Tuesday, July 4, 2017

பேரறிவு

#பேரறிவாளன்.. நீண்டநாட்கள் சிறையில் தன் இளமையையெல்லாம் கழித்து இன்றும் செய்வதறியாது சிறையில் வாழ்கிறார்.. நீண்ட விளக்கங்களோடு அணுகவேண்டியிருக்கிறது.. முதலில் தப்பு செய்ததாகவே ஒப்புகொள்ளவில்லை என்பதும் அதை தொடர்ந்து ராஜீவ் கொலையை நியாயப்படுத்தி பொதுவெளியில் விவாதிப்பதும்.. வழக்கை தீர்க்கவிடாமல் செய்தது.. இன்னும் சொல்லபோனால் கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவை கடைசிவரை நம்பி இன்று வேறுவழியில்லை என்கிற போது அந்த தாய் நிலைகுலைந்து நிற்கிறார்.. .. தமிழகத்தின் தமிழீழம் பேசும் அமைப்புகள் ராஜீவ் கொலையை வைத்து அரசியல் செய்தார்களே தவிர இன்னும் சொல்லபோனால் அதை திமுகவிற்கு எதிர்ப்பாக காட்ட நினைத்தார்களே தவிர சமயோசித புத்தியை கையாளவில்லை.. இலை மலர்ந்தால் ஈழம் மலருமென்று சொல்லி ..ஜெயலலிதாவை அறியணையேற்ற பகிரங்கமாகவே பாடுபட்டதன் விளைவு.. திமுக தொடர்ந்து ஆட்சி செலுத்த முடியாததால் பின்நோக்கி செல்கிற அவலம் .. நளினின் தண்டனையை ஆயுளாக மாற்றியபோது கலைஞர் கையாண்ட விதம் மிகவும் பக்குவபட்ட சரியான சூழலை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட அமைதிகாக்கிற சூழலை உண்டாக்கியது.. அதை யுக்தியை கையாண்டிருக்கவேண்டும் அதற்கான அவகாசமே தராமல் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தியதும் பின் தொடர்ந்து திமுகவை ஈழவிடயத்தில் குற்றவாளியாக சித்தரிக்க கடும் முயற்சி கொண்டதும் அதை ஜெயலலிதா தனக்கு சாதகமாக்கியதும் நடந்ததே தவிர.. கண்ணீரோடு அற்பதம்மாள் சந்தித்தெல்லாம் வாக்காக மாறியதே தவிர வேறெந்த பலனுமில்லை.. .. இந்திய பிரதமரை கொன்ற வழக்கென்பதை மறந்து தொடர்ந்து சோனியாவையும் காங்கிரஸையும் சீண்டி தங்கள் வயிறுகளை வளர்த்துக்கொண்டார்களே தவிர காரியமாய் ஏதேனும் சாதிக்க முடிந்ததா இந்த தமிழீழம் போராளிகளிடம்.. காரணம் எளிது முன்பே சொன்னதுதான் தமிழீழத் தலைவர் பிரபாகரன் ராஜீவ் கொலை சம்பவத்தை துன்பயியல் சம்பவம் என்றதும்... புலிகள் அமைப்பு மீதான பார்வை உறுதியானது அதுமட்டுமல்லாமல் திட்டமிட்ட கொலையாகவே பார்க்க/ பேசபட்டது.. இதுவரை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சிலர் நம்பிக்கொண்டிருப்பதால் .. பேரறிவாளனுக்கு தொடர்பில்லையென விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை.. தொடர்ந்து மவுனம் சாதிப்பது கூட ஒருவகையில் இந்தவழக்கிற்கு இடைஞ்சலையே தந்திருக்கிறது.. .. இனி.. மனிதாபிமான அணுகுமுறை வேண்டும் ஆனால் அதற்கான சூழலை இந்த தமிழ் தேசியர்கள் உருவாக்குவதே இல்லை தொடர்ந்து காங்கிஸையும் அரசையும் விமர்சிப்பதால் அவர்களின் எதிர்காலத்திற்கு பலனளிக்காமே தவிர அது பேரறிவாளனுக்கு எந்தவிதத்திலும் உபயோகபடாது.. பிரபாகரன் தாயார் சென்னை வருகிறாரென்றவுடன் விமான நிலையம் நோக்கி படையெடுத்து அரசியல் செய்ய நினைத்த உளுத்துப்போன நெடுமரங்களால் சங்கடமே வந்தது..முன் கூட்டி தகவல் தராமல் அரசியல் லாபத்தை கணக்கில் கொண்டதால் இழப்பு வந்தது.. இந்த பேரறிவாளன் விடயத்திலும் தமிழ்தேசியம் பேசுபவர்களால் துரும்பைகூட அசைக்கமுடியாது.. ஆனால் அமைதி காப்பார்களே ஆனால் யாரை சந்தித்தால் சரியான தீர்வு கிடைக்குமென ஆய்ந்து அதன் வழியில் பயணப்படவேண்டும்.. அதுவரை நெடுமரங்களும் .. பிஞ்சுகளும் வாய்மூடி இருக்கவும்.. .. இங்கே ஒன்றை குறிப்பிடவேண்டும் ராஜீவ் கொலையுண்ட சமயத்தில் வழக்கை நடத்த கூட யாரும் முன்வராத நிலையில் அப்போது நெடுமாறன் எல்லாம் வாயை பொத்திக்கொண்டிருந்தபோது திராவிட கழகம் தான் வழக்கறிஞர்களை நியமித்தது.. கலைஞரை சந்தித்து துரைசாமி நளினிக்காக வாதாட போவதாக சொன்னபோதும்.. திமுக மீதான மக்களின் புரிதல் இல்லாத கோவத்தை கூட பொருட்படுத்தாமல் புன்னகையோடு அனுமதி தந்தவர் கலைஞர்.. இப்போது கூட திமுகதான் கவனஈர்ப்பு தீர்மானத்தை சபையில் கொண்டுவந்திருக்கிறது .. .. 2013 ல் பேரறிவாளன் எழுதிய கவிதை எழுத்துப்பிழையோடு இருந்தது.. இன்னமும் வாழ்வில் பிழையோடே கழிக்கவேண்டியிருக்கிறது புனைவு எனினும் இன்னமும் தெளிவில்லை.. புனைவுகள் புரட்டபடாமலேயே இருக்கிறது .. நிச்சயமாக விடுவிக்கபடவேண்டியவர் பேரறிவாளன்.. .. #அநீதி.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment