Thursday, July 20, 2017

வளர்மதி

கிளர்ச்சியை தூண்டும் வகையில் துண்டு பிரசுரம் செய்ததால் தோழர் வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது.. முதல்வர் எடப்பாடி ..மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைதுசெய்தது சரி.. மாணவர்களிடையே தீவிரவாதம் அதிகரித்துவிட்டது எச்.ராசா.. தமிழிசை.. .. முதலில் அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளில் ஒன்று அரசுக்கெதிராக போராடுவது போராட மக்களை ஒன்று திரட்டுவது.. இதுகூட தெரியாமல் முதல்வராக இருக்கிறவரின் அரசியல் அறிவைக்கண்டு வியக்காமல் இருக்கமுடியவில்லை.. தடைச்செய்யபட்ட இயக்கத்திற்கு ஆதரவாக கூட துண்டுபிரசுரங்கள் வீதிகளில் தொடர்முழக்கங்கள் பிரசாரங்கள் செய்யலாம் அது தண்டனைக்குரிய குற்றமில்லையென உச்சநீதிமன்றமே தமிழ் அமைப்புகள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரபாகரனின் படங்கள் பதாகைகள் ஆதரித்து துண்டுபிரசுரங்கள் வெளியிட்டதை எதிர்த்து ஈழத்தாய் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மேற்கூரிய தீர்ப்பை வழங்கியது.. அகெல்லாம் தெரிந்தும் பாஜகவின் சொல்படி ஆடும் அதிமுக அரசு தோழர் வளர்மதியை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறது.. .. வளர்மதி செய்த குற்றம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கெதிராக மக்களிடம் விழுப்புணர்ச்சியை ஏற்படுத்த சமூகவலைதளங்களையும்.. துண்டுபிரச்சரமும் தெருமுனை விளக்கமும் செய்தது .. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குற்றமென .. குற்றவாளி அரசு என தினம் தினம் சொல்லிக்கொள்ளும் அதிமுக அரசு நினைக்கிறது போலும்.. உண்மையில் வெட்கி தலைகுனிய வேண்டும் .. இப்போதுமட்டுமல்ல கிரிமினல் ஜெயலலிதா ஆட்சியின் போது கூட பலமுறை நீதிமன்றம் குட்டுவைத்திருக்கிறது..அதேதான் இந்த முறையும் நடக்கும்.. தோழர் வளர்மதி தீவிரவாதியாகவோ அல்லது இறையாண்மைக்கெதிராகவோ செயல்பட்டதாக அரசே சொல்லவில்லை மாறாக மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தினார் என்கிறது.. .. போராட தூண்டுவது குற்றமல்ல மக்களிடம் இந்த திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்து சொல்ல அரசு இந்த திட்டம் கைவிட வலியுறுத்தி போராட அழைப்பது சட்டப்படி குற்றமில்லை.. குற்றவாளி அம்மா அரசிற்கு இதெல்லாம் புரியாதா .. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment