Tuesday, July 4, 2017
தமிழ்த்தாய் வாழ்த்து
மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா எழுதியது யாருன்னு கேளுங்க தெரியலேன்பார்கள் இல்லைன்னா பாரதின்னு சொல்வாய்ங்க காரணம் பெண்ணை பற்றி உயர்வாக எழுதியிருந்தாலே பாரதிதான் எழுதியிருப்பாரென நினைப்பு.. உண்மையில் அப்படியே டிசைன் செய்யபட்டிருக்கிறோம்.. கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்.. இங்கே பாரதி பேசபட்டது போல் மற்ற கவிஞர்கள் பேசபடவில்லை உயரத்திற்கு கொண்டு செல்லபடவில்லை..
இதோ.. தமிழ்தாய் வாழ்த்தை பற்றி இன்று ஜூலி பேசியவுடன் தவறான புரிதல் என்பதை தாண்டி கிண்டல் செய்கிறார்கள்.. உண்மையில் மனோன்மணியனார் எழுதிய பாடலிலிருந்து கலைஞர் சிலவற்றை மட்டுமே எடுத்து தமிழ்தாய் வாழ்த்தாக்கினார். அதற்கிசை அமைத்த எம்.எஸ்.வி. அவர்களை நினைவு கூறுவது நமது நன்றிகடன் ..
..
//ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் ..
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே//.. என நீளும்
தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலை எழுதியவர் மனோன்மணியம் பெ. சுந்தரனார் அவர்கள்..
தாய்மொழியின் வாழ்த்தில் மற்றொரு மொழியின் அழிவை குறிப்பிடுவது நாகரீகமல்ல என கருதி
#ஆரியம்போல்_உலகவழக்கிழந்த என்ற வரியை நீக்கியவர் கலைஞர் அவர்கள்..
..
முழுபாடலும் இதுதான்..
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"
..
அதில் கூட
திராவிட மொழிகளை குறிப்பிட்டு ..
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்..
என்றுதான் பாடினார்..
#மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment