. கர்நாடகவில் நடந்த போராட்டங்களுக்கு அரசின் மறைமுக ஆதரவென்பது வெளிப்படையாகவே தெரிந்தது அது மத்திய அரசின் செவித்திரையை கிழித்தது.. .. மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடு நடுநிலையோடு இல்லை வருகிற தேர்தலை கணக்கில் கொண்டு செயல்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. நடுவன் அரசாக மோடி அரசு இல்லை.. தமிழகத்திலோ தலைமையில்லாத அரசாக அதிமுக அரசு காட்சி தருகிறது.. இவையெல்லாம் மோடி அரசு தமிழர்களை /தமிழக விவசாயிகளை கண்டுக்கொள்ளாமல் இருக்க அல்லது புறக்கணிக்க காரணம்.. .. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டாதவரை .. அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டவேண்டுமென்ற உடனேயே பாஜக கலந்துக்கொள்ளாது என்பதும் முதல்வர் மருத்துவமனையில் இப்போது தேவையில்லை முதல்வர் வந்து பார்த்துக்கொள்வார் என்பது நழுவிகிற வித்தை.. ஆயிரம் கருத்து கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மாநிலத்தின் ஜீவதார உரிமைக்காக போராடுகிற போதுகூட அரசியல் செய்கிற அயோக்கியத்தனம் கண்டிக்கவேண்டிய ஒன்று. .. எம்ஜிஆர் உடல்நலமின்றி இருந்த போது கலைஞர் சொன்ன கதை ஞாபகம் வந்தது.. வீட்டில் சோகநிகழ்வு நிகழ்ந்துவிட்டது என்பதற்காக பக்கத்து வீடு தீ பிடித்து பற்றி எறிகிறபோது.. தீயை அணைக்க செல்லவேண்டுமே தவிர துக்கவீட்டிலிருந்து வர மறுத்தால்.. இங்கேயே எரிந்து சாம்பலாகி விடும்.. புரிந்தால் சரி.. .. இப்போதாவது ஒன்றுபட்டு போராடுங்கள்.. இல்லையேல் சுடுகாடகிவிடும்.. .. ஆலஞ்சி மன்சூர்

Monday, October 17, 2016

அசுர இனமடா..

இராவணன் பார்பனன்.. தமிழனுக்குரிய அடையாளம் எதுவுமில்லை என்கிறார் விசிக பொதுசெயலர் இரவிக்குமார்.. கூடவே ராணவலீலா பாஜக ஆட்சியில் இருப்பதால் அதை எதிர்ப்பதற்காக நடத்தப்படுகிறது.. என்கிறார்.. .. முதலில் திரு.ரவிக்குமார் தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினால் நல்லது.. விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் இவர் மட்டுமே அறிவுஜீவியாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் போக்கு மிகவும் ஆபத்தானது.. கருத்து சுதந்திரம் என்பது வேறு வரலாற்று புனைவு என்பது வேறு.. .. தந்தை பெரியார் மிக தெளிவாக திராவிட ஆரியர் போரை மறைக்க திட்டமிட்டு மறைக்க தொடுக்கப்பட்ட புனைவு தான் இராமாயணம் என்பார்.. இதே கருத்தை தான் அம்பேத்கரும் கொண்டிருந்தார்.. பண்டிட் ஜவகர்லால் நேரு கூட திராவிடர்களின் மீதான ஆரிய தாக்குதலே இராமாயணமென்றார்... .. சரி எதை வைத்து இராவணனை பார்பனன் என தீர்மானித்தார் என விளக்கம் தரவில்லை.. இசையில் வல்லவனாக இருந்ததை ஒருவேளை கருத்தில் கொண்டிருக்கலாம்.. வீணை ஆரியர்களின் இசைகருவியல்ல .. இசையில் திராவிடர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எல்லாகாலகட்டங்களிலும் தனி இசையை கொண்டிருந்தார்கள்..இப்போதும் காணலாம்.. .. இராவணனை அரக்கர் இனத்தை சேர்ந்தவன் என வேதம்கற்ற விற்பன்னர்கள் சொல்லி வருகிறார்கள்.. அவர்கள் கூட ராவணனை பிராமணன் என சொல்வதில்லை.. மாறாக அசுர இனத்தவன் என்றுதான் அழைக்கிறார்கள்.. அசுரன் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா.. சுரா என்றால் மது என்று பொருள் சுரர் என்றால் மது அருந்துபவர்.. #அசுரர்கள் என்றால் #மதுஅருந்தாவர்கள் என்று பொருள்.. ஒழுக்கசீலனான ராவணனை பார்பனன் என சொல்ல வருவதிலிருந்தே காவிகளின் அருகில் செல்ல நினைக்கிறார்.. இராவணனின் தந்தை பிராமணன் தாய் அசுரக்குலத்தை சேர்ந்தவள் என்ற கட்டுகதைகளை / புனைவுகளை ஒருவேளை சொல்கிறாரோ தெரியவில்லை .. #பெரியாரையே பெரிய சிந்தனையாளர் எல்லாம் இல்லையென்ற சொன்ன பேரறிவாளர்.?..தான் இந்த இரவிக்குமார்.. .. இரவிக்குமார் அவர்களே.. எங்குவேண்டுமானாலும் செல்லுங்கள் எதைவேண்டுமானாலும் சொல்லுங்கள் ஆனால் தவறானவற்றை .. தராதீர்கள்.. வரலாற்றை திருத்தி எழுதுவது புனைவுகளை சேர்ப்பது அழகல்ல .. எங்கள் புரட்சி கவிஞனின் இப்படிதான் பாடினான்.. தென் திசையைப் பார்க்கின்றேன் என் சொல்வேன்! என்றன் சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா! அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத்தமிழன் ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன் குன்றெடுக்கும் பெருந்தோளான், கொடை கொடுக்கும் கையான் குள்ளநரிச் செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம் என் தமிழர் மூதாதை! என் தமிழர் பெருமான்! இராவணன் காண்! அவன் நாமம் இவ்வுலகம் அறியும். என்றார் #புரட்சிகவிஞர்_பாரதிதாசன்.. .. #அசுரஇனமடா_நாங்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

சட்டியில் இருந்தால் தானே

இரு கட்சிகள்.. ஒரே நேரத்தில் இரண்டுவேலைகளை செய்தன.. திமுக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடத்துகிறது.. அதிமுக மண்சோறு தின்று பிழைப்பு நடத்துகிறது.. இதுதான் இரண்டுக்குள்ள வித்தியாசம்.. தனிநபருக்காக இயக்கத்தை மூடவழக்கத்தின் பின்னால் செலுத்தும் செயல் நம்பிக்கையென்பது வேறு.. இது இப்படியெல்லாம் செய்தால் கடைகண் பார்வைப்பட்டு நாலு காசு சம்பாதிக்க வழிவகை கிடைக்காத என்ற முற்றிலும் சுயநலமான செயல்கள் தவிர வேறொன்றில்லை.. .. அதிமுக டிசைன் அப்படிதான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. மோகம் அழகு ஈர்ப்பு இவைதான் பிரதான விடயங்கள்.. எம்ஜிஆர் காலம் தொட்டே இதுதான் நடந்தது .. மன்ற உறுப்பினர்களை கத்தி வைத்துக்கொள்ள சொன்னவர் எம்ஜிஆர்.. சமூகநலன் அடிதட்டுமக்களின் மேம்பாடு மாநிலத்தின் உரிமைகள் இவைகள் பற்றியெல்லாம் இவர்களுக்கு தெரியாது சொன்னாலும் புரியாது.. தொலைகாட்சி விவாதங்களில் பாருங்கள் இவர்களின் யோக்கியதை தெரியும் தெய்வதிருமகள் என புகழ்ந்தும் கருணாநிதியை இகழ்ந்தும் கூச்சலிடுவார்களே தவிர ஆக்கபர்வமான விவாதங்களுக்கோ செயல்பாடுகளுக்கோ இவர்கள் தயாரில்லை காரணம் சரக்கில்லை.. மண் சோறு சாப்பிடுவதால் பலன் என்றால் மண்ணையே சாப்பிட்டு குணமாகலாமே.. மண்சோறு என்ற பெயரில் பளபளக்கும் கிரைனைட் தரைமீது சாதம் வைத்து சாப்பிடும் விநோதம்.. .. டாக்டரிடம் இங்கிலீசில் பேசினார்.. தண்ணீர் கேட்டார் .. அதெல்லாம் சரி.. ஏன் இதுவரை மருத்துவ அறிக்கையை அரசு வெளியிடவில்லை.. மக்கள் வரிப்பணத்தில் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் போது அதுகுறித்து மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமையல்லவா.. கலைஞரும் தான் மருத்துவமனையில் முதுகுதண்டு அறுவைசிகிச்சை செய்துக்கொண்டிருந்தார்.. ஆனால் கட்சிகாரர்கள்.. இப்படி தெருகூத்தெல்லாம் நடத்தவில்லை..விரைந்து நலம் பெறவேண்டி விழைந்தார்களே தவிர ..மடமைகளில் மூழ்கி அறிவிற்கொவ்வா செயல்களில் ஈடுபட்டதில்லை.. .. திமுக எப்போதுமே மக்களுக்காக போராட தவறியதில்லை.. அதிகாரமிருந்தபோதும் இல்லாதபோதும்.. எல்லா விடயங்களும்/மக்கள் பிரச்சனைகளிலும் அறிவோடும், சரியான பாதை தேர்வு செய்தும் களம் கண்டிருக்கிறது குரல் கொடுத்திருக்கிறது.. மாநில நலன் மற்றும் உரிமைகளுக்காக போராட தவறியதில்லை.. முதல்வரின் உடல்நலம் குறித்து அக்கறை கொள்ளவேண்டியதுதான் அதற்காக வேறு வேலையே இன்றி சதா மூழ்கி கிடப்பதும் சரியான நிர்வாகத்திற்கு வழிவகுக்காது.. திமுக தொண்டன் செய்வதை கூட அதிமுக அமைச்சர்கள் தலைவர்களால் செய்யமுடியாது..காரணம் செய்யதெரியாது. திமுகவிற்கும் அதிமுகவிற்கும் ஒரேயொரு வித்தியாசம் தான் .. திமுககாரன் எதையும் அறிந்து விவேகத்தோடு பேசுவான்/செய்வான்.. அதிமுககாரனிடம் அது இருக்காது.. .. #சட்டியில்இருந்தால்தானே_அகப்பையில்_வரும்.. .. ஆலஞ்சி மன்சூர்

சீன பட்டாசு

சீன பட்டாசு. சிவகாசி பட்டாசை விட சீன பட்டாசு விலைகுறைவாக கிடைக்கிறதே அதெப்படி .. சீன பட்டாசுகள் தரமில்லாதவை அதனால் மிக குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்று சில வர்த்தர்கள் சொல்கிறார்கள் அரசாள்போரும் சீன பட்டாசை தவிர்க்கவேண்டுமென்கிறார்கள்.. சரியானது தான் .. நமக்குள்ள ஐயமெல்லாம் தரமற்ற பொருளை ஏன் இறுக்குமதி செய்ய அனுமதிக்கவேண்டும்.. சீனபட்டாசு இறக்குமதியில் குஜராத் தொழிலதிபர்களே அதிகமிருக்கிற போது ஏன் திரு.மோடி நேரடியாக சீன பட்டாசை தருவிக்காமல் இருக்க யோசனை சொல்லலாமே.. சீன பட்டாசை இறக்குமதி செய்ய அனுமதித்துவிட்டு விற்பனை செய்யகூடாது யாரும் வாங்க கூடாதென்றால் எப்படி முடியும்.. .. இந்தியாவில் தயாராகும் பட்டாசுகள் அதிகவிலைக்கு விற்கபடுவது ஏன் .. அப்படியெனில் உள்ளூர் தயாரிப்பிற்கு அதிக வரி விதிக்கப்படுவதும் இறக்குமதி சரக்கிற்கு வரிச்சலுகை செய்வதும் ஏன் .. .. ஜெனரல் மோட்டார் கம்பெனி GMC மிகவும் நலித்து போனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்ககூட முடியவில்லை விலையுயர்ந்த செவர்லைட் கார்களை உற்பத்தி செய்து உலக புகழ்ப்பெற்ற நிறுவனத்தின் நெருக்கடியை அப்போதைய அமெரிக்க அதிபர் கிளின்டனிடம் முறையிட்டனர் தரம் குறைந்த ஜப்பானிய கார்களை மக்கள் விரும்புகிறார்கள்.. எனவே அதை தடைசெய்யவேண்டும் அல்லது இலக்கு நிர்ணயம் செய்யவேண்டும்.. விசாரித்துவிட்டு பின் GMC நிர்வாகிகளை அழைத்து மிகவும் குறைந்த விலைக்கு குறிப்பிட்ட கால உத்தரவாதத்துடன் விற்கிறார்கள் .. அமெரிக்கர்களின் வாங்கும் சக்திக்குள் அவர்கள் தயாரித்து அளிக்கிறார்கள் எனவே தடைசெய்ய இயலாது என்றார்.. எதற்கு சொல்கிறோமென்றால்.. மக்கள் வாங்குகிற விலையில் ஏன் இங்கேயே தயாரிக்க கூடாது.. இறக்குமதியில் சலுகைகளை வாரி வழங்கிவிட்டு பின் உள்ளுர் தயாரிப்பை விலை கூடுதல் கொடுத்து வாங்கவேண்டுமென்பது எப்படி சரியாகும் சில நொடிகளுக்குள் கரைந்து போகிற பட்டாசுகளை பெரும் பொருட்செலவில் வாங்க மக்கள் விரும்ப மாட்டார்கள் .. .. உள்ளூர் பட்டாசிற்கான விற்பனை வரி சேவை வரி போன்றவற்றை வெகுவாக குறைத்தால் ஒருவேளை சீன பட்டாசுகளை மக்கள் புறக்கணிப்பார்கள்.. 'சுதேசி" தயாரிப்பு என வசனம் பேசிக்கொண்டிருந்தால் மக்கள் காதில் வாங்கமாட்டார்கள்.. .. சீனர்கள் தான் வெடிப்பொருட்களை தயாரிப்பதில் நமக்கெல்லாம் முன்னோடி.. ஏன் உலகுக்கே.. உலக பொருளாதார தாராளமாக்கலுக்கு வழிவகை செய்துவிட்டு நாமும் பறைவோம் #சீனபட்டாசை_தடைசெய்.. .. ஆலஞ்சி மன்சூர்

Sunday, October 16, 2016

தலித்... கம்யூனிஸம்

இடது கம்யூனிஸ்ட் .. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ மத்திய குழுவில் தலித்துகளை இணைத்துக்கொள்ளவேண்டுமென்ற கருத்தை டாக்டர் வசந்திதேவி அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.. பொலிட்பீரோ.. இடது கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சபட்ச அதிகாரபீடம் .. அதில் இத்தனை ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெறவில்லையா என கேட்காதீர்.. .. விடுதலை இந்தியாவிற்கு பிறகு இடதுசாரிகள்..மிகப்பெரிய பலமாக நாடாளுமன்றத்தில் இருந்த போதுகூட அதில் பிராமணர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.. கேரளத்திலும் வங்கத்திலும் கம்யூனிஸத்தை நிலைநாட்டியவர்களில் பெரும்பாலானோர் அவர்கள்தான் நம்பூதிரிகளின் கையில்தான் இருந்தது.. வங்கத்திலும் டாங்கே தொடங்கி பிரகாஷ்காரத் வரை... அவர்களின் கை ஓங்கிதான் இருந்தது இப்போதுமிருக்கிறது.. பொலிட்பீரோவில் 95% விழுக்காடு பார்பனர்கள் என்றால் ஆச்சர்யமாக இல்லை.. இது யதேச்சையாக நடந்ததாக நாம் நம்புவோம்.. ஏனெனில் பொதுவுடைமை சித்தாந்த்தை நேசிக்கிற ஆராதிக்கிற நம்மால் வேறு எப்படி உட்கொள்ளமுடியும்.. .. தகுதியுள்ளவர்களுக்கே வாய்ப்புக்கள் அல்லது பதவிகள் என்ற நிலைபாடு கட்சியின் பிரதான கொள்கையெனில் ஏன் இதுவரை தலித் தலைவர்களை உருவாக்கவில்லையென்ற கேள்வி கூடவே எழும்.. தலித்களுக்காக போராடுகிற கட்சி என அடையாளபடுத்திக் கொள்கிற கட்சியின் நிலை இதுதான்.. டாக்டர். பேராசிரியை. வசந்தி தேவி அவர்களின் கோரிக்கை பரிசிலிக்கபடவேண்டும்.. நிறைய பொறுப்புக்களை தலித் பிரதிநிதிகள் வகித்தாலும் நாடு விடுதலையடைந்து இத்தனை ஆண்டுகளாகியும்... உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியாக, குடியரசு தலைவராக நாடாளுமன்ற சபாநாயகராக கூட வரமுடிந்த நிலையில் பொலீட்பீரோவில் இடமளிக்கப்படவில்லையென்பது உண்மையில் வருந்ததக்க விடயம்.. .. இந்திய அரசியல் வரலாற்றில் நிறைய தவறுக்களுக்கு துணை போன விடயங்களை எல்லாம் ஆராய்ந்தால் (குறிப்பாக மூன்றாம் அணி போன்ற) பாசிசத்திற்கு துணை போகிற செயலைதான் அல்லது வழித்தடம் அமைத்து தந்த நிகழ்வுகள் தான் அதிகம் காணமுடியும்.. இதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு அளப்பெரியது.. இவர்களின் பலம் தொழிலாளர் நலன் பேசுவதும்.. தலித் மக்களுக்காக போராடுவதும் என்ற கட்டமைப்பை தவிர சரிக்குமான கம்யூனிஸம் இவர்களிடத்தில் இல்லை என்பதுதான் நிஜம்.. .. #The_absence_of_Communism… .. லால்சலாம்.. ஆலஞ்சி மன்சூர்

Saturday, October 15, 2016

திரை மறைவு அரசியல் திமுகவிற்கு தேவையில்லை

ஜெயலலிதாவை காண மருத்துவமனை சென்றவர்கள் மருத்துவர்களை சந்தித்துவிட்டு வருவதும் அவர்கள் கூறுவதை பத்திரிக்கையாளர்களிடம் கூறுவதும் தான் நிகழ்ந்தது..யாரையும் சந்திக்காத யாருமே சந்திக்காத சசிகலா .. ராஜாத்தி அம்மாளை சந்தித்ததும் அந்த சந்திப்பு நள்ளிரவில் நடந்ததும் அதுவும் 45 நிமிடங்களுக்குமேல் முதல்வர் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்/ஆலோசனை செய்தார் என்ற செய்தி நிறைய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.. .. இப்போது நடக்கிற திரைமறைவு அரசியலில் மத்தியில் ஆளும் பாஜகவின் அரசியல் நகர்வுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.. ஓபிஎஸ் நியமனத்தில் பொறுப்புகளின் சுமைதலையை கொடுத்தது கூட பாஜகவின் விரும்பமென்று பரவலாக கருத்துக்களை பல்வேறு அரசியல்கட்சியை சார்ந்தவர்களும் ஊடகங்களும் வெளியிடுகின்றன.. ராகுல் அப்போலோ வருகை கூட எதிர்மறை அரசியல் என கருதவேண்டியிருக்கிறது..இந்த நிலையில் தான் ராஜாத்தி அம்மாள் சசிகலா நடராஜனின் சந்திப்பை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. .. இது இப்போது நேற்றல்ல திருமதி காந்தி காலத்தில்தான் தொடங்கியது இந்த திரைமறைவு சூழ்ச்சிகள் பின் தொடர்ந்த ஆட்சியாளர்களும் தொடர்ந்து பின்வாசல் வழியைதான் நாடுகிறார்கள்.. சசி ராஜாத்தி சந்திப்பின் பின்னில் தற்காலிய ஏற்பாடுகள் .. அல்லது தேசிய கட்சிகளின் நெறிகெட்ட அரசியலுக்கு ஒரு முட்டுகட்டையை போட உதவியிருக்கலாம் ..ஆனால் இது திமுகவிற்கு குணம் சேர்ப்பதாக இருக்காது.. சசிகலாபுஷ்பாவின் அஸ்திரங்களிலிருந்து காக்க உதவலாமே தவிர வேறொன்றும் பயனளிக்கபோவதில்லை..ஏனெனில் கலைஞர் சாணக்கியர்களுக்கே #குரு... .. கொங்கு மண்டலத்தை சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்களை விலைபேசுவதாக செய்திகள்.. பாஜக செயல்பாட்டை கவனித்துக்கொண்டிருந்தாலே போதும் வேறெதுவும் செய்யதேவையில்லை திமுக இதுபோன்ற நேரங்களில் அமைதிகாப்பதே நல்லது.. ஜானகி ஜெ. அணிகள் மோதிக்கொண்டபோது இருந்த அதே நடுநிலையோடு செயல்பட்டால் திமுகவிற்கு பிரகாசமான எதிர்காலத்தை தரும்.. எந்தொரு முடிவையும் /அதிகாரத்தையும் மக்கள் தாமே முன்வந்து தரவேண்டும்.. அதற்கான தயாரெடுப்பில் இருந்தால் மட்டும் போதும்.. .. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். என்றான் வள்ளுவன்.. மனம் தளர்ச்சியடையாமல் நம்பிக்கையோடு முயற்சிசெய்தால் பெரிய வலிமையை தரும்.. .. #மக்கள்_வலிமைதருவார்கள்.. .. ஆலஞ்சி மன்சூர்

Thursday, October 13, 2016

ஊகங்கள்.. வதந்திகள்..கட்டுபாடுகள்

ஊகங்கள் வதந்திகள் கட்டுபாடுகள்.. .. முதவ்வரின் உடல்நிலை குறித்து எந்தவிதமான செய்திகளும் வெளிவரகூடாதென்று பொறுப்போடு செயல்படுகிறார்கள் ஊழியர்களின் செல்போன்கள் வரவேற்புஅறையிலேயே வாங்கிக்கொள்கிறார்கள்.. ஊழியர்கள் தொலைபேசிகள் கண்காணிக்கப்படுகிறதென செய்திகள் வெளிவருகிறது.. கருத்திடுவதில் உச்சநீதிமன்றத்தின் கருத்து பரிசீலிக்கப்படவேயில்லை.. தவறான கருத்தை சொன்னால் அவர்கள் மீது வழக்கு தொடரலாம் ஆனால் அதற்காக அவர்களின் உரிமைகளின் மீது மேலாண்மை செலுத்துவது சரியானதாக தெரியவில்லை.. எது வதந்தி என்பதை வரையறுக்கவில்லை.. பொய் தகவல்களை பரப்புவது வதந்தியில் வருமென்றால் ஊடகங்கள் அதில் பிரதான பங்கை வகிக்கின்றன.. .. முன்னுக்கு பின் தவறான தகவலைதான் தருகிறது.. ஊகங்களை நாங்கள் தருவதில்லை என பேசிவந்த தந்தியின் பாண்டே.. ஊகங்களை செய்தியாக்குகிறார்.. ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் 100 கோடி அபதாரதமும் நான்கு வருடசிறை என எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டபோது அதிகாரபூர்வ தகவல் வரும் வரை வெளியிட மறுத்து நாங்கள் எப்போதும் உண்மையான அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட செய்திகளை மட்டுமே வெளியிடுவோம் என்றார்.. ஆனால் அதே பாண்டே .. ஜெயலலிதா இரண்டொரு வார்த்தை பேசியதாக அப்போலோ வட்டாரம் சொல்கிறது என்றார்.. அப்போலோ அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாத போது வட்டாரம் சொல்லியதாக சொன்னார்.. இது ஊகமில்லையா.. அல்லது உண்மையாக இருப்பின் அதை அப்போலோ நிர்வாகம் வெளியிடவேண்டியது கடமையல்லவா.. .. கலைஞர் கருணாநிதி மருத்துவர் ராமதாஸ் போன்றவர்கள் எழும்பும் சந்தேகங்கள்.. பத்திரிக்கைகளில் வெளிவருகிறது இவையெல்லாம் கருத்திடலாகவோ அல்லது எதிர்கட்சியின் கசப்புணர்வில் வெளியிடப்பட்டதாக எண்ணிக்கொள்ளவேண்டியதுதானா.. ஒரு பெண்ணின் உடல்நிலை குறித்த விடயங்களை எழுதுவது சரியல்ல என்கிறார்கள் பெண் என்றில்லை ஆணாக இருந்தாலும் அவரின் தனிப்பட்ட விசயங்களை எழுதுவது முறையல்ல. ஆனால் இங்கே தமிழகத்தின் தலைமை அமைச்சர்.. உடல்நலமில்லாமல் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டவர் நீண்டநாட்களாக மருத்துவமனையில் தங்கியிருக்கிறார் .. அது குறித்து அரசு விளக்கமளித்திருக்கவேண்டாமா.. எல்லா ஊகங்களும் மறைந்துபோயிருக்காதா.. .. இந்துவில் பணியாற்றிவிட்டு பிறகு ஏசியாநெட் தொலைகாட்சியில் தலைமை செய்தியாளராக பணிபுரிந்த திரு.மோகன் நாளிதழ்களைபோல அல்ல தொலைகாட்சி மற்றும் சமூகவலைதளங்கள்.. எந்த செய்தியாக இருந்தாலும் அதை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் சரி.. அந்த செய்தி தவறானதாக இருப்பினும் அது தவறென்கிறபட்சத்தில் விளக்கத்தை சம்பந்தபட்டவர்கள் தந்தால் அதையும் வெளியிடவேண்டும் என்றார் ... .. தமிழச்சி போன்ற சிலர் சமூகவலைதளத்தை தவறாக கையாள்கிறார்கள் ..சாதாரணமாக ஒருவரின் மரணசெய்தி கிடைத்தால் கூட அதை உறுதி செய்துவிட்டுதான் வெளியிட வேண்டுமென்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் செயல்படுவது கண்டிக்கதக்கது இவர் போன்றவர்கள் தவறை உணர்ந்து மறுப்பை வெளியிட்டிருக்கவேண்டும்.. இவர்போன்றவர்களை புறக்கணித்தாலோ அல்லது கண்டுக்கொள்ளாமல் போனாலே போதும்.. .. கருத்திடுவது விமர்சிப்பது என்பதெல்லாம் நாகரீகமாகவும் நேர்மையுடனும்..இருக்கவேண்டும்.. அதேபோல் முக்கிய பிரமுகரைப்பற்றிய ஊகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் அரசுதரப்பு தெளிவான விளக்கத்தை தரவேண்டும்.. வழக்கு கைது போன்ற நடவடிக்கைகளால் வதந்திகளை நிறுத்திவிட முடியாது.. முதல்வர் நலம் பெற்று விரைந்து பணிக்கு திரும்பவேண்டுமென்றே எல்லோரும் விரும்புகிறா்கள்.. நாமும்.. #விரைந்துநலம்பெறவிழைகிறோம்.. .. ஆலஞ்சி மன்சூர்

Wednesday, October 12, 2016

நூற்றாண்டு நாயகன்..

அரசியல் தலைவர்கள்.. உலகெங்கும் தலைவர்கள் தங்களின் தனித்தன்மையை பறைசாற்றி வரலாற்றின் நெடுகிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள்.. எந்த ஒரு தலைவரும் ஒரு குறிப்பிட்ட காலஅளவிற்குள் மாத்திரமே பங்காற்றி வரலாறாய் நிமிர்ந்து நிற்கிறார்கள்.. சில தலைவர்கள் குறுகில காலத்திற்குள் புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறார்கள்.. சிலர் வெற்றி பெறும் போது பேசபட்டு பின் படிபடியாக நினைவில் இருந்து மறைந்து போய்விட்டார்கள்..சிலர் தோல்விகளில் துவண்டு பின்மாறி போயிருக்கிறார்கள்.. சரித்திரம் அவர்களை குறித்துக்கொண்டிருக்கிறது வெறும் பதிவாக.. ஆனால் காலத்தை மீறி..வெற்றியிலும் தோல்வியிலும் கொள்கையை விடாமல்.. துவழும் போதெல்லாம் தட்டியெழுப்பி மிகபிரமாண்டாமாய் எழ வைக்கும் ஆற்றல் கொண்ட தலைவர்கள் வரலாற்றில் அபூர்வம்.. முக்கால் நூற்றாண்டு காலமாய் தன்னை சுற்றியே அரசியலை சுழல வைக்கிற .. அடுத்த எந்த திசை நோக்கி செல்லவேண்டுமென்று தீர்மானிக்கிற சுழலும் அரசியல் சக்கரத்தின் அச்சாணியாய் ஒருவர் இருக்கிறார் எனில் அவர் #கலைஞர் மட்டுமே.. .. பலமுனை தாக்குதல்கள்.. தொடர் தோல்விகள்.. நம்பியவர்களின் நயவஞ்சகங்கள்.. எதிரிகளின் சதிவலைகள்..சிரித்தும் மகிழ்ந்தும் எல்லாவற்றையும் எதிரிக்கொள்ளும் பேராற்றல் சிலருக்குமட்டுமே உண்டு..வெற்றியிலும் தோல்வியிலும் தன்னை சுற்றியே அரசியல் ஆட்டத்தை இயக்கவைக்கிற வித்தை அறிந்தவர். .. எழுத்து மட்டுமே பிரதான ஆயுதமாக கொண்டு களத்தை அமைக்கிற ,எதிரிக்கும் அமைத்து தருகிற திறமை.. யார் எங்கே எப்படி செயல்படவேண்டுமென்று இவரின் எழுத்தும் பேச்சும் மட்டுமே தீர்மானிக்கிறது.. சில தலைவர்கள் சில துறைகளில் மட்டுமே கோலோச்சமுடியும்.. ஆனால் இவரால் .. கலை இலக்கியம், நாடகம் சினிமா.. அரசியல் வாழ்வியல் என எல்லாவற்றிலும் திறமையோடும் சிறப்போடும் பங்காற்றிட முடிந்தது.. அபூர்வ திறமை உள்ளவர்களால் மட்டுமே தொடர்ந்து இயங்கியும் மற்றவர்களை இயக்கியும்.. தன் கருத்துக்கொப்ப ஆட்டியும் ஆடவைக்கவும் முடியும்.. .. தெளிவான சிந்தனை தீர்க்கதரிசனம் தொலைநோக்குபார்வை, சமூகசிந்தனை., துளியும் துவண்டுவிடாத நெஞ்சுரம்., துணிவு.. விரைந்து முடிவெடுக்கும் ஆற்றல்.. தலைமைத்துவம்..அதைவிட தன்னைப்பற்றி முழுமையாக அறிதல்.. எதுவரை தம்மால் முடியுமென கணித்து செயல்படுதல்.. தன்பலம் பலவீனம் எதிரிகளின் பலம் பலவீனமறிந்து அரசியல் சதுரங்க காய்களை நகர்த்துதல்.. இவையாவும் ஒருங்கே பெற்றவர்தான் கலைஞர்.. .. என்பதாண்டுகளாய் இயக்கத்தை வளர்தெடுத்து கட்டிகாத்து தலைமைமேற்று செயல்படும்.. குறிப்பாக செயல்படும் அரசியல் இயக்கத்தின் தலைவர்.. இவரின் அசைவு ஒவ்வொன்றும் ஏதோவொரு சங்கதியை சொல்லிக்கொண்டே இருக்கும்.. அவை அனைத்தும் வரலாறாகும்.. உலக வரலாற்றில் முக்கால் நூற்றாண்டுகாலம் தன்னைச்சுற்றிய அரசியலை இயக்கவைத்த தலைவர்களென்றும் யாருமில்லை.. #தலைவர்_கலைஞரை தவிர .. .. வாழும்_வரலாறு.. #நூற்றாண்டின்_நாயகன்.. .. ஆலஞ்சி மன்சூர்

Tuesday, October 11, 2016

அரசியல் பிழை..வைகோ..

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட திமுகவிற்கு அருகதையில்லை வைகோ.. உண்மையில் வைகோ மீது பச்சாதாபம் வருகிறது..வாய்ச்சொல் வீரராகவே தமிழக அரசியலில் காலத்தை கழித்தவர் .. வைகோவின் பலவீனத்தை அவர் உணரவே இல்லை.. ஒரு ஒன்றிய கவுன்சிலருக்கு கூட நின்று வெல்லமுடியாத கட்சியை நடத்தி வருகிறவர் ஐந்து முறை நாட்டை ஆண்ட இப்போதும் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிற திமுகவைப் பற்றி பேச துளியும் அருகதையில்லாதவர் சொல்கிறார் திமுகவிற்கு அருகதையில்லை.. .. வைகோ அப்படியொன்றும் மிகப்பெரிய பலமில்லை என்பதை அப்போதே கணித்தவர்தான் கலைஞர் அவர்கள் ..அதனால்தான் மறுபடியும் திமுக (மதிமுக) என்றார்.. வைகோவின் வீழ்ச்சி 1989 ல் திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்த சில தினங்களிலேயே யாரிடமும் சொல்லாமல் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்க சென்ற போதே தொடங்கிவிட்டது.. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு புலிகள் தங்களுக்கென்ற ஆதரவை தமிழகத்தில் திரட்ட ஆள் தேடிக்கொண்டிருந்தார்கள்.. சட்டென்று உணர்ச்சி வயப்படும் வைகோதான் சரியானவர் என புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் இவரை தேர்வு செய்தார்.. அதுவரை புலிகளுக்காகவோ இலங்கை தமிழர்களுக்காகவே ஒரு துரும்பை கூட அசைக்காதவர்/ தராதவர்..கீழ்தஞ்சை மாவட்டத்தில் பெருமளவில் இலங்கை சொந்தங்கள் அகதிகளாக இருந்தார்கள் அவர்களுக்கு பொருள், உணவு ,பணிநியமனம் என எல்லா உதவிகளையும் திமுகதான் செய்தது அதுவும் எதிர்கட்சியாக இருந்தபோது.. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக இருந்த எங்களின் வழிகாட்டி கோசி.மணி அவர்கள்தான் உதவினார்கள்.. அப்போதெல்லாம் இலங்கை தமிழர்களிடத்தில் வைகோ யாரென்றே தெரியாது.. புலிகளின் உறவிற்கு பிறகு பிரபலமானார் தன்னை ஆளுமையாக காட்டிக்கொண்டார் ஆனால் He does not have great political personality என்பதை காலம் நமக்கு உணர்த்தியது.. ஆம் இவர் சிறந்த அரசியல் ஆளுமை அல்ல.. வர வர அரசியலில் உளறல் மன்னாகிவிட்டார்.. வைகோவிற்கு தெரியும் திமுகவை வீழ்த்தவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியாதென்று ஏனெனில் நிறைய தடவை பலரால் முயற்சி செய்து தோற்றுப்போன விடயம்.. வைகோ வேறெதாவது செய்து பிழைத்துக்கொள்ளலாம் அரசியல் அவருக்கு சரிப்பட்டுவராது. .. ஒரு கட்சியையோ அல்லது அமைப்பை சரியாக தலைமையேற்கவோ வழிநடத்தவோ தகுதியில்லாத ஒருவர்தான் வைகோ.. ஒரு அமைப்போ கட்சியோ எப்போது விழும் விழுந்தால் எப்போது எழும் எப்படி எழுப்பி கட்டமைக்கவேண்டுமென்ற தலைமைத்துவம் சிறிதுமில்லாத தரமோ தகுதியால்லாத #அரசியல்_பிழை வைகோ.. அவர் பேச்சுக்களை தமாஷாக எடுத்துக்கொண்டு புறந்தள்ள வேண்டும்.. He does not have great political personality.. He is political waste.. .. #அரசியல்_கழிவு.. .. ஆலஞ்சி மன்சூர்

பெண்கள் தினம்

பெண்கள் தினம்.. தாயென்றும் மகளென்றும் தாரமெனும் இளைப்பாறும் நிழலாய் தாங்கி நிற்கும் வலிமையாய் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் சர்வம் பெண்.. ஒருவர் வாழ்வில் எல்லாபக்கங்களிலும் அலங்கரிக்கும் ஆப்பரிக்கும் அள்ளிதரும் ஆலோசனை தரும் அன்பைதரும் ஜீவன்.. பெண் வாழ்வின் மையம்.. பெண்களைப்பற்றி எழுதும் போது நினைவில் வந்துநிற்கிறார் பெரியார்.. கடுமையாக பார்பணீயத்தை எதிர்த்த போதும் பிராமண பெண்கள் மீது சமூகம் கொண்ட பார்வையை கடுமையாக கண்டித்தவர்.. விதவைகளை விலகிவைக்கும் செயலை கண்டித்த அவர் மறுமணத்தை வெகுவாக ஆதரித்தார். பெண்கள் கல்விப்பற்றி .. உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் என்றார்.. எவ்வளவு ஆழமான சிந்தனை..கூடவே .. அதற்கான வசதி உள்ளுரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது பெண்குழந்தைகளுக்கு கல்வியை கொடுங்கள் என்றார்.. பெரியார்.. இந்த சமூகம் சீர்படவேண்டுமெனில் பெண்கள் கல்வியறிவு பெறுவது அவசியம்.. இன்றைக்கு பல்வேறு துறைகளில் பெண்கள் சிறப்பாக பங்களிக்கிறார்கள் .. ஆனாலும் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல் இன்னமும் தொடர்வது மிக கேவலமான ஒன்று. .. உலகளவில் கூட இன்னமும் பெண்கள் பங்களிப்பில்லாமல் எதுவும் முடியாதென்கிற நிலையில் கூட நசுக்கபடுகிறார்கள் என்பதே கவலைகுரியது.. பெண்களை இலக்கியங்களில் புகழ்ந்ததோடு சரியாகிவிட்டதாக நினைப்பதுதான் கஷ்டம்.. யதார்த்த நிலை மிகவும் கவலைக்குரியதாக அல்லது அவர்கள் உரிமைகளில் தலையிடுவதாகதான் இருக்கிறது.. பெண்களில் ஆளுமைகளே இல்லையா என கேட்டால் சொற்ப எண்ணிக்கையில் அடங்கிப்போகும்.. அரசியல் அதிகாரத்தில் இந்திரா, மம்தா,ஜெயலலிதா என இருந்தாலும் நிறைய பெண் ஆளுமைகளின் திறமைகள் அங்கரீக்கபடாமலேயே இருக்கிறது.. .. ஈரானில் தூக்கிலடப்பட்ட ரெஹானா தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் இப்படிதான் குறிப்பிட்டார் வெறும் கழிவாக இந்த பூமியில் விழ விரும்பவில்லை.. ஆம் பெண் வெறும் கேளிக்கையோ கழிவோ அல்ல.. அது #மா_தவம்_போற்றுவோம்_பெண்களை… ‍.. ஆலஞ்சி மன்சூர் புகைப்படத்தில் பேராசிரியர் மானமிகு Sylvia Nithia Kumari

Monday, October 10, 2016

ஊடகதர்மம்

கழுத்தில் துளையிட்டு டியூப் வழியாக திரவ உணவை உட்கொள்ளும் ஒருவர் எப்படி பேசமுடியும்.. புதுவை ஆளுநர் கிரண்பேடி.. சரியாகதானே சொல்கிறார்.. ஆனால் தந்தி டிவி இரண்டொரு வார்த்தை பேசினார் முதல்வர் என்பது மிகபெரிய பொய்யல்லவா..ஒரு ஊடகம் சராசரி பொதுஅறிவு common sense கூட இல்லாத ஒருவரை தலைமை செய்தி ஆசிரியராக வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுகிறது.. .. இதற்கு முன்பு அதிகாரிகளோடு அளவளாவினார் என்று செய்திகள் வெளியிட்டதும் காவிரி பிரச்சனையில் ஒருமணி நேரம் அமைச்சர்கள் மற்றும் துறைசெயலர்களோடு விவாதித்தார் என்று செய்திகள் வெளியிட்டது பொய்யென்றே நினைக்கவேண்டியிருக்கிறது.. திபாவளி போனஸ் கூட அரசு ஊழியர்களுக்கு அறிவித்தார் ஜெயலலிதா..இவையெல்லாம் ஊடகங்களும் அரசு செய்தியும் பொய்களை மக்களுக்கு சொல்லியிருக்கிறது.. .. மிகவும் சிரமபட்டு தூக்கி நிறுத்துகிற செயல் சரிதானா.. மயிலாப்பூர் மாலினி முதல் பாண்டே வரை ஏதோ ஒன்றிக்காக துடிக்கிறார்கள் நமக்கு புரியாமல் இல்லை.. அப்போலோவின் அறிக்கையில் முதல் பேசியதாகவோ அல்லது சாதாரண நிலைக்கு திரும்பிவிட்டதாகவோ இல்லை தொடர்ந்து Passive physiotherapy சிகிச்சை தரப்படுவதாக சொல்கிறார்கள்.. எய்ம்ஸ் மருத்துமனை Pulmonary நுரையீரல் துறையின் தலைவர் மீண்டும் வந்து சிகிச்சை அளிப்பதாக சொல்கிறதே தவிர முதல்வர் பேசியதாக இல்லை.. .. சசிகலா பஷ்பாவின் இன்று ஆணியடித்ததை மக்களிடமிருந்து மறக்க செய்ய இவர்கள் கிளப்பிய செய்தியா இது என சந்தேகம் எழுகிறது.. முதல்வர் உடல்நிலை சரியில்லாத போது இரண்டு சசிகளும் மோதுவதென்பது அதிமுகவிற்கு நல்லதல்ல.. சசிகலா பகிரங்கமாகவோ தன் சாதியை துணைக்கழைத்து ஆடுவது மிகப்பெரிய அபகடம்.. அரசியலில் சாதிகளின் பங்கு தவிர்க்கமுடியாததாகிவிட்டநிலையில் ..இப்படி வெறிக்கொண்டு வெளிப்படையாக செயல்படுவது மிகப்பெரிய விளைவை தரும்.. அதிமுக அரசியலில் மிகமோசமாகவர்களை தயார் செய்திருக்கிறது..என நினைக்கிறேன்.. இதுபோன்ற சதிராடுபவர்கள் நாட்டிற்கும் இனத்திற்கும் மொழிக்கும் பேராபத்தானவர்கள்.. என்னசெய்வது எம்ஜிஆர் தந்துவிட்டு போன ஆபத்தையே தமிழகம் தாங்கிக்கொண்டுதானே இருக்கிறது.. தெளிவில்லாதவர்களை சுயமில்லாதவர்களை, எதற்கும் லாயக்கில்லாத, தகுதியில்லாதவர்களைதான் அதிமுகவில் அதிகம் இவர்களை போன்றோர்களை வளர்த்துவிட்டால்தான்.. ஊடகங்களை நாலுகாசு பார்க்கமுடியும்.. அதைதான் பாண்டே வகையறாக்கள் செய்கிறார்கள்.. .. #ஊடகதர்மமாவது_வெங்காயம்… .. ஆலஞ்சி மன்சூர்

Sunday, October 9, 2016

மவுண்ட்ரோடுமஹாவிஷ்ணு

அரசியல் சாசனதிற்கு அப்பாலான சக்தி அரசை நடத்தகூடாது.. இந்துராம்.. இந்துராம் போன்றவர்களுக்கு தெரியாதா சசிகலா பிரதான சூத்ரதாரி என்று அல்லது மௌனமாக தன் ஊடக ஜனநாயக தர்மத்தை நிறைவேற்றுகிறாரா.. வேறொருவர் இயக்குகிறார் என்பது வெளிப்படையாக தெரிந்தும் தமிழகத்தின் பிரபலமான பத்திரிக்கைகள் மௌனம் சாதிப்பதை இவர் இதுவரை குறைகூறவில்லை மாறாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் மேற்கூறியவற்றை சொல்லி தன்நிலைப்பாட்டை தெளிவுப்படுத்திருக்கிறார்.. .. இந்து போன்ற மிக சர்வசக்தியும் உள்ள ஊடகம் இவர்கள் நினைத்தால் மத்திய அரசை தங்கள் போக்கில் செலுத்தமுடியும் அப்படியிருக்க ஏதோ யாரோ நடத்துவதைப்போல தெளிவில்லாமல் அல்லது நேரடியாக குற்றம் சாட்டாமல் கருத்தை சொல்லியிருக்கிறார்.. மவுண்ட்ரோடு #மஹாவிஷ்ணுவின் பலம் நாமெல்லாம் அறிந்தது தான் ஆனாலும் ஒரு சங்கடம் வெளியில் சொல்லமுடியாமல் #வராதுவந்தமாமணியை காக்க முயற்சிக்கிறார்கள்.. ஜெயலலிதாவின் உடல்நிலை காரணம் காட்டி பிறர் சுரண்டுவதை அல்லது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்ககூடாது என்பதில் மாற்று கருத்தில்லை.. அதனால் தான் எதிரிக்கட்சி தலைவர் திரு.ஸ்டாலின் கூட பொறுப்பு முதல்வரை தேர்வு செய்யவேண்டுமென்கிறார்.. ஏறக்குறைய அதே கருத்தைத்தான் திரு.என்.ராம் அவர்கள் ஒலித்திருக்கிறார்.. ஆனால் வேறு வடிவில்.. அரசியல் சாசனத்திற்கு அப்பாலான சக்தி என்கிறார்.. பினாமிகள் கூட அரசியல் சாசனத்திற்கு அப்பாலானவர்கள்தான்.. இரண்டுமுறை ஓ.பி.எஸ் முதல்வராக இருந்தபோது கூட அதிகாரம் அவரிடமில்லை.. குற்றவாளியை சந்திக்க மத்திய அரசின் கேபினட் அமைச்சர் வருவதும் கலந்துரையாடுவதும் கூட அரசியல் சாசனத்திற்கு அப்பாலான காரியம் தான்.. இந்தியாவிலேயே குற்றவாளியாக தண்டனை பெற்ற ஒருவர் அரசு காரியங்களில் வெளிப்படையாக தலையீடு இருந்ததும் அரசின் உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை பெற்றதும் ..அரசியல் சாசனத்திற்கு எதிரானது தான் அப்போதெல்லாம் கருத்தை சொல்லாத திரு.என்.ராம் அவர்கள் இப்போது பேசுகிறார் என்றால் அதன் மறைவில் உள்ள அரசியலை தாண்டிய ஜனநாயக கடமைகளை தாண்டிய,இனஉணர்வை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.. .. #மவுண்ட்ரோடுமஹாவிஷ்ணுவை_அறிவோம்… ‍.. ஆலஞ்சி மன்சூர்

Saturday, October 8, 2016

இலையுதிர்காலம்

திரைமறைவில்.. நாளுக்குநாள் சந்தேகங்களை விதைத்துக்கொண்டே போகிறது.. சில ஒலிவடிவிளான (ஆடியோ) யூ டியூப் YouTube செய்திகள் மக்களிடையே வேகமாக சென்றடைகிறது. இந்நிலையில் சம்மந்தமே இல்லாமல் ஆளுநர் நேரத்தை ஒதுக்கி வைகோவை சந்திக்கிறார்.. அங்கீகாரம் இல்லாத ஒரு அரசியல்கட்சிதலைவரை.. சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ உள்ளாட்சிகளில் கூட பிரதித்துவம் இல்லாத லெட்டர்பேட் கட்சி தலைவரை சந்திக்கவேண்டிய அவசியமென்ன..? .. வலைதளங்களில் அதிகாரத்தை கையிலெடுக்கபாஜகவும் அதற்கிடையூறாக காங்கிரஸூம் களத்தில் என செய்திகள் வெளிவருகிறது.. வைகோவின் சமீபகால அரசியல் நடவடிக்கைகள் தரகர் நிலைக்கு அல்லது இடைநிலைக்காரன் என்று அறியபடுகிறார் அதனாலேயே சந்தேகநிழல் வருகிறது.. கவர்னரை சந்தித்தின் நோக்கமென்ன என்ன விடயம் பேசபட்டதென்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளிவருகிறது .. அது அதிமுகவிற்கு குணம் சேர்ப்பதாக இல்லை.. நிறைய அரசியல் தலைவர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலைக்குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துக்கொள்ள அப்போலோ வருகிறார்கள் ஆனால் வைகோவிற்கு மட்டும் மேல்விலாச அட்டையை தருகிறார் லண்டன் மருத்துவர் .. வைகோவை சரியாக எடைபோட்டுயிருக்கிறார்.. .. உண்மையில் நடப்பதென்ன என்பது தங்கமலை ரகசியம் போலிருக்கிறது.. இன்றைய மருத்துவ அறிக்கை நிறைய குழப்பத்தில் இருப்பதை காட்டுகிறது Passive physiotherapy செயலற்ற உடல் உறுப்புகளை செயல்படவைக்கும் உடற்பயிற்சி முறை.. இது முன்பு கூறிய தகவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை குறித்த தகவல்கள் வெளிவருகிறது... தினம் தினம் மாறுபட்ட தகவல்களை தருகிறது அப்போலோ நிர்வாகம்.. .. பிரதான எதிர்க்கட்சிதலைவர் திரு.ஸ்டாலின் மருத்துவமனை வந்தது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.. இங்கே புகழ்பாடுவதாக கருதகூடாது சிறந்த எதிர்க்கட்சி தலைவராக மட்டுமல்ல நல்ல அரசியலையும் கையில் எடுத்திருக்கிறார்.. தளபதி அவர்கள்.. ஏனெனில் ஜெயலலிதாவிற்கு தெரியாத அரசியல் நாகரீகம் இது.. .. நிறைய வதந்திகள் ,ஊகங்கள் ,பித்தாலாட்ட அரசியல் ,கயிறுதிரித்தல், தேசியகட்சிகளின் இலைமறைவு காய்நகர்த்தல்கள்.. இதெல்லாம் நல்ல அரசியலை முன்னெடுக்காது..நல்லதுமில்லை.. மக்கள் அமைதியா கஎல்லாவற்றையும் மிக கவனமாக உற்றுநோக்குகிறார்கள்.. காரணம்.. அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களென்று யாருமில்லாத நிலை / உருவாகவேஇல்லை.. .. #இலையுதிர்காலம்.. .. ஆலஞ்சி மன்சூர்

அநாகரீக கூத்து

நான் சொல்லல சிறந்த அறிவாளி இவருதான்னு.. பொறுப்பு முதல்வர் எல்லாம் தேவையில்லை கருணாநிதி 45 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது யாரும் கேட்கவில்லையே என்கிறார் வாய்ச்சொல்வீரர் வைகோ.. .. கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது நாடகமாடுகிறார் .. காவிரியில் தண்ணீரில்லை விவசாயி சாககிடக்கிறான் இவர் உல்லாசமாக ஓய்வெடுக்கிறார் தலையில்லா தமிழகம் என பேசியவர்தான் இந்த வைகோ.. .. கலைஞர் முதுகுதண்டு அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கபட்டபோது தளபதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்புக்களை பார்த்துக்கொண்டார்.. என்று தெரிந்தும் #நக்காபிச்சைக்காக இன்று கலைஞரை இதில் இழுத்துவிடுகிறார்.. ஜெயலலிதாவிற்கு உடல்நிலை வைத்து அரசியல் செய்யபோவதில்லை என்ற உயர்குணம் கொண்ட ஸ்டாலின் முன் சிறிதாய் போனார் வைகோ.. வைகோ என்றில்லை உதிரிகள் எல்லோருமே அன்று கலைஞரை கரித்துக்கொட்டியவர்கள்தான் இவர்கள் நேர்மையான அரசியல் செய்பவர்களில்லை மாறாக அரசியலை மக்கள்நலனுக்காக அல்ல இவர்கள் கட்சி நடத்துவதும் இவர்கள் கருணாநிதியை திட்டினால் ஏதாவது கிடைக்காதா என நினைக்கிற கூட்டம்.. அப்படியே பழகிப்போய்விட்டது.. இவர்கள் தங்களுக்கென்ற முகத்தை இழந்து வெகுகாலமாகிவிட்டது.. இவர்களை மக்கள் புறந்தள்ளியாகிவிட்டது யாரிடமாவது எதாவது கிடைக்காதா என அலைகிறார்கள் அவ்வளவுதான் இவர்களின் பலம்.. .. முதல்வர் உடல்நிலை குறித்த தகவல்கள் (வதந்திகள்) கவலையளிக்கிறது என பாண்டே உருகுகுறார்.. உண்மைநிலையை உலகுக்கு சொல்லவேண்டுமென்ற தார்மீக கடமையை கூட ஊடகங்கள் செய்ய மறுக்கிற சூழல் .. தினம் ஒருவரை அழைத்து கண்ணீரோடு ஒரு பேட்டி அல்லது சிறிய பிரசங்கம் இதெல்லாம்.. முதல்வரை வைத்து நடத்தப்படும் அநாகரீக கூத்து.. .. உண்மையில் இவர்கள்யாவரும் முதல்வர் மீது அக்கறை இல்லாதவர்கள் அதேபோல் நாட்டின் மீதும் மக்களின் மீதும் சிறிதும் கவலையில்லாதவர்கள்.. எதையாவது பேசி உள்ளேன் ஐயா சொல்லி காலம் கடத்தும் காரியஸ்தர்கள்.. பாவம் அவர்களுக்கு அவர்கள் #காரியம் பெரிது.. .. #நொண்டிக்குதிரைகள்_பந்தயத்திற்கில்லை.. ஆலஞ்சி மன்சூர்

Friday, October 7, 2016

அண்ணன் சொன்னது அர்த்தம் உள்ளது

முதல்வரின் உடல்நிலையை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை.. எதிர்க்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின். .. அரசியல் நாகரீகம் என்பதை தாண்டி மனிதாபிமானமுள்ள கருத்தாக கொள்ளவேண்டும்.. இதோ தேசிய கட்சிகள் அரசியல் செய்ய தொடங்கிவிட்டன.. யாருமே அழைக்காமல் எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி வேவு பார்த்தார்கள் அதன் அறிக்கை மோடிக்கு சென்றிருக்கும்.. அதேபோல் ராகுல்காந்தி விசிட் மனிதாபிமானம் என்பதை தாண்டி அதன் உள்அரசியல் காங்கிரஸின் கலாச்சாரம் என்பதும் நாம் அறிவோம்.. .. ஜெயலலிதா அப்போலோவின் அனுமதிக்கப்பட்ட மறுதினமே அவர் உடல்நிலை குறித்த தகவல்கள் கலைஞருக்கு சென்றுவிட்டது அதனால்தான் சிலநாட்கள் அமைதிகாத்து பின் ஆளுநர் கையிலெடுக்கவேண்டுமென அறிக்கை தந்தார் .. அதன் பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவர் வந்து பார்த்து வேறுவழியே இல்லாமல் நீண்டநாட்கள் தங்கியிருக்கவேண்டுமென்ற அறிக்கையை அப்போலோ வெளியிட்டது.. அதுவரை நீர்சத்து குறைவென தொடர்ந்து சொல்லி வந்ததை நாம் அறிவோம்.. .. திமுகவின் இப்போதைய அமைதி மிகச்சரியான அரசியல்.. நாகரீகமான நேர்மையான நடவடிக்கை.. முதல்வரின் நிலை நன்கறிந்து அதை மறைக்கிறார்கள் என்றவுடன் வெளிகொணர்ந்ததோடு நாகரீகமாக ஒரு பார்வையாளராக இருப்பதும் தவறான போக்கு என தெரிந்தால் சுட்டிகாட்டி அதை வெளிகொணருவது என்பதே சரியான நடவடிக்கை.. இன்னும் நிறைய நாடகங்களை காண இருக்கிறோம்.. சகிக்கமுடியாத கேலிகூத்துக்கள் நடைபெறும்.. வைகோ, மோடி போன்றவர்களின் .. சிறந்த நடிப்பு அரங்கேறலாம்.. அதுவரை பொறுத்திருப்போம். தளபதி சொன்னதுதான் சரி அவரின் உடல்நிலையை காட்டி அரசியல் செய்யவிரும்பவில்லை.. .. #அண்ணன்சொன்னதில்_அர்த்தமுள்ளது.. .. ஆலஞ்சி மன்சூர்

சூரியனைச்சுற்றி..

இப்போதைய தேவை.. .. நீண்டநாட்களுக்கு பிறகு மௌனம் கலைத்தது அப்போலோ.. வேறுவழியில்லாமல் முழுநீள அறிக்கையை தாக்கல் செய்தது அதிலும் கவனமாக சிலவிடயங்களை தவிர்த்து வெளியிட்டது.. லண்டன் மருத்தவரை அழைத்து வந்து பரிசோதித்த போது கூட வெளியிடபடாத ஜெயலலிதா உடல்நிலை குறித்த தகவல்களை எய்ம்ஸ் மருத்துவர்களின் வருகைக்கு பிறகு வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது அப்போலோ.. .. நீண்டநாட்கள் என்பது அரசை நிர்வகிப்பவர் கவனிக்காமல் போனால் யார் நிர்வகிப்பதென்து என்கின்ற கேள்வி எழுவது இயல்பு அதனால்தான் கவர்னரும் தலைமை செயலரோடு கலந்தாலேசிக்கிறார் .. திடீரென காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் வந்து வழக்கம் போல் மருத்துவரை சந்தித்து நலம் விசாரிக்கிறார்.. அதை அங்கிருந்தே கேட்டிருக்கலாம்.. ஆனால் அதன் பின்னில் உள்ள அரசியல் சட்டென்று பிடிக்கிட்டாதது.. ஆளும் பாஜகவின் காய் நகர்த்தல்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கிவிட்ட நிலையில் காங்கிரஸை தங்களின் #பழையநண்பர் திருநாவுகரசரைக்கொண்டு இனபாசத்தை காட்டி.. ஆதரவை பெற முயற்சிக்கும் #சூது சிறந்ததுதான்.. .. பாஜகவின் சு.சுவாமி தமிழகத்தில் நிலவும் அசாதாரணசூழலை கையிலெடுத்து அரசை ஏற்றெடுக்கவேண்டுமென கருத்திடுகிறார் கூடவே ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ஆறுமாதத்திற்கு கொண்டுவரவேண்டுமென்கிறார்.. தேசிய கட்சிகள் களி தொடங்கிவிட்டது.. சசியின் அனுமதியில்லாமல் ராகுல் சென்னை வர வாய்ப்பில்லை.. ஜெயலலிதாவோ கேட்கவோ சொல்லவோ முடியாமல் ஒருவித மயக்கத்தில் இருக்கிற நிலையில் தங்களை காத்துக்கொள்ள காங்கிரஸின் துணை தேவைப்படுகிறது..அதைதான் செய்திருக்கிறார்கள் .. .. இவை யாவைவற்றையும் மௌனமாக வேடிக்கை பார்க்கிறது திமுக அதுதான் சிறந்ததும் கூட .. கலைஞரின் அறிக்கைக்கு பிறகுதான் கதவுகள் லேசாக திறக்கப்பட்டது.. கவர்னர் வந்தார்.. இதோ இப்போது ராகுல் வரை.. கலைஞரின் மௌனத்தில் பெரும் இரைச்சல் கேட்கும் அவையெல்லாம் அவரை சரிக்கும் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.. கடந்த 25 ந்தேதியே கலைஞருக்கு முதல்வரின் உடல்நிலை குறித்து முழுவிபரமும் தெரியும்..என்பதுதான் சுவாரஸ்யம்.. (அப்போலோவின் பிரதாப் ரெட்டி கலைஞரின் நண்பர்..).. .. திமுக வின் செயல் சரியானதும் போற்றதக்கதும்.. வீணான வேலைகளிலோ அல்லது குழப்புவதிலோ கடக்காமல் அமைதியாக நமது கவனத்தை மட்டும் வைத்திருப்போம்..விடையை நாம் எழுதலாம் அதுவரை தேசிய கட்சிகளின் பாசிச சக்திகள் ஆட்டத்தை காண்போம்.. .. #சூரியனைச்சுற்றிதானே_எல்லாம்அசையும்.... ஆலஞ்சி மன்சூர்

Thursday, October 6, 2016

மக்கள் தலைவன்

இப்படியொரு தலைவனைதான் தவறவிட்டீர்.. கையில் கொடுத்த பண்டத்தை தெருவில் வீசிவிட்டு பசிக்கிறதென்கிறீர்.. .. நாளெல்லாம்.. நலன் மட்டுமே நினைக்கும் நல்லவர்களை .. நாலு காசாக்காக நழுவவிட்டீர்.. .. பதவி தந்தாலும். பவுசுகாட்டாத. எதிரியும் வணங்கும் எங்கள் தளபதி.. மக்கள் குறைகளை மகேசன் மறந்தாலும் மாறாத நிலையோடு மக்களுக்காக நமக்காக.. உழைக்கும் .. மாண்பாளர் .. .. மக்கள் அழுகுரல் கேட்டால் மன்னர்கள் உறக்கத்திலிருந்தாலும் உணர்வற்றிருந்தாலும் இந்த மாமனிதன்.. முன் நின்று குறைகேட்பான். இப்படிபட்ட தலைவனைதான்.. நீர் தவறவிட்டீர்.. .. வரும் முன் காப்பவன்.. வந்தபின்னும்.. காப்பவன்.. மக்களின் தலைவன்.. காவிரிக்கரையின் அழுகுரல் கேட்டு.. கண்ணீர் துடைக்க கரம் நீட்டுகிறான்.. காசுக்கு வாங்கியவர்கள் கைகழுவிச் சென்று கண்விழிக்காமல் கிடக்கும் போதும்.. மக்கள் அழுத கண்ணை துடைப்பதற்கு மாபெரும் அறப்போரை தானே முன்னின்று... நடத்திடுகிறான்.. .. இப்படியொரு தலைவனைதான் நீர் தவறவிட்டீர்.. கையில் கொடுத்த பண்டத்தை தெருவில் வீசிவிட்டு பசிக்கிறதென்கிறீர்.. .. ஆலஞ்சி மன்சூர்

கசடுகள்

சிலர் என்ன வேசம் கட்டினாலும் அவரகளின் சுயம் ஒருநாள் காட்டிகொடுத்துவிடும்.. ஜெயலலிதாவை ஆதரிப்பவர்களை நீங்கள் தொடர்ந்து நோக்கி வந்தால் அவர்களின் அசல் உங்களுக்கு பிடிகிட்டும்.. ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் ஜனநாயத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்களாக தங்களை காட்டிக்கொள்வார்கள் உண்மையில் ஜெயலலிதா என்னதான் காலில் போட்டு மிதித்தாலும் அவர்களுக்கு கசக்காது..காரணம் எல்லாவற்றிக்கும் இங்கே நிர்ணயம் உண்டு.. .. ஜெயலலிதா ஒரு அடிமையைவிட கேவலமாக நடத்தினாலும் தான் தோன்றித்தனமாக தூக்கியெறிந்து இவர்களை தோலுறித்து காட்டினாலும் வாய்மூடி இருப்பார்கள்.. காரணம் கேட்டால் ஜெயலலிதாவை விட்டால் கருணாநிதி வந்துவிடுவார் என்பார்கள்.. கருணாநிதி வரகூடாதென்பதல்ல இவர்கள் நோக்கம் மாறாக தங்களின் கூலி சரியாக கிடைக்கவேண்டுமென்பதே தவிர வேறொன்றுமில்லை.. .. சில தினங்களாக அப்போலோ இரண்டாவது தளம் வரை சிலர் விசிட் செய்கிறார்கள் ஜெயலலிதா மொழியில் #உதிரிகள்.. அவர்களுக்கு தெரியும் நிச்சயமாக ஜெயலலிதாவை காண அனுமதி கிடைக்காது.. கவர்னரே மருத்துவரை தலந்தாலேசித்துவிட்டு போகவேண்டிய நிலை ஏற்பட்டது .. ஜெயலலிதாவின் இரத்த சொந்தந்களே தெருவில் நிற்கவேண்டியிருக்கிறது... நம்மால் ஒரு சிறுஅடிகூட முன்னேறிசெல்ல முடியாது என்பதை அறிவர்.. பின் எதற்காக வருகை பதிவேட்டில் கையொப்பமிடவேண்டும் ஜெயலலிதா மீது அக்கறையா நிச்சயமாக இல்லை.. எப்போதாவது ஜெயலலிதாவின் அல்லது சசிகலாவின் பார்வை பட்டால் கொஞ்சம் பிழைத்துக்கொள்ளலாம் என்பதற்காகவே இந்த #உள்ளேன்_மிஸ்.. .. திருமா தா.பா வேல்முருகன்.. இன்னும் நிறையபேர்கள் வருவார்கள் .. மிகவும் அக்கறையுள்ளவர்கள் போல பேசி விளம்பரம் தேடிக்கொள்வார்கள்.. இவர்கள் வேசம் கட்டும் கூத்தாடிகளை விட மோசமானவர்கள்.. இவர்களிடம் தான் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.. பாசாங்கு செய்யும் கபடதாரிகள்.. .. #கசடுகள்.. .. ஆலஞ்சி மன்சூர்