Thursday, July 13, 2017
சசிகலா ராஜஉபச்சாரம்
சகலவசதியுடன் சசிகலா..
சிறைத்துறையின் 8 விதிகள் மீறப்பட்டு , சசிகலாவுக்கு ஏதுவான விஷயங்கள் செய்து தரப்பட்டுள்ளன
சிகலாவுக்கென தனி சமையல் அறை, சமையல்காரியாக ஒரு கைதி என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
சிறைததுறை அதிகாரி சசிகலாவிடமிருந்து 8 கோடி லஞ்சம் பெற்று இதுபோன்ற அத்தனை சலுகைகளையும் செய்துள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா குற்றச்சாட்டு..
..
ஏன் சிறைக்கு சென்று ஆய்வு நடத்தினீர்களென சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாரயணன் கேள்வி பதில் அளித்தவர் எனக்கு ஆய்வு செய்ய அதிகாரமிருக்கிறது.. அதோடு மிகப்பெரியளவில் (லஞ்சம்) கையூட்டு பெற்றுக்கொண்டு உயர்அதிகாரிகளே வசதியை செய்துகொடுக்க உத்திரவிட்டிருப்பதும் ₹8கோடி வரை பணம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது..
..
ஏதோ இன்றைக்குதான் சிறை அதிகாரிகள் பணத்திற்கு ஆசைப்பட்டு செய்வதைபோல ஊடகங்கள் வரிந்துகட்டி செய்திவெளியிட்டிருக்கிறது. இந்திய சிறைச்சாலைகள் ஏழைகளுக்குதான் கடினமே தவிர வசதிப்படைத்தவர்களுக்கு சொர்க்கம் ..
சிறையில் இருப்பவர்களின் அதிகாரயுடையோராய் இருந்தால் எல்லாம் கிடைக்குமென்பது அரசாள்வோருக்கு தெரியும்.
ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்தபோது எப்படியெல்லாம் சட்டமும் சிறையும் வளைந்து கொடுத்தது..
அப்போது யாரும் கேள்வி கேட்கவில்லையே..
உயர் #நீதி_பீடங்கள் இறங்கி வந்து யாருக்கேனும் இவ்வளவு அவசரத்தில் (ஜாமீன்)பிணை வழங்கியதுண்டா.. குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வழக்கை முடிக்கவேண்டுமென உத்தரவிட்டதுண்டா.. கணிதப்பிழையை காட்டி விடுதலை செய்தததுண்டா .. மேல்முறையீட்டு விசாரணை முடிந்தும் தீர்ப்பை வழக்கின் பிரதானவர் சாகும்வரை தள்ளிவைத்ததுண்டா .. இறுதிதீர்ப்பில் இடையில் தந்த கணிதமேதையின் தீர்ப்பை ரத்து செய்ததே ஏன் அவரை தண்டிக்கவில்லை குறைந்தபட்சம் கண்டிக்கவில்லை பணம் பெற்றுக்கொண்டு தீர்ப்பை வழங்கியதாக சொல்லப்பட்டதை ஏன் விசாரிக்கவில்லை..
நீதிபதி கர்ணன் நீதிகள் விற்கபடுகின்றன என்ற போது துரத்திதுரத்தி கைதுவரை வந்தவர்கள் ஏன் தவறான தீர்ப்பை தந்தவரை கேள்விகேட்கவில்லை..
பணம் பணம் பணமிருந்தால் அதைவிட
உயர்ந்தவராக..? இருந்தால் சட்டம் சிறைச்சாலை நிர்வாகம் அரசு எல்லாம் வளையும்..
..
ஆனால்
சசிகலா முதல்வராக வர நினைத்தும் செத்துகிடந்தவனெல்லாம் கூக்குரல் போடவில்லையா.. ஆஹா கொள்ளைக்காரி மாபியா ஆட்சிக்கு வரலாமா என்னாவது இறையாண்மை என கூச்சலிட்ட கூட்டம் என்றைக்காவது ஜெயலலிதா தான் முதல் குற்றவாளியென பகிரங்கமாக கிரிமினல் நம்பர்1 என சொன்னதுண்டா.. ஆனால் சசிகலாவிற்காக கொதித்தெழுவார்கள்..
..
சசிகலா என்றில்லை பணம் படைத்தவர்கள் சிறையில் சொகுசு வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்... மறுக்கமுடியாது அது இந்திய அதிகாரவரம்பில் புரையோடி போயிருக்கிற விடயம் காசு கொடுத்தால் எதுவும் நடக்கும்.. குற்றவாளியென அறிவித்த ஜெயலலிதாவையே மத்திய அமைச்சரே சந்தித்து பேசியதை விட இதொன்றும் பெரியவிடயமல்ல.. பணம் அல்லது ஆதரவு என்கிற லஞ்சம் இதுதானே ஜெயலலிதாவை சந்திக்கவைத்தது.. இதெல்லாம் அத்துமீறல் அயோக்கியத்தனமென சொல்லாமல் மௌனம் காத்த நாம் சசிகலாவிற்கு வரம்புகள் மீறப்பட்டவுடன் பொங்கியெழுகிறோம்..
..
சிறை..அரசாங்கம் அதிகாரிகள் என எல்லாவற்றையும் தன் அதிகாரத்தால் வழிநடத்த முடியகிற உச்சநீதிமன்றத்தையே சிலரால் வழிநடத்தமுடியுமென்கிற போது..
இவையெல்லாம் நகைப்பிற்குரியது
..
#பணம்_பத்துஅல்ல_பதினொன்றும்செய்யும்...
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment