Monday, July 31, 2017

திருப்பிஅடி

கடும் கோவத்தில்.. என்ன நடக்கிறதிங்கே.. நாட்டின் பிரதமர் தலித் மீது தாக்குதல் நடத்துவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாதென்கிறார்.. தலித்கள் வேட்டையாடபடுவது அதிகரிக்கிறது.. மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால் பிரிவினை செய்வதை அனுமதிக்க முடியாதென்கிறார்.. ஜாதி மத மோதல்கள் அதிகரிக்கிறது.. அதாவது மௌனமாய் எதிர்மறையாக செயல்பட ஊக்குவித்தல் நடக்கிறதா.. .. தலித்துகள் இந்த நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என பாஜக அரசு அறிவித்துவிட்டதா.. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு குறிப்பாக வடமாநிலங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான தாக்குதல் பெரியளவில் கூடியிருக்கிறது.. இதை செய்வதை பாஜக ஊக்குவிக்கிறது இதன் மூலம் குறிப்பிட்ட பிரிவினரை அதிகார திமிரோடு கிரிமினலாக்கி..அவர்களின் உரிமைகளை எடுத்துக்கொள்ளும் மறைமுக திட்டம்.. இடைசாதிகாரர்களை குற்றவாளியாக்கி குளிர்காய நினைக்கிறார்களோ என சந்தேகம் வருகிறது.. .. வடமாநிலங்களில் பாஜக வெற்றிக்கு பிறகு நடக்கும் தாக்குதல்கள் இந்தியாவில் இதுவரை ஒரு போதும் நடக்காதது .. குறிப்பாக தலித் மற்றும் இஸ்லாமியர்கள் வேட்டையாடபடுகிறார்கள் அதிலும் குறிப்பாக தலித்.. இந்தியா வாழ்வதற்கு லாயிக்காத நாடாகிறதென்று சொன்னால் வேறு நாட்டிற்கு போய் தொலை என்கிறான் முலைவரி கட்டிவளின் பேரன்.. நாடு நமதடா என இவனுக்கும் சேர்த்து சொல்ல வேண்டியிருக்கிறது.. .. இங்கே என்ன கிழித்தது திராவிடம் என கூச்சல் போடுவோரே.. என் சகோதரிகளையை இங்கே அம்மணமாக ஓட விடாமல் காத்திருக்கிறதே.. மதம் தலைக்கேறி சாதிவெறிப்பிடித்து அலைபோரை தலையில் தட்டி அடக்கி வைத்திருக்கிறதே.. இடுப்பு வேட்டியை இறுக கட்டி தோளில் துண்டோடு நடக்கவைத்திருக்கிறதே.. கும்பிடுறேன் சாமி என்ற அடிமைத்தனத்திலிருந்து விடைவாங்கி தந்திருக்கிறதே.. அச்சத்தோடு திரியாமல் அமைதியாய் தமிழகத்தில் ஏழைகளும் நடமாட முடிகிறதே ..இதுகூட பெருங்கிழவன் பெரும்பாடுபட்டு மீட்டுதந்தது தான்.. இல்லையெனில் ஆண் பெண் என்றுபாராது கோவணத்தை உருவி.. ஓடவிட்டிருப்பான் அயோக்கிய மத ஜாதி வெறிப்பிடித்த நாய்கள் .. இந்த ஆட்சிக்கு முடிவுகட்டியாக வேண்டும் .. மனிதனை மனிதன் இழிவாய் பேசி தாக்குதல் நடத்தும் அயோக்கத்தனத்திற்கு .. ஜாதீய மதவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேணும்.. இந்த பாசிச ஆட்சி அகற்றப்படவேண்டும்.. .. #அடங்கமறு_அத்துமீறு_திருப்பிஅடி.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment