Monday, July 17, 2017
கமலின் அரசியல் பார்வை
"கமல்ஹாசனாவது பொதுவாக அனைத்துத் துறையிலும் ஊழல் என்றார். அதற்காக அவர் மீது அவதூறு வழக்கு போடுவதாக அதிமுக அமைச்சர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள். நான் பெயர் குறிப்பிட்டு ஒவ்வொருவரின் ஊழல் பட்டியலை சொல்லிவருகிறேன் . அமைச்சர் விஜயபாஸ்கரின் ஊழல், முதலமைச்சர் பழனிசாமி செய்த ஊழல், பான் மசாலா குட்கா விவகாரத்தில் போலீஸ் உயரதிகாரிகளும் அமைச்சர்களும் சேர்ந்து செய்த ஊழல் என ஒவ்வொன்றையும் ஆதாரத்தோடு குற்றஞ்சாட்டுகிறேன். என் மீது வழக்கு போட தயாரா..?!"
தமிழக எதிர்க்கட்சித்தலைவர்
#மாண்பிமை_ஸ்டாலின்
..
பதில் சொல்ல திராணி இருக்கிறதா தமிழக அமைச்சர்களுக்கு.. கமல் மீது விழுந்து பிராண்டும் இவர்கள் யோக்கியதையை தளபதி சட்டமன்றத்தில்யே மக்கள் மன்றத்திலேயும் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார்.. ஆனால் கொஞ்சம் கூட வெட்கே இல்லாமல் மௌனம் சாதிக்கிறவர்கள் மக்களை மகிழ்விக்கும் கலைஞன் மீது கோவம் கொள்கிறார்கள்.. திருமணம் ஆகாமலேயே வாழ்ந்தார்
Give it together என்கிறார்கள் அதில் இவர்களுக்கென்ன வந்தது சம்பந்தப்பட்டவர்கள் திருமண ஒப்பந்தத்தில் நம்பிக்கையில்லாமல் வாழ்ந்தார்கள் பிரிய வேண்டும் என்கிறபோது நண்பர்களாக பிரிந்தார்கள்.. தனிநபரை விமர்சிப்பதென்பது தவறு அதை அரசாள்போரே செய்வது தவறு மட்டுமல்ல இவர்கள் மீது மானநஷ்ட ஈடு வழக்கே போடலாம்..தனிநபர்களின் Privacy உரிமைகளில் தலையிட இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது..
உண்மையில் இவர்களெல்லாம் ஜெயலலிதாவை சரியாக படிக்கவில்லையென்றே தோன்றுகிறது.
கமலுக்கெல்லாம் முன்னோடி தான் இவர்களின் புரட்சித்தலைவி தான் இவ்வளவு அழகாக தங்களை தலைவியை கிண்டல் செய்து அவமானபடுத்த முடியாது
..
கமல் அரசியலுக்கு வந்தவுடன் விமர்சிக்கட்டும் என்கிறார் ஜெயகுமார்..எல்லோரும் அரசியலுக்கு வந்துதான் விமர்சிக்கவேண்டுமென்பதில்லை நாட்டின் குடிமகன் வாக்களிக்கும் உரிமை பெற்றவன் விமர்சிக்க எதிர்க்க எல்லா உரிமையும் உண்டு..
கமலின் அரசியல் பார்வை ஜெயகுமாரின் அரசியலை விட சிறந்தது..
அதுசரி உரிமைகளை பற்றி அடிமாடுகள் போல் ஜெயலலிதாவால் நடத்தப்பட்டவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லைதான்..
..
ஜனநாயகமென்பது கூஜா தூக்குவதோ ஜால்ரா போடுவதோ அடிமைகளைப்போல தலையாட்டி நடப்பதோ அல்ல.. எந்த கருத்தை யார் சொன்னாலும் அதில் உடன்பாடில்லையென்றால் சத்தமாக எதிர்ப்பதும் விமர்சிப்பதும் தான்..சர்வாதிகாரியின் காலடியில் விழுந்து கிடந்த இப்போது ஆட்சி அதிகாரமிருந்தும் யாராருக்கோ பயந்து தலையாட்டி திரியும் அடிமைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை..
..
எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடர்வாரே ஜெயலலிதா அதைப்போல தளபதி மீது வழக்கு தொடர வேண்டியதுதானே..
ஜெயலலிதா தொடர்ந்தே வழக்கையே ஒன்றுமில்லாமல் செய்தவர்கள்.. இப்போது வழக்கு தொடர்ந்தால் கட்டிய வேட்டியும் உருவப்படும்..
..
கமல் கேட்பதிருக்கட்டும் தளபதி மீது வழக்கு தொடருங்கள்
முடியாது காரணம் அவ்வளவுபேரும் கிரிமினல்களாக வலம் வருகிறார்கள்..ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்ததைப்போல .. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வழக்கு தொடரப்படும்.. நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் .. அதற்கு முன் மக்களால் புறக்கணிக்கபட்டு விரட்டபடுவீர்கள்..
..
காலம் காத்திருக்கிறது..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment